வியாழன், 10 செப்டம்பர், 2009

சிங்கப்பூரில் பாரதி விழா 13-9-2009

சிங்கப்பூரில் பாரதி விழா 13-9-2009

பாரதி 127
(இலக்கிய விழா)
பேரன்புடையீர் வணக்கம்!
எதிர்வரும் 2009 செப்டம்பர் 13 ஆம் நாள் மகாகவி பாரதியின் நினைவு நாளினை நினைவு கூர்ந்திட இலக்கியவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்விழா பிற்பகல் நேர விழாவாகத் துவங்கி மாலையில் இனிதே நிறைவுறும். விழாவில் சிங்கையின் கவிஞர்கள் அறிஞர் பெருமக்கள் பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும் தமிழக அறிஞர்கள் விழா தொடக்க, நிறைவுப் பேருரையாற்றவும் இருக்கிறார்கள். நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு மாபெரும் கவிஞரின் நினைவினைப் போற்றி அவர்தம் கவி வரிகளைச் சிந்திப்போம் வாரீரென அன்புடன் அழைக்கின்றோம்.
-இலக்கிய ஆர்வலர்கள், சிங்கப்பூர்



நாள் : 13 செப்டம்பர் 2009
நேரம் : பிற்பகல் 2.30 மணியளவில்
நிகழிடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
(மாநாட்டு அறை)
450, விக்டோரியா சாலை
சிங்கப்பூர்

தமிழ்ச்சுவைப் பருக! தவறாது வருக!!

நிகழ்நிரல்

தமிழ் வாழ்த்து : திருமதி கலையரசி செந்தில்குமார்

நாட்டியம் : செல்வி மீனலோச்சனி
(மெக்பர்சன் உயர்நிலைப் பள்ளி)

மலரஞ்சலி : ஆர்வலர்கள் / அறிஞர் பெருமக்கள்

வரவேற்புரை : பரவை செந்தில்குமார்

தலைமை : பேரா. முனைவர் சுப திண்ணப்பனார்

முன்னிலை : ஆசியான் கவிஞர் க து மு இக்பால்
தொடக்கவுரைஞர் : பேரா. முனைவர் அரங்க மு முருகையன்
சமுதாயக் கல்லூரி, புதுவைப் பல்கலைக் கழகம்
“நாட்டுப்புறப்பாடல்களே பாரதியின் பாடல்களுக்கு ஆதாரம்”

தொடக்கவுரைஞர் அறிமுகம் : கவிஞர் சு உஷா

"பாரதியை நினைப்போம்"

பாரதியின் மொழி : கவிமாமணி மா அன்பழகன்

பாரதியின் பெண் : திரு ஜோதி மாணிக்கவாசகம்

பாரதியின் ஊடகம் : திரு செ பா பன்னீர்செல்வம்

"கவியரங்கம்"

"யாதுமாகி நின்றாய் பாரதி”

தலைமை : 'தமிழவேள் கொண்டான்' கவிஞரேறு அமலதாசன்

பாரதி என் தோழன் : கவிதைநதி ந.வீ.விசயபாரதி

பாரதி என் குழந்தை : கவிஞர் இன்பா

பாரதி என் தெய்வம் : கவிஞர் வேள்பாரி

பாரதி என் ஆசான் : கவிஞர் பாலு மணிமாறன்

பாரதி என் காதலி : கவிஞர் சாந்தி உடையப்பன்

பாரதி என் சேவகன் : கவிஞர். இராம வைரவன்

நடனம் : ஈஸ்ட் வீயு உயர்நிலைப் பள்ளி மாணவியர்



"வழக்காடு மன்றம்"

"மகாகவி பாரதியின் கனவுகள் இன்றளவும் நனவாகவில்லை"

நடுவர் : இலக்கியச் செம்மல் பேரா. முனைவர் நா.இளங்கோ

வழக்குத் தொடுப்பவர்: சிந்தனைச் செல்வர் ஸ்டாலின் போஸ்

வழக்கு மறுப்பவர் : சொல்லின் செல்வர் முனைவர் இரத்தின வேங்கடேசன்

"நிறைவுப்பேருரை"

தலைமை : சொற்சித்தர் வே புருஷோத்தமன்

நிறைவுப் பேருரைஞர் : பேரா.முனைவர் நா.இளங்கோ
இணைப்பேராசிரியர், பட்டமேற்படிப்பு மையம்,
புதுவை

“பாட்டுக்கொருபுலவன் பாரதி”

நிறைவுப்பேருரைஞர் அறிமுகம் : கவிஞர் இறை மதியழகன்

நிகழ்ச்சி நெறியாளர் : கவிஞர் கோவிந்தராசு

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...