வாழ்தல் பொருட்டு-
மலையருவி
பூமிப் பந்தின்
கடைசி வரவு
மனிதர்கள்
பல்லூழிகளாய்ப் பரிணாமம்
புல்லாய்ப் பூண்டாய்
செடியாய் மரமாய்
பறவையாய் விலங்காய்
மனிதர்களாய்
பூமிப் பந்தின்
கடைசி வரவு
மனிதர்கள்
மனிதர்கள் வாழ
மற்றவை மடிவதா?
இயற்கையின் கூண்டில்
மனிதன் குற்றவாளியாய்
மனிதன் வாழ பூமி வேண்டும்
பூமி வாழ மனிதன் தேவையில்லை
வாழ்தல் பொருட்டு…?
மலையருவி
பூமிப் பந்தின்
கடைசி வரவு
மனிதர்கள்
பல்லூழிகளாய்ப் பரிணாமம்
புல்லாய்ப் பூண்டாய்
செடியாய் மரமாய்
பறவையாய் விலங்காய்
மனிதர்களாய்
பூமிப் பந்தின்
கடைசி வரவு
மனிதர்கள்
மனிதர்கள் வாழ
மற்றவை மடிவதா?
இயற்கையின் கூண்டில்
மனிதன் குற்றவாளியாய்
மனிதன் வாழ பூமி வேண்டும்
பூமி வாழ மனிதன் தேவையில்லை
வாழ்தல் பொருட்டு…?