போலி வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போலி வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 செப்டம்பர், 2008

திருமண வரவேற்பு

திருமண வரவேற்பு

மலையருவி

நண்பர்கள் உறவினர்
அறிமுக நபர்கள்
கூட்டமாய் கும்பலாய்
குழுமிக் கிடந்தனர்

சென்ட் நெடி
வாடத்தொடுங்கிய
பூக்களின் வாசம்
வியர்வை நாற்றம்
எல்லாம் கலந்த ஏதோ
மூக்கை முட்டி
முண்டியடித்தது

நட்புமின்றி பகையுமின்றி
நளினம் கலந்த
முகவிசாரிப்புகள்

பரிசுப் பொட்டலம்
பணக்கவர் ஏந்திய
ஒப்பனை கலந்த
பகட்டு முகங்கள்

பந்தியில் அமர்ந்து
வீசிய உணவை
சீய்த்துக் களைத்து
பசித்த வயிறோடு
விருந்தும் உபசரிப்பும்

மெல்லிசை என்னும் பேரால்
வல்லிசை நரசிம்மத்தால்
கிழிக்கப்பட்ட காதுகளோடு!
திருமண வரவேற்பு

வாழ்க மணமக்கள்!

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...