திங்கள், 20 மே, 2019

மகாத்மா! மன்னிப்பாயா?

-முனைவர் நா.இளங்கோ

எத்தனை பெரிய அரங்கம்
வரலாறு காணாத நிகழ்ச்சி

இன்றைய சூழலில்
தேவைப்படும் தலைவன் யார்?
காந்தியா! கோட்சேவா!

காந்தியின் மத நல்இணக்கம்
இந்து முஸ்லீம் ஒற்றுமை
அகிம்சை சகிப்புணர்வு

கோட்சேவின் தேசபக்தி
அகண்ட இந்துதேசக் கனவு
இரத்தக் களரி பலி தியாகம்

எது இன்றைய தேவை?
யார் நமது தலைவன்?
காந்தியா! கோட்சேவா!

நிரம்பி வழிந்த அரங்கில்
நூற்று இருபதைந்து கோடிக்கும் மேலாக
இருசெவி திறந்து விழிக்கும்
இந்தியக் குடிமகன்கள்

காந்தி அணியில் மூவர்
கோட்சே அணிக்கு நால்வர்
நடுவர் எங்கே?
நடுவரும் கேட்சே அணியில்!

விவாத நிறைவில்
நடுவர்
தம் இருக்கைக்கு விரைந்து
நியாயத் தீர்ப்பு வழங்குவார்

நடுவர் தீர்ப்பே இறுதியானது
தீர்ப்பை விமர்சிப்பது
தேச விரோதம்!

விவாதம் முடிந்து
வீடு திரும்புகையில்
எல்லோரும்
தேச விரோதிகளாய்
கனத்த மௌனம் சுமந்து

மகாத்மா!
மன்னிப்பாயா?

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...