வெள்ளி, 22 நவம்பர், 2019

தொல்லியல் ஆய்வுப் பயணம் கொத்தமங்கலம்- (27-11-2018)

இன்றைய (27-11-2018) தொல்லியல் ஆய்வுப் பயணம் கொத்தமங்கலம் (விக்கிரவாண்டி அருகில்).
தவ்வை (மூதேவி), சதிக்கல் (நடுகல் வகை) தேடிய பயணம். 
நண்பர் கோ.செங்குட்டுவன், மகன் இ.மாறன், புகைப்படக் கலைஞர் ம.கிருஷ்ணா இவர்களோடு..
முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு
உடன் இ.மாறன் - கோ.செங்குட்டுவன்



இன்று 27-11-2018 நண்பர் விழுப்புரம் கோ.செங்குட்டவன், மகன் இ.மாறன் உடன்வர, பல்லவர்காலத் "தவ்வை -மூதேவி" சிற்பத்தைத் தேடி விக்கிரவாண்டி பேரணிக்கு அருகில் உள்ள செ.கொத்த மங்கலம் சென்றோம்.
கீழே படத்தில் உள்ள தெய்வம்தான் தமிழர்களின் தொன்மைப் பெண் தெய்வம் - தவ்வை. தவ்வைக்கு மூதேவி, சேட்டை, கேட்டை, மாமுகடி, ஜேஸ்டா தேவி எனப் பலபெயர்கள் உண்டு.
மூதேவி என்றால், மூத்த தேவி என்று பொருள். கொற்றவைக்கு அடுத்ததாகத் தமிழ் இலக்கியங்களில் அதிகமாகப் பேசப்படும் தொன்மைப் பெண் தெய்வம் மூதேவி - தவ்வையே.
கி.பி 13-ம் நூற்றாண்டு வரைத் தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு சிறப்பாக நடைபெற்று வந்துள்ளது. அவள் வளமை தெய்வம். இதுவரைக் கிடைத்த தவ்வைச் சிற்பங்கள் எல்லாம் செழித்த மார்புடனும், பருத்த வயிற்றுடனுமே காணப் படுகின்றன. அவள் வளமைத் தெய்வம் என்பதற்கு இதுவே சான்று.
தவ்வையின் கொடி காக்கை,, வாகனம் கழுதை. தவ்வையின் சிலைகளில் இருபுறமும் உடனிருப்போரை அவளது மகன் மாந்தன் மகள் மாந்தி என்று மக்கள் கருதுகின்றனர்.
பல்லவர் ஆட்சி செய்த 8ம் நூற்றாண்டு வரைத் தமிழர்களின் தாய்த் தெய்வமாக மூதேவி இருந்துள்ளார் என்றும். நந்திவர்ம பல்லவனுக்கு இவளே குலதெய்வம். என்றும் அறிகிறோம். பல்லவர் காலத்தைக் காட்டிலும் பிற்காலச் சோழர் காலத்தில் மூதேவி வழிபாடு சிறப்புற்றிருநததாகக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன..
முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

கொத்தமங்கலம் களஆய்வு -இ.மாறன் - கோ.செங்குட்டுவன்



செ.கொத்தமங்கலத்திற்கு "தவ்வை - மூதேவி" சிலையைத் தேடிச் சென்ற (27-11-2018) இடத்தில் எதிர்பாராமல் கிடைத்த அரிய வரலாற்றுப் புதையல், "சதிக்கல்" என்ற வகையைச் சேர்ந்த நடுகற்கள்.
போரில் வீரமரணம் எய்திய மறவர்களுக்கு‍ நடுகல் வைத்து‍ வணங்கும் வழக்கம் தமிழகத்தில் சங்ககாலத்திற்கு‍ முன்பிருந்தே இருந்துவருகிறது. அத்தகு நடுகற்களில் பல வகைகள் உண்டு.1. தொரு கல், 2. வேடியப்பன் கல், 3. நவகண்டக் கல், 4. சதிக்கல் முதலான பலவகை நடுகற்களில் சதிக்கல்லும் ஒன்று.
"சதிக்கல்" என்பது ஆநிரை மீட்டல் முதலான போர்களில் வீரமரணம் அடைந்த வீரனின் மனைவியும் அவ்வீரனோடு உடன்கட்டை ஏறி உயிரை மாய்ந்துக் கொண்டதன் அடையாளமாக நாட்டப்படும் கல்.
இவ்வகை சதிக்கல்லில் வீரன் மற்றும் மனைவி இருவரின் உருவமும் செதுக்கப்படும்.
கொத்தமங்கலத்தில் கிடைத்த இந்த சதிக்கற்கள் நாயக்கர் காலத்ததாய் {14 ஆம் நூற்றாண்டு} இருக்கலாம் என்கிறார் கோ.செங்குட்டுவன்.
பல சதிக்கற்களில் கல்வெட்டுகளும் இடம்பெறுவதுண்டு.
இங்கே இடம்பெற்றுள்ள கொத்தமங்கலம் சதிக்கற்களில் ஒருகையில் வாளும் மறு கையில் கேடயமும் ஏந்திய வீரனும் உடன் அவன் மனைவியும் இடம் பெற்றுள்ளனர்

கொத்தமங்கலம் சங்க காலத்திற்கு முந்தைய பானையோடுகள்
விழுப்புரம் கோ.செங்குட்டுவன் பதிவிலிருந்து:
 “இத்தனை ஆயிரம் இலட்சம் பானை ஓடுகள்! இப்படி ஒரே இடத்தில் நான் பார்த்ததில்லை” என வியக்கிறார், புதுவை தாகூர் கலைக்கல்லூரி முதல்வர், பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள்.
செ.கொத்தமங்கலம், பானை ஓடுகளின் குவியல் தான் அவரை இப்படி வியக்க வைத்துள்ளது.
புதுவை மாநிலம் அரிக்கமேடும் நம்முடைய கொத்தமங்கலமும் சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கிராமங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரிக்கமேட்டில் பழங்காலப் பானை ஓடுகளைத் தேடித் தேடி தான் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால், விழுப்புரம் அருகே உள்ள செ.கொத்தமங்கலத்தில் நிலைமை அப்படி இல்லை.
மேற்பரப்பிலேயே ஓடுகள், அதுவும் குவியல் குவியலாக.
இது, அனைவரையும் அதிசயிக்க வைக்கிறது.
இதோ, குறியீட்டுடன் கூடிய பானை ஓடு ஒன்று, பேராசிரியர் கையில் கிடைத்து விட்டது. அவருக்கு மகிழ்ச்சி.
“இந்த ஓடுகள் எப்படியும் 2000 ஆண்டுகளுக்கு குறைவானவை அல்ல” என்று சொல்லும் பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள், “தொல்லியல்துறை, புவியியல் துறை ஆகியவற்றின் வல்லுனர்கள் இப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த ஆய்வின் முடிவுகள், நிச்சயம் தமிழக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார்.
உண்மைதான். பேராசிரியர் அவர்களின் கருத்தை நாமும் வழிமொழிகிறோம்…
(இணைப்பில்: பேராசிரியர் Ilango Nagamuthu அவரது மகனார் Maran Ilango ஆகியோருடன், கடந்த 27ஆம் தேதி, செ.கொத்தமங்கலத்தில் கள ஆய்வு.
முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

முனைவர் நா.இளங்கோ - கொத்தமங்கலம் களஆய்வு

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...