வெள்ளி, 15 அக்டோபர், 2021

கங்கை கொண்ட சோழபுரம் - சோழர் காலத்துப் பெரிய யானை.

 

கங்கை கொண்ட சோழபுரம்

சோழர் காலத்துப் பெரிய யானை.

முனைவர் நா.இளங்கோ





கங்கை கொண்ட சோழபுரம் வடதிசை எல்லையில் சாளுக்கிய துர்க்கை நிறுவப்பட்ட இடம் சலுப்பை. இவ்வூர் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. துர்க்கை நிறுவப்பட்ட இடம் "துரவு மேல் அழகர்" (துரவு=கிணறு) ஆலயமாகும். சாளுக்கியப் படைகளைச் சோழப்படைகள் துவம்சம் செய்த இடம் என்பதால் இதற்கு “சாளுக்கிய குல நாசனி “ என்பது பழைய பெயர். அப்பெயரே காலப்போக்கில் மருவி சலுப்பை என்றாகி விட்டது.

அழகர் கோவிலின் எதிரில் காணப்படும் சோழர் காலத்து யானை சுதை சிற்பம் ஆசியாவிலேயே உயரமானது என்ற பெருமைக்கு உரியது. இந்த யானை சிலை 60 அடி உயரம், 33 அடி நீளம், 12 அடி அகலம் உடையது.

இந்த யானை, சோழர்காலச் சுதைச் சிற்பமாகச் சுட்டச் செங்கற்கள் மீது வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்பு கலவைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த யானைக்கு ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு, திருடன் ஒருவன் மரத்திலிருந்து பலா காய்களைப் பறித்துக் கொண்டு ஓட, காவல் நாய் அவனை விரட்டுகின்றது. அதற்குள் அழகர்சாமி, யானை உருவில் வந்து அந்தத் திருடனை துதிக்கையால் பிடிப்பது போன்று இச்சிலை அமைக்கப் பட்டுள்ளது.

இச்சிலை சோழர் காலத்திய சிற்பம் என்றாலும், 16 - 17ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் காலத்தில் அப்போதைய வடிவமைப்பில் புதுப்பிக்கப் பட்டுள்ளது.

சென்ற 11.12.2020 அன்று இச்சிலைப் பாதுகாக்கப்பட்ட பழமையான சின்னம் எனத் தமிழகத் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டது.

(தகவல் - இரா.கோமகன், கோ.சுகுமாரன்)

தற்போது யானையைச் சுற்றி, சாரம் அமைத்து செப்பனிடும் பணி நடைபெறுகிறது.

படங்கள் உதவி: இணையம்.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...