வெள்ளி, 15 அக்டோபர், 2021

மாமன்னன் இராசேந்திர சோழன் அரண்மனை - அகழ்வாராய்ச்சி

 

மாமன்னன் இராசேந்திர சோழன் அரண்மனை மாளிகைமேட்டில் அகழ்வாராய்ச்சி

முனைவர் நா.இளங்கோ



கங்கை கொண்ட சோழபுரம் தமிழ் மாமன்னன் இராசேந்திர சோழனின் ஆட்சியில் தலைநகராக உருவாக்கப்பட்டு, தொடர்ச்சியாக 265 ஆண்டுகள் தலைநகராக விளங்கிய பெருமையுடையது.

இராசேந்திர சோழனின் அரண்மனை இருந்த மாளிகைமேட்டில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் தற்போழுது அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.

இராசேந்திர சோழன் அரண்மனை கங்கை கொண்ட சோழீச்சுவரம் கோயிலை உள்ளடக்கிய 1000 ஏக்கர் நிலப்பரப்பு உடையது என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் தோழர் பொறிஞர் இரா.கோமகன்.

2021 ஜனவரி திங்கள் முதல் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சியில் அரண்மனைக் கட்டிட அமைப்புகள் பெரிய அளவில் கண்டறியப்பட்டுள்ளன.

அரண்மனை செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. மேற்கூரை தற்போதுள்ளது போல் தளங்கள் (Concrete) அமைக்கப்பட்டு, ஓடுகள் (Tiles) பதிக்கப்பட்டுள்ளன. இவை பல அடுக்குகள் கொண்ட தளங்களாக உள்ளன. இத்தளங்களைக் கருங்கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன. செங்கற் சுவர்கள் 4.5 அடி அகலம் கொண்டவை.

அகழ்வாராய்ச்சியில் விலங்குகளின் உருவங்கள் பொறிக்கப்பட்ட எலும்பிலான பொருட்கள், யானைத் தந்தத்தில் செதுக்கப்பட்ட பொருட்கள், சங்கு வளையல் துண்டுகள், கற்களாலான பொருட்கள் எனப் பலவகை அரிய பொருட்கள் கிடைத்துள்ளன.

மேலும், சீனாவில் தயாரிக்கப்பட்ட பச்சை நிறமேற்றப்பட்ட பீங்கான் பொருட்கள், பீங்கான் ஒட்டுச்சில் போன்றவையும் கிடைத்துள்ளன. இவை அனைத்தும் 11, 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்குக் கிடைத்துள்ள பொருட்கள் மூலம் சீனாவிற்கும் சோழ ஆட்சிக்குமிடையே வணிக உறவு இருந்தமை உறுதியாகியுள்ளது.

அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரி எஸ்.நந்தகுமார் மேற்பார்வையில் 30 - 40 பேர் கொண்ட குழுவினர் செய்து வருகின்றனர்.

நேற்று (07.08.2021) முழுவதும் எங்களோடு இருந்து அரிய பல வரலாற்றுத் தொல்லியல் செய்திகளை எடுத்துக் கூறி எங்களது பயணத்தை முழுமையடையச் செய்த தோழர் பொறிஞர் இரா.கோமகன் அவர்களுக்கு நன்றி.





கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...