புதன், 12 செப்டம்பர், 2007

நூல் மதிப்புரை - பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ.


மொழியும் அதிகாரமும்

முனைவர்.எல். இராமமூர்த்தி

முனைவர் எல். இராமமூர்த்தி அவர்களின் ஷமொழியும் அதிகாரமும் என்ற இந்நூல் தமிழ்மொழி வளர்ச்சி பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கிய ஆய்வு நூலாகும். மொழியியல் வல்லுநரான இராமமூர்த்தி தமிழ்மொழியின் ஆட்சி, வளர்ச்சி குறித்த உண்மையான அக்கறையோடு இந்நூலைப் படைத்திருக்கின்றார். சமுதாய மொழியியல், மொழித் திட்டமிடுதல், மொழி வளர்ச்சி போன்ற பயனாக்க மொழியியல் துறைகளில் கல்வி, ஆய்வு இருநிலைகளிலும் தொடர்ந்து பணியாற்றிவரும் இந்நூலாசிரியர் தம் ஆழ்ந்த அனுபவங்களின் பிழிவாக இந்நூற் கட்டுரைகளை உருவாக்கியுள்ளார்.மொழியின் வாழ்வும் வரலாறும் சமுதாயத்தோடும் அதன் அன்றாட இயக்கத்தோடும் பின்னிப் பிணைந்தவை. ஒரு மொழியின் வளர்ச்சிக்கு அந்த மொழியின் வளம் மட்டுமில்லாமல் அந்த மொழி பேசும் இனத்தின் ஆட்சியும் அதிகாரமும் பெருந்துணை புரிகின்றன. அதிகாரம் படைத்த இனத்தின் /தேசத்தின் மொழி காலப்போக்கில் தேசிய, உலக மொழி அந்தஸ்தைப் பெறுகின்றன. அதிகாரமற்ற தேசிய இனங்களின் மொழிகள் எத்துணை வளம் மிக்கதாயினும் தேக்கமடைகின்றன. இத்தகு புரிதல்களோடு மொழியியல் நோக்கில் மொழியின் அதிகாரம், அதிகார மொழி குறித்த பல்வேறு விவாதங்களை இந்நூல் முன்வைக்கிறது.ஷஷதமிழின் பண்டைய இலக்கியப் பெருமிதங்களும் எல்லாம் தமிழில் முடியும் என்ற சொல்லாடல்களும் மட்டும் தமிழ்க்கல்வி வளர்ச்சிக்கு உதவாது. பொருளாதார மேம்பாட்டை நோக்கிய தமிழ்க்கல்வி, அதை உருவாக்கக் கூடிய அரசியலே இதனைச் சாத்தியப்படுத்தும். மொழி பெயர்ப்புகளும், அகராதி உருவாக்கப் பணிகளும், தமிழ்க் கல்விக்கான கருவிநூல்கள் தயாரித்தலுமே தமிழை அதிகார மொழியாக்க உதவும். என்றும்,ஷஷநவீன சூழலில் தமிழ் அதிகார மொழியாவதற்கு அடிப்படையாக அமைவது தமிழ்க் கல்வி ஃதமிழ்வழிக் கல்வி மட்டுமே. இங்கே தமிழ்க்கல்வி என்பது ஆரம்பப் பாடம் முதல் ஆராய்ச்சி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவது என்பதாகக் கொள்ள வேண்டும். என்றும் தமிழை அதிகார மொழியாக்குவதற்கு உரிய பல்வேறு வழிமுறைகளை இந்நூலின் பல இடங்களிலும் சுட்டிக்காட்டும் நூலாசிரியர் ஆட்சித் தமிழ், கணினித் தமிழ் என்ற இரண்டு முக்கிய துறைகளில் ஏற்படும் மொழிப் புதுமையாக்கத்தால் தமிழ் சந்திக்கும் சிக்கல்களையும் கருத்தியல் நோக்கில் விரிவாக ஆராய்கின்றார்.
மொழியும் அதிகாரமும் என்ற முதல் இயல் மொழியில் அதிகாரம் செயல்படும் விதத்தை விளக்கி அதிகார மொழி, மொழி அதிகாரம், அதிகார மொழியாக்கம் என்ற மூன்று பகுதிகளாக விரிந்து செல்கிறது. மொழி வளர்ச்சியில் மொழி உணர்ச்சி முக்கிய பங்கு ஆற்றுவதால் இரண்டாம் இயல் ஷதமிழ் உணர்வும் தமிழ் வளர்ச்சியும் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.மொழியின் திட்டமிட்ட வளர்ச்சி என்பது மொழியின் பயன்பாட்டுத் தேவைக்கு ஏற்பச் செய்யப்படுவதால் அதைச் சமூகவியலார் நவீனமயமாக்கம் அல்லது புதுமையாக்கம் என்று அழைப்பார்கள். எனவே மூன்றாவது இயல் ஷதமிழும் நவீனப்படுத்தமும் என்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நவீனமயமாக்கம் என்பது ஒருவித அதிகாரப் பரவலாக்கம்தான். அந்த அதிகாரப் பரவலாக்கத்தின் ஒரு கூறு மொழித் தூய்மையாக்கம் எனவே நான்காவது இயலாகத் ஷதமிழ்த் தூய்மையாக்கம் அமைக்கப்பட்டுள்ளது.மொழி வளர்ச்சியில் புதுமையாக்கமும் தூய்மையாக்கமும் முரண்நிலையில் செயல்படுவன. ஆயினும் புதுமையாக்கத்திற்குக் கடிவாளம் போலத் தூய்மையாக்கம் செயல்படும். எனவே ஐந்தாவது இயல் ஷதமிழ் வளர்ச்சி: தூய்மை -புதுமையாக்கம் -அதிகாரம் என அமைக்கப்பட்டுள்ளது. புதுமையாக்கத்திற்குப் பின் தேவைப்படுவது தரப்படுத்துதல் எனவே அடுத்த ஆறாவது இயல் ஷதமிழும் தரமொழிக் கோட்பாடும். என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியல் தர மொழியின் பண்புகள், செயல்கள் அகியவற்றைக் கோட்பாட்டு நிலையில் முதலில் விளக்கித் தமிழின் தனித்தன்மையைச் சுட்டிக்காட்டி ஆட்சித் தமிழ், அறிவியல் தமிழ், தகவல் தொடர்புத் தமிழ் அகிய துறைகளில் காணப்படும் பிரச்சனைகளையும் விளக்குகிறது. ஷதமிழ் வளர்ச்சியும் கணினியும் என்ற ஏழாவது இயலும் ஷதமிழ் கற்றலும் கணினியின் பல்லூடகமும் என்ற எட்டாவது இயலும் கணினி, மல்டிமீடியா ஊடகங்களில் தமிழின் பயன்பாடு மற்றும் தமிழைக் கையாளுவதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேசுகின்றன. நூலின் இறுதி இயலாம் ஒன்பதாம் இயல் ஷதமிழ் வளர்ச்சியும் முரண்பாடுகளும் என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வியல் தமிழ்வளர்ச்சியில் காணப்படும் ஒட்டுமொத்த கருத்தியல் முரண்பாடுகளைத் தொகுத்தும் வகுத்தும் விவாதிக்கின்றது. தமிழ் வளர்ச்சிக்கு முரண்களே அரண்களாக இருந்து துணைபுரிகின்றன என்ற ஆசிரியரின் முடிபு அவரின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துகின்றது.
மொழியும் அதிகாரமும் என்ற இந்நூலைக் குறித்து நூலின் ஆசிரியர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்கள் தம் முன்னுரையில்,இந்நூல் மொழி வளர்ச்சிக்கான அடிப்படைக் கோட்பாடுகளையும், மொழி உணர்வு, சமூகக் கருத்தியல்கள், அக்கருத்தியல்களினால் மொழியில் ஏற்படும் மாற்றங்கள், மொழியின் தன்மைகள் ஆகியவற்றை விளக்குகிறது. இவை பற்றிய புரிதல்கள்தான் தமிழ்க் கல்விஃ தமிழ்வழிக் கல்விக்கான வளர்ச்சியைத் தடையின்றிச் செயல்படுத்த உதவும். என்கிறார். தமிழ்வழிக் கல்வியே ஆசிரியரின் இலட்சியமாய் இருப்பதை இந்த மேற்கோளால் நாம் உணரமுடியும்.மொழிகுறித்த சரியான புரிதல்களோடு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் தமிழ், செம்மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில் வெளிவந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. இந்நூலில் ஆசிரியர், புறநிலையில் நின்று கருத்துக்களை விவாதிக்கும் முறையும் மொழிநடையும் அறிவியல் ப+ர்வமானவை. உணர்ச்சி ப+ர்வமான கருத்துக்களை அறிவு ப+ர்வமாக விவாதிக்கும் நூல் என்று செ.வை.சண்முகம் தம் அணிந்துரையில் இந்நூல் பற்றிக் குறிப்பிட்டிருப்பது சாலப் பொருத்தமே.

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...