வெள்ளி, 14 செப்டம்பர், 2007

விமர்சனம்- மலையருவி கவிதை (நா.இளங்கோ)

விமர்சனம்

நக்கீரன்
பொற்றாமரைக் குளத்தில்
முங்கி எழுந்தான்,
மேனி குளிர்ந்தது

சிவபெருமான்நெற்றிக் கண்ணின்
நெருப்பு மட்டும்
அடிக்கடி
கனவில்லாமலே வந்து போனது

பாண்டிய மன்னன்
அந்தப்புரத்தில்
மகாராணியின் கூந்தல் படுக்கையில்
அயர்ந்திருந்தான்

சங்கப் பலகை
ஈ மொய்த்திருந்தது

தருமியின்
பல்லக்கு பவனி
ஊரில்
புதுப்பேச்சாய் இருந்தது

நக்கிரனோ
காய்ச்சலும் குளிரும்
மாறிமாறி வந்ததால்
படுக்கையில்
நொந்து நூலானான்.

-மலையருவி

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...