திங்கள், 9 டிசம்பர், 2019

பெருமுக்கல் தொல்லியல் வரலாற்றியல் பயணம். 01-09-2018

புதுச்சேரி, கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம்
ஒருங்கிணைத்த  பெருமுக்கல் தொல்லியல் வரலாற்றியல் பயணம்.
(01-09-2018)


பெருமுக்கல் வரலாறு குறித்த விளக்கவுரை முனைவர் நா.இளங்கோ

பெருமுக்கல் மலை: திண்டிவனத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் மரக்காணம் செல்லும் சாலையில் உள்ளது.

பெருமுக்கல் மலை


பெருமுக்கல் பாறைக் கற்குறியீட்டு ஓவியங்கள் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய ஹீரோக்ளிபிக் HIEROGLYPHIC வகையைச் சார்ந்தவை என்றும் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய கீறல் ஓவியங்கள் PETRO GLYPHS வகையைச் சார்ந்தவை என்றும் இருவேறு கருத்துக்கள் உள்ளன. இக்குறியீடுகள் பெருமுக்கல் மலையிலுள்ள சீதைக் குகை என்று ஊர்மக்களால் அழைக்கப்படும் குகையில் இடம்பெற்றுள்ளன.

4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கீறல் ஓவியக் களஆய்வில் முனைவர் நா.இளங்கோ


பெருமுக்கல் கீறல் ஓவியங்கள்
பெருமுக்கல் மலையிலுள்ள கோயில் முக்தியாலீசுவர் திருக்கோயில். இத்திருக்கோயிலின் சுற்றுச்சுவர்களில் இடம்பெற்றுள்ள 60 கல்வெட்டுகள் பதிவுசெய்து வெளியிடப்பட்டுள்ளன. இக் கல்வெட்டுகள் மூலம் பிற்காலச் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் திருக்கோயில் கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகின்றது. முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள உதவும் அரிய ஆவணங்களாக இவை உள்ளன.
இக்கோயிலின் பழமையான கல்வெட்டு உத்தமசோழன் காலத்துக் கல்வெட்டாகும்.
அடுத்து முதலாம் குலோத்துங்க சோழன் விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. விக்கிரம சோழ மன்னனின் காலத்தில் தான் (கி.பி 1118−35) மலை மீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக் கற்றளியாக திருப்பணி செய்யப் பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு மிகுதியான திருப்பணிகள் செய்தகாக்கு நாயகனின்திருவுருவச் சிலையும் கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டபெரியான் திருவனான சிறுத்தொண்டன்திருவுருவச் சிலையும் திருக்கோயிலின் அா்ச்சகரானதிருச்சிற்றம் பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனதுதிருவுருவச் சிலையும் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கப்பட்டுள்ளன.




கோயில் கல்வெட்டுகளில் பெருமுக்கல், “ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விசைய இராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கை கொண்ட நல்லூா்என்று குறிப்பிடப்படுகிறது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் பெருமுக்கல், கங்கை கொண்ட நல்லூர் என்று அழைக்கப் பட்டிருக்கலாம்

பெருமுக்கல் கோட்டை.
ஆற்காடு நவாபின் ஆளுகைக்கு உட்பட்டு 18ஆம் நூற்றாண்டில் ஹைதர் அலிகான் பெருமுக்கல் பகுதியை ஆட்சி புரிந்துள்ளார். அவர்காலத்தில் சந்தா சாஹிப் மகனது திருமணம் 1747 வருடம் டிசம்பா் மாதம் புதுச்சேரியில் நடைபெற்றுள்ளது. இத்திருமண விழாவில் புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநா் கலந்துகொள்ள வேண்டுமென பெருமுக்கலை ஆண்ட ஹைதர் அலிகான் நேரில் சென்று தங்க நகைகளைப் பரிசளித்து அழைப்பு விடுத்ததாக புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக்குறிப்பு தெரிவிக்கின்றது.
ஹைதர் அலிகான் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்ததால் ஆங்கிலேயரின் பகையை எதிர்கொள்ள நேரிட்டது. புதுச்சேரியைக் கைப்பற்ற பிரிட்டிஷ் தளபதி கர்னா் அயா்கூட் தலைமையில் பெரும்படை 1760 ல் பெருமுக்கல் கோட்டையைத் தாக்கி அங்கிருந்த செல்வங்களைக் கொள்ளை யடித்துக் கோட்டையையும் கைப்பற்றியது.
பின்னா் 1780 ல் மைசூரை ஆண்ட ஹைதா் அலியின் படைகள் பெருமுக்கல் கோட்டையைக் கைப்பற்றின. மீண்டும் 1783 ல் பெருமுக்கல் கோட்டை ஆங்கிலேயா் கட்டுப்பாட்டிற்குச் சென்றது.
1790ல் ஹைதர் அலியின் மகன் திப்புசுல்தான் மீண்டும் ஆங்கிலேயரிடமிருந்து இக்கோட்டையைக் கைப்பற்றினார். அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் பெருமுக்கல் கோட்டை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடர்ந்து பல முறை போரின் கோரத் தாக்குதலுக்கு உள்ளான பெருமுக்கல் கோட்டை சிதைந்து சின்னாபின்னமாக இப்பொழுதும் காட்சியளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

புதுச்சேரியில் பல்லவச் சிற்பங்கள் நூல் அணிந்துரை -முனைவர் நா.இளங்கோ

முனைவர் நா . இளங்கோ “ செங்கல் இல்லாமலும் , மர ம் இ ல்லாமலும் , உலோகம் இல்லாமலும் , சுண்ணாம்பு இல்லாமலும் பிரம்மா , சிவன் மற்றும் விஷ்ணுவ...