<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571</id><updated>2012-01-30T18:33:09.580+05:30</updated><category term='சங்க இலக்கிய ஆய்வு'/><category term='வலைப்பதிவுகள் ஆய்வு'/><category term='சிங்கப்பூர் சுற்றுலா'/><category term='பாலியல் அறம்'/><category term='திருக்குறள் ஆய்வு'/><category term='வழக்காடு மன்றம்'/><category term='புதுச்சேரி வரலாறு'/><category term='சிறுகதை'/><category term='புத்தக மதிப்புரை'/><category term='பதிப்பு ஆய்வு'/><category term='சிறுகதை ஆய்வு'/><category term='நாடக மதிப்பீடு'/><category term='இலக்கிய ஆய்வுக் கட்டுரை'/><category term='கட்டுரை இலக்கியம்'/><category term='சமூக மானிடவியல் ஆய்வு'/><category term='சித்தர் இலக்கியம்'/><category term='முன்னுரை'/><category term='வாழ்க்கைக் குறிப்பு'/><category term='ஆய்வுக் கட்டுரை'/><category term='அணிந்துரை'/><category term='கவிதை'/><category term='இதழியல் ஆய்வு'/><category term='நூல் அறிமுகம்'/><category term='நூல் மதிப்புரை'/><category term='ஹைக்கூ அறிமுகம்'/><category term='கருத்துரை'/><category term='நூல் அணிந்துரை'/><category term='தமிழியல் ஆய்வு'/><category term='பாரதி விழா அழைப்பு'/><category term='ஊடக ஆய்வு'/><category term='கவிதை ஆய்வு'/><category term='மாயூரம் வேதநாயகர்'/><category term='தமிழர் வாழ்வியல்'/><category term='அழைப்பிதழ்'/><category term='வரலாற்று ஆய்வுக் கட்டுரை'/><category term='இஸ்லாமிய இலக்கிய ஆய்வு'/><category term='விருதளிப்பு'/><category term='இலக்கிய ஆய்வு'/><category term='கட்டுரை'/><category term='விளம்பரங்கள் - ஆய்வு'/><category term='வலைப்பதிவு அறிமுகம்'/><category term='ஆர்கிட் மலர்கள்'/><category term='புதுவை வரலாறு'/><category term='சொற்பொழிவுக் கலை'/><category term='குறுந்தொகை ஆய்வு'/><category term='பாவலரேறுவின் தென்மொழி இதழ்'/><title type='text'>மலையருவி     Dr.N.Ilango</title><subtitle type='html'>தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் படைப்பிலக்கியங்களுக்கான புதிய தளம்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>125</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-8848960392852849620</id><published>2012-01-30T18:26:00.000+05:30</published><updated>2012-01-30T18:26:11.693+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணிந்துரை'/><title type='text'>கவிஞர் வேள்பாரியின் "அகம் மலர்ந்த ஆம்பல்கள்" -அணிந்துரை</title><content type='html'>&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-605 008&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு விந்தை யென்றால் மனிதனின் படைப்பில் கவிதை ஒரு விந்தை. கவிதைகளுக்குத்தான் எத்தனை சுதந்திரம். ஒருமுறை கவிதையைக் கேட்டோ வாசித்தோ நமக்குள் அனுமதித்து விட்டால் அந்தத் கவிதைகள் நம் மனத்துள் புகுந்து செய்யும் சித்துவேலைகள்தான் என்னென்ன? &lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்கள் செய்யும் எண்வகைச் சித்துகளைப்போல் எண்ணிலாச் சித்துகளை நமக்குள் செய்யும் அந்தக் கவிதைகள். உருவைச் சுருக்குவது, பேருரு எடுப்பது, தனக்குள் ஒன்றுமில்லாதது போல் மயக்குவது, தனக்குள்ளே எல்லாம் இருப்பதாகக் காட்டுவது, சுவைஞனிடத்தில் ஆக்கலும் காத்தலும் அழித்தலும் செய்வது என அப்பப்பா! நல்ல கவிதைகள் செய்யும் மாயங்கள் சொல்லிமாளாது. நல்லவேளையாக இன்றைக்கு கவிதை எழுதும் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் ஆயிரக்கணக்கான கவிதைகளில் நல்ல கவிதைகள் கொஞ்சம் அரிதாயிருப்பதால் நாம் தப்பித்தோம்.&lt;br /&gt; &lt;br /&gt;நல்ல கவிதைகள் வாசித்து முடித்தபின் சுவைஞனைத் தூங்க விடுவதில்லை. பனை ஓலைகளில் எழுதிக் கொண்டிருந்த தமிழனுக்கு, ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கையில் கொஞ்சம் தாளும் மையும் கிடைத்தபிறகு எழுத்து ஒரு சுகமான அனுபவமாயிற்று. இகலோக சுகம் தேடிப் பணம்படைத்த மன்னர், வள்ளல்களைப் பாடுவதோ, பரலோக சுகம் நாடிப் பரமனைப் பாடுவதோ இவைதான் கவிஞனின் வேலை என்றிருந்த இடைக்காலக் கவிஞர்களின் குண்டுசட்டிக் குதிரையோட்டம் காலனியாதிக்கச் சூழலில் புதிய எழுதுகருவி, அச்சு, புதிய பாடுபொருள், புதிய மொழிநடை எனப் புதுக்கோலம் கொண்டது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கங்களில். மகாகவி பாரதி இதனைத் தொடங்கிவைத்தான். அவனே தமிழின் நவீன கவிதைக் கலையின் பிதாமகன். &lt;br /&gt;&lt;br /&gt;பாரதி பிடித்த தேர்வடம் பின்னர் பாவேந்தன் கைக்குச் சென்றது. இன்று அந்தத் தேர் ஓடிக்கொண்டிருக்கிறதா? நிலைக்கு வந்துவிட்டதா? இல்லை வழியிலேயே முட்டுக்கட்டையில் முடங்கிக் கிடக்கிறதா? என்று இன்னும் தீர்;ப்பளிக்கப் படாத பட்டிமன்றம் ஒன்று தமிழுலகில் நடந்துகொண்டிருக்கிறது. பாரதி பிடித்த தேர் இன்னும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்ற அணியைச் சேர்ந்தவன் நான். இப்பொழுது என் மனக்கண்ணில் பாரதி பிடித்தத் தேர் வடத்தைப் பலரோடு சேர்ந்து கவிஞர் வேள்பாரியும் பிடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் வேள்பாரி சிங்கப்பூர்க் கவிதைக் குடும்பத்தில் ஒருவர். என் இனிய நண்பர் முனைவர் இரத்தின வேங்கடேசன் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்திருந்த பாரதி 126 விழாவில் முதன்முறையாகக் கவிஞர் வேள்பாரியின் கவியரங்கக் கவிதையைக் கேட்டேன். கேட்டேன் என்பதைவிட கேட்டுத் திளைத்தேன். கவியரங்கங்களுக்குப் புகழ்பெற்ற புதுச்சேரியைச் சேர்ந்த எனக்கு அவரின் கவியரங்கக் கவிதையும் அதனை அவர் மேடையில் நிகழ்த்திய விதமும் புதுமையாயிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பாரதி குறித்த தன்னுடைய நீண்ட கவிதையைக் கையில் எந்த தாளோ, குறிப்போ இல்லாமல் சரளமாகப் பொழிந்து கொண்டே இருந்தார். இடையில் பாராட்டுதலுக்காகக் கைதட்டல்கள் பல. கைதட்டலுக்குக் கொஞ்சம் இடம்கொடுத்து மீண்டும் மலையருவி எனக் கவிதையை ஆர்ப்பாட்டமும் துள்ளலும் குளிர்ச்சியுமாக ஓடவிட்டார். அன்று அவருடைய கவிதை அருவியில் குளித்துச் சிலிர்க்காதவர்களே இருக்க முடியாது. தொடர்ந்து பல மேடைகளில் அவரின் கவியரங்கப் பொழிவுகளைக் கேட்டு நான் மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுது அவரின் கவியரங்கக் கவிதைகளும், சில தனிக் கவிதைகளும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கவிதைகளும் இணைந்து அகம் மலர்ந்த ஆம்பல்கள் என்ற பெயரில் ஒரு கவிதைத் தொகுப்பாக வெளிவருகிறது. இந்நூல் அவரின் முதல் கவிதைத் தொகுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;கவிதைத் தொகுப்புகள் பொதுவாக, தமக்கென ஒரு முழுமைபெற்ற வடிவம் அற்றவை. கவிதைகளின் கலப்பு அணிவரிசை அது. எப்பொழுதுமே கலவைகளுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. கதம்பங்களைப் போல். கதம்பம், பல மலர்களின் கலப்பு. மலர்கள் மட்டுமல்ல மரு, மருக்கொழுந்து என இலை, தழைகளும் கதம்பத்தில் உண்டு. வண்ணங்களோ பலவிதம், குணங்களும் பலவிதம், மலர்களில் வாசனை உள்ளதும் உண்டு, வாசனையற்றதும் உண்டு. கவிதைத் தொகுப்புகளும் அப்படித்தான். எல்லாக் கவிதைகளும் ஒரே தரத்தில், ஒரே நிறையில் இருப்பதில்லை. கவிஞர் வேள்பாரியின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. கவியரங்கங்களில் அவர் பொழியும் கவிதை நிகழ்த்தலின் பரிமாணத்தை அச்சுவடிவத்தில் வரும் அவரின் கவிதைகளில் காணமுடியவில்லை. இரண்டும் வேறுவேறு ஊடாகமாகச் செயல்படுவதே அதற்குக் காரணமாயிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மிகப்பல கவிதைகள் பல கவிதைப் போட்டிகளில் அவருக்குப் பல்வேறு பரிசுகளை ஈட்டித்தந்த கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது. கவிஞர் வேள்பாரி, பொழுது போக்கக் கவிதை எழுதுகிறவர் இல்லை. அவர் ஏன் கவிதை எழுதுகிறார்? எப்பொழுது கவிதை எழுதுகிறார்? என்பதிலேயே அவரின் தனித்தன்மை வெளிப்படுகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான கவிதைகள் அவரது மனஅவஸ்தையின் வெளிப்பாடுகளாக இருப்பது கூர்ந்து கவனிக்கத் தக்கது. தனிமனித, சமூக, நாட்டு நிகழ்வுகளின் கோணல்களும் அதற்கான கொதிப்புகளுமே அவர் கவிதைகளின் மையப் பொருளாகின்றன. குறிப்பாக, ஈழத்தில் நடந்துவரும் சிங்களப் பேரினவாதக் கொடுமைகளால் தமிழன் என்பதனையும் மீறி மனிதம் சிதைக்கப்படுவதில் அவருக்குள்ள எல்லையற்ற கோபமும் கொதிப்பும் பல படைப்புகளில் வெளிப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;தேகா போட்டியில் பதக்கம் பெற்ற புதுக்கோட்டைச் சாந்திக்காக எழுதும் வாழ்த்துக் கவிதை தொடங்கி சந்திராயன் அனுப்பப்பட்டபோதும், சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதலின் போதும், கும்பகோணத் தீவிபத்தில் பள்ளிக் குழந்தைகளின் கோரப்பலியின் போதும், ஒரிசாவில் விவசாயிகளின் பஞ்சத்தின் போதும், டில்லி குண்டு வெடிப்பின் போதும், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் போதும் அவர் எழுதியுள்ள கவிதைகளில் உள்@ர், தேச, சர்வதேச அரசியல் நிகழ்வுகள் அலசப்படுவதைக் கூர்ந்து நோக்கும் எவரும் இத்தொகுதியின் மேன்மையினை எளிதில் கண்டுகொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேள்பாரியின் கவிதைகளின் நடை மிக மென்மையானது. எதுகை மோனைகளை விட அவர் பெரிதும் நம்புவது இயைபுத் தொடைகளைத்தான். இயைபுத் தொடைகளுக்கும் கவிதையின் ஓசையொழுங்குக்கும் மிகுந்த தொடர்புண்டு. இந்த நுட்பம் தெரிந்து வேள்பாரி தம் கவிதைகளை ஓசைநயத்தோடு படைப்பதில் பெரிதும் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும். எளிய இனிய சொற்களால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தம் படைப்பு எளிதில் சென்று சேரும் வகையில் கவிதை படைப்பது அவரின் தனிஇலாவகம். &lt;br /&gt;கவிஞரின் அகம் மலர்ந்த ஆம்பல்கள் தொகுப்பில் எல்லா உணர்ச்சிகளும் விரவிக் கிடந்தாலும், இத்தொகுதியில் மிகுதியும் வெளிப்படும் உணர்ச்சி சோக உணர்ச்சியே. பெரும்பாலான கவிதைகளில் மிக மெல்லிய சோகம் இழையோடுவதை எவரும் எளிதில் அவதானிக்க முடியும். தாய்முகம் என்ற அவரின் கவிதையை இங்கே நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கற்றைக்குழல் முடித்துக்&lt;br /&gt;காலையிலே விழித்திடுவாள்&lt;br /&gt;சற்றேனும் ஓய்வின்றி&lt;br /&gt;சலசலத்து உழைத்திடுவாள்&lt;br /&gt;&lt;br /&gt;கற்றவித்தை எதுவென்றால்&lt;br /&gt;கண்ணீரைச் சொரிந்திடுவாள்&lt;br /&gt;குற்றமற்றத் தாயுள்ளம்&lt;br /&gt;குறையேதும் கண்டதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நெற்றியிலே நீர்வடிய&lt;br /&gt;நெருப்பூட்டிச் சமைத்தாயே&lt;br /&gt;வெற்றியைக் காணுமுன்னே&lt;br /&gt;வெந்தணலில் வெந்தாயே&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேள்பாரியின் இந்தக் கவிதையைப் படிப்பவர்களுக்குப் பட்டினத்தாரின் தாயை எரியூட்டிய பாடல்கள் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது. வேள்பாரியின் தாயன்பு மீதான நீங்கா நினைவுச் சிதறல்கள் தொகுப்பின் பல இடங்களிலும் விரவிக் கிடக்கின்றன. தாய்மையைப் போற்றும் கவிஞரின் உள்ளமும் தாயுள்ளம் போன்றதுதான். அதனால்தான் அவரின் எல்லாப் பாடுபொருள்களிலும் அன்பும் ஆழ்ந்த மனிதநேயமும் இழையோடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா அமெரிக்கா கூட்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த வேள்பாரியின் கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் அணு என்ற தலைப்பிலான ஒரு கவிதை,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அணு ஒப்பந்தம்&lt;br /&gt;அமெரிக்க நிர்பந்தம்&lt;br /&gt;ஆராய வேண்டிய சம்பந்தம்&lt;br /&gt;செர்பியாவின் உலைக்கழிவு&lt;br /&gt;நாகசாகியில் உயிர்க்கழிவு&lt;br /&gt;போபாலில் நடந்த நிகழ்வு&lt;br /&gt;போதுமடா நம்ம இழவு&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அழிவைத் தருவது அணுஉலை&lt;br /&gt;பொழிவைத் தருவது அன்புஉலை&lt;br /&gt;&lt;br /&gt;அணுஎன்பது ஆக்க சக்தியா?&lt;br /&gt;அண்டத்தை அழித்திட புதிய யுக்தியா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிதையின் ஒரு சில வரிகளிலேயே கவிஞரின் உள்ளத்தை நீங்கள் அடையாளம் கண்டுவிட முடியும். உலக வல்லரசுகளின் ஆதிக்கச் சக்திகளுக்குத் துணைபோவோர் மட்டுமல்லாமல் அப்பாவியான பொதுமக்களும் கூட இந்த ஒப்பந்தம் ஏதோ இந்தியாவை ஈடேற்ற வந்த அற்புத ஒப்பந்தம் என்று பிதற்றிக் கொண்டிருந்த காலத்தில் கவிஞர் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஆபத்தையும் அதன்பின்னால் மறைந்திருக்கும் சர்வதேசக் கூட்டுச் சதியையும் அம்பலப்படுத்தும் விதத்தில் எழுதியுள்ள கவிதை அவரின் மனிதநேயத்தை மட்டும் படம் படிக்கவில்லை, மாறாக உலக அரசியல் குறித்த அவரின் தீர்க்கமான பார்வையையும் வெளிப்படுத்துகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இனி, போலிச் சாமியார்கள் குறித்த கவிதை ஒன்று,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கருவறையில் காமலீலை&lt;br /&gt;கடவுளர்கள் அங்குஇல்லை&lt;br /&gt;சல்லாப சாமிகளின்&lt;br /&gt;உல்லாச உலகமடா&lt;br /&gt;கல்லாகிப் போனாலும் &lt;br /&gt;கடவுள்கள் பாவமடா!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர், இறை நம்பிக்கையாளர் என்றாலும் கடவுளின் பேரால் நடக்கும் கயமைகளையும் பக்தியின் பேரால் நடக்கும் பகட்டுகளையும் அம்பலப் படுத்துவதில் கவிஞர் தமக்குரிய சமூகக் கடமையைச் சரியாகவே செயல்படுத்துகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt; இப்படி, தொட்ட இடத்திலெல்லாம் கவிஞர் வேள்பாரியின் சமூக அக்கறையும் ஆழ்ந்த மனிதநேயமும் வெளிப்படுவது இத்தொகுதியின் தனிச் சிறப்பு. இந்தியத் தாயகத்திலிருந்து வாழ்தல் வேண்டி சிங்கப்பூர் சென்று பணியாற்றிவரும் கவிஞர் வேள்பாரி தம் அயராத உழைப்பு நெருக்கடிகளுக்கு இடையிலும் இப்படிக் கவிதைப் பணி ஆற்றுகிறார் என்பதுதான் நாம் சிறப்பாக கவனத்தில் கொள்ளவேண்டியது. அவரின் தமிழ்ப்பணியும் சமூகப் பணியும் இடையீடின்றி நடைபெற வேண்டும் என்பதே நம் அவா! தொடர்ந்து நல்ல பல நூல்களைத் தமிழுலகிற்குத் தந்து தமிழுக்கு அணி சேர்ப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. வாழ்த்துக்களுடன்!&lt;br /&gt;   &lt;br /&gt;       முனைவர் நா.இளங்கோ&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;   &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-8848960392852849620?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/8848960392852849620/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=8848960392852849620&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8848960392852849620'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8848960392852849620'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2012/01/blog-post_1784.html' title='கவிஞர் வேள்பாரியின் &quot;அகம் மலர்ந்த ஆம்பல்கள்&quot; -அணிந்துரை'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-1846126493764777874</id><published>2012-01-30T18:10:00.000+05:30</published><updated>2012-01-30T18:33:09.593+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முன்னுரை'/><title type='text'>"ஊடகங்களின் ஊடாக" -நூல் முன்னுரையின் ஒரு பகுதி</title><content type='html'>&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் அதாவது செய்தித்தாள்கள், இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் முதலான தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாமல் இன்றைய மனித வாழ்க்கை இல்லை. தகவல் தொடர்புச் சாதனங்கள் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்ப்பது கூட இயலாததாகி விட்டது. நாம் இப்போது தொடர்புச் சாதனங்களால் ஆன உலகத்தில் வாழ்கிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்கள் நமக்குச் செய்தி மற்றும் தகவல்களைத் தருகின்றன. பொழுது போக்க உதவுகின்றன. அவை அத்தோடு நிறுத்திக் கொள்வதில்லை. நம் வாழ்க்கையை, நம் சிந்தனையை, நம் தேவைகளைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்குகின்றன. உலகை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பனவற்றையும் அவை சொல்கின்றன. உலக நிகழ்வுகளில் எவை எவை முக்கியத்துவம் உடையவை, எவை எவை முக்கியத்துவம் அற்றவை என்பனவற்றை எல்லாம் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகங்கள் விளங்குகின்றன. நாம் எதைப்பற்றிப் பேச வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்பனவற்றையும் ஊடகங்களே முடிவுசெய்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;செய்தி மற்றும் தகவல்களை ஊடக நுகர்வோருக்கு வழங்கிச் சேவை செய்வது தகவல் தொடர்புச் சாதனங்களின் பணி என்பதெல்லாம் பழங்கதை. இன்றைய உலகில் ஊடகங்கள் வழங்கும் செய்திகள் ஒரு தகவல் மட்டுமல்ல. அவை ஓர் உற்பத்திப்பொருள். முதலாளித்துவ உற்பத்திப் பண்டம். அதனை உற்பத்தி செய்யும் பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படப் பணியாளர்களாகிய ஊடகவியலாளர்கள் அனைவரும் பண்ட உற்பத்தித் தொழிலாளர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஊடக முதலாளிகள் உற்பத்தி செய்துதரச் சொல்லும் தகவல்களைச் செய்தி என்ற பெயரில் அவர்கள் செய்து தருகிறார்கள். நுகர்வோராகிய நமக்கு எது தேவை என்று தெரிந்து ஊடகங்கள் தகவல்களை உற்பத்தி செய்வதில்லை. நமக்கு எதைத் தரவேண்டும் அல்லது நம்மிடம் எதை விற்க வேண்டும் என்பதையும் இன்றைய ஊடக முதலாளிகளே முடிவு செய்கிறார்கள். பழகப் பழக அதுவே நமது தேவையாகவும் மாறிப்போகிறது. இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது தகவல்கள் உருவாக்கப் படுகின்றன என்பதுதான். &lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கக் காலங்களில் ஊடகங்களின் பணி சமூகம், சமயம், தேசம் சார்ந்த ஒரு சேவையாக, ஒருவகைப் போராட்ட ஆயுதமாகத்தான் இருந்தது. அறிவித்தலையும், அறிவுறுத்தலையும் மகிழ்வூட்டலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த ஊடகங்கள் இன்றைக்கு வணிகம் செய்தல், பொருளீட்டல் என்பதனையே முதன்மை நோக்கமாகக் கொள்ளத் தொடங்கிவிட்டன. ஆக, இன்றைய ஊடகஉலகில் செய்தி என்பது வெறும் தகவல் இல்லை, அது ஒரு உற்பத்திப் பொருள். ஊடகங்களின் தகவல் வழங்கல் வெறும் சேவை மட்டுமல்ல அது ஒரு உலகமய வணிகம். இந்த மாற்றத்தைச் சராசரி வாசகர்களும் பார்வையாளர்களும் உணர்ந்து கொள்ளாத வகையில் நடைமுறைப் படுத்துவதில்தான் ஊடகங்களின் நுண்அரசியல் செயல்படுகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவி ஊடக நுகர்வோரைப் பொறுத்த வரையில் தகவல் தொடர்புச் சாதனங்கள் உண்மை விளம்பிகள். அவை உண்மையைத் தவிர வேறொன்றையும் பேசுவதில்லை. இன்றைக்கும் பலர் தகவல் தொடர்புச் சாதனங்களில் இடம்பெறும் தகவல்கள் அனைத்தும் உண்மையே என்று நம்புகின்றனர். இன்னும்  ஒரு சிலர் தனியார் ஊடகங்கள் வேண்டுமானால் பொய் சொல்லலாம், உண்மையைத் திரித்து வெளியிடலாம் ஆனால், அரசு ஊடகங்கள் அப்படியில்லை, அவை நூற்றுக்கு நூறு உண்மைகளைத்தான் எழுதும், பேசும், காண்பிக்கும் என்று பிடிவாதமாக நம்புகின்றனர். ஆனால் உண்மை அவர்கள் நம்பிக்கைக்கு நேர்மாறானது.  ஊடகங்களின் அதிகார அரசியலின் வெற்றி இது. ஊடகங்களின் அதிகார அரசியலை விளங்கிக் கொள்வது இன்றைக்கு மிகமிக அவசியமானது. ஊடக நுகர்வோர் மட்டுமல்ல கல்வி, தொழில் சார்ந்து ஊடகங்களைப் பயில்வோருக்கும்  ஊடகங்களின் அதிகார அரசியல் குறித்த விழிப்புணர்வு தேவை. &lt;br /&gt;II&lt;br /&gt;ஊடகவியலுக்கும் எனக்குமான தொடர்பு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலானது. கடந்த எண்பதுகளில் மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் தொடங்கிய மக்கள் தொடர்பியல் படிப்பில் சேர்ந்து கற்றது தொடங்கி, புதுவைப் பல்கலைக் கழக இளங்கலை, முதுகலைத் தமிழ் மாணவர்களுக்கு ஊடகவியலைப் பயிற்றுவிக்கும் நோக்கில் பலமுறை பாடத்திட்டங்களை வடிவமைத்தது, தொடர்ந்து தமிழ் மாணவர்களுக்கு அதனைப் பயிற்றுவித்து வருவது என இருபத்தைந்து ஆண்டுகாலத் தொடர்பு. கல்விப் புலத்தில் மட்டுமல்லாமல் இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் எனத் தொடர்ந்து ஊடகத் துறையோடு இயங்கியும், இயக்கியும் வரும் அனுபவமும் எனக்குண்டு. புத்தகங்களில் கற்பதினும் மேலாக வகுப்பறைச் சூழலும் மாணவர்களும் எனக்கு நிறைய போதிப்பதுண்டு. கற்பதும் கற்பிப்பதும், கற்பித்துக் கற்பதும் தானே ஆசிரியப் பணி. அந்தவகையில் நிறைய கற்றிருக்கிறேன், கற்பித்திருக்கிறேன். அந்த அனுபவங்களின் ஒரு சிறிய வெளிப்பாடுதான் &lt;b&gt;ஊடகங்களின் ஊடாக &lt;/b&gt;என்ற இந்நூல். &lt;br /&gt;&lt;br /&gt;ஊடகவியல், இதழியல் குறித்துத் தமிழில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிறைய நூல்கள் வந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் பல்கலைக் கழகப் பாடத்திட்டங்களை ஒட்டி, தேவைக்காக உருவாக்கப்பட்டவை. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமாக எழுதப்பட்டவை. ஊடகங்கள் குறித்த புரிதலை மையப்படுத்தித் தமிழில் மிகச் சில நூல்களே வெளிவந்துள்ளன. அவற்றுள் சுரேஷ்பால் அவர்களின் மீடியா உலகம் (1999), கண்ணன் அவர்களின் பிறக்கும் ஒரு புதுஅழகு (2007) இரண்டும் குறிப்பிடத்தக்க நூல்கள். இந்நூலின் ஆக்கத்தில் அவற்றுக்கும் பங்குண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஊடகங்களின் ஊடாக என்னும் இந்நூலில் ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் முதல் கட்டுரை ஊடகங்களின் கதையாடல் குறித்தது. இரண்டாவது கட்டுரை திரைப்படங்களில் இடம்பெறும் காலக்குறியீடுகள் குறித்தது. மூன்றாவது கட்டுரை தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் பெண்மணி டி.பி.ராஜலட்சுமியின் நாவல் மற்றும் திரைப்படம் குறித்தது. நான்காவது கட்டுரை விளம்பரங்களின் நுண்அரசியல் குறித்தது. ஐந்து மற்றும் ஆறாம் கட்டுரைகள் இணைய வலைப்பதிவுகளின் அதிகார உடைப்பு குறித்தது. கட்டுரைகள் ஒவ்வொன்றும் விமர்சனங்களுக்கு இடமளிக்கக் கூடியன. ஊடகங்களுக்கு இருக்கும் வரவேற்பு, இது போன்ற ஊடகவியல் சார்ந்த ஆய்வு நூல்களுக்கும் இருக்க வேண்டும். &lt;b&gt;ஊடகங்கள் நம் எதிரிகள் இல்லை. அதேசமயத்தில் அவை நண்பர்களும் இல்லை. &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கற்ற தமிழ்க்கல்வி என்னை ஒரு இலக்கியவாதியாக மட்டுமே வளர்த்தெடுத்தது. புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றமும் அதன் தோழர்களும்தான் என் இலக்கியப் பயணத்திற்கான இலக்கினை அடையாளம் காட்டியவர்கள். இலக்கியப் பேராசான் ஜீவா அவர்களின் வழியில், ‘கலையும் இலக்கியமும் மக்களுக்கே’ என்ற தெளிவோடு சமுதாயப் பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆற்றுப்படுத்திய அமைப்பு அதுவே. அதற்கு நன்றி கூறும் வகையில் &lt;b&gt;புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றத்துக்கு, ஊடகங்களின் ஊடாக என்னும் இந்நூலை அன்புக் காணிக்கையாகப் படைத்துள்ளேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்கூறு நல்லுலகம் நல்ல நூல்களைப் போற்றிப் பாராட்டும் என்ற நம்பிக்கையுடன்,&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி!&lt;br /&gt;முனைவர் நா.இளங்கோ&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-1846126493764777874?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/1846126493764777874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=1846126493764777874&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1846126493764777874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1846126493764777874'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2012/01/blog-post_30.html' title='&quot;ஊடகங்களின் ஊடாக&quot; -நூல் முன்னுரையின் ஒரு பகுதி'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-2164518269162437390</id><published>2012-01-30T17:14:00.003+05:30</published><updated>2012-01-30T18:30:26.609+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணிந்துரை'/><title type='text'>புதுவைத் தமிழ்நெஞ்சனின் "தோழர் வ.சுப்பையா" நூல் அணிந்துரை</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா. இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ்ப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் வ.சுப்பையா அவர்கள் புதுச்சேரி விடுதலைப் போராட்டத் தளபதி. புதுச்சேரி மண்ணின் விடுதலைக்காகவே தம் உடல், பொருள், உழைப்பு, சிந்தனை முழுவதையும் அர்ப்பணித்தவர். இந்தியாவின் விடுதலை வரலாற்றிலும் புதுவையின் விடுதலை வரலாற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இணையற்ற வீரர். ஆங்கில ஏகாதிபத்யம், பிரஞ்சு ஏகாதிபத்யம் என்ற இரண்டு ஏகாதிபத்யங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட ஒரே விடுதலை வீரர் என்ற பெருமைக்குரியவர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் வ.சுப்பையா அவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் மகாத்மா காந்தி, பண்டித ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வி.வி.கிரி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், தந்தைப் பெரியார், சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாக் கிருஷ்ணன், வினோபாஜி, பெருந்தலைவர் காமராசர், திரு.வி.க., மற்றும் பல தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப்பணியும் சமுதாயப் பணியும் ஆற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் வ.சுப்பையா அவர்களின் பன்முகப்பட்ட பணிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், குறிப்பாக புதுவையின் விடுதலைப் போருக்கு வித்திட்டு வளர்த்து விடுதலையை முழுமைப்படுத்திப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த தேசபக்த விடுதலை மறவர். 1934 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் என்ற பத்திரிக்கையை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி முற்போக்கு இதழ்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்த சிறந்த பத்திரிக்கையாளர். &lt;br /&gt;&lt;br /&gt;அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்ற தேசிய அமைப்பின் திறமை மிக்க தலைவர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சமூகம், பொருளாதாரம், அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் எழுத்தாற்றலும் நாவன்மையும் ஒருங்கே கொண்ட சிந்தனையாளர். அரசியலில் பல பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நிர்வாகம் செய்த ஆற்றல் மிக்க நிர்வாகி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் மதித்துப் போற்றப்படும் மக்கள் தலைவர்.&lt;br /&gt;II&lt;br /&gt;தோழர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாக்(1911-2011) காலமிது. பொதுவாகத் தலைவர்களின், மிகச்சிறந்த சாதனையாளர்களின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படுவதில் ஒரு சிக்கல் உண்டு. அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை குழி தோண்டிப் புதைக்கப்படுவார்கள். இந்தமுறை இன்னும் கொஞ்சம் ஆழமாகவே அவர்களின் புதைகுழி அமைந்துவிடும். அதாவது நூற்றாண்டு விழாக்கள் அவர்களின் இரண்டாவது மரணமாக அமைந்துவிடும் ஆபத்து தவிர்க்க இயலாமல் நேர்ந்து விடுவதுண்டு. இவ்விபத்து எல்லா நூற்றாண்டு விழா நாயகர்களுக்கும் ஏற்படுவதில்லை. சராசரித் தலைவர்களுக்கும் சராசரிப் படைப்பாளிகளுக்கும்தான் இப்படி நேர்ந்துவிடும் ஆபத்துண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வாழும் காலத்திலேயே வரலாறாக வாழ்ந்து  காலத்தினால் அழிக்கமுடியாத புதிய வரலாற்றைப் படைத்தளிக்கும் மகத்தான தலைவர்களுக்கு இவ்விதி பொருந்துவதில்லை. அவர்களின் நூற்றாண்டு விழாக்கள் அவர்களை மீண்டும் இந்த உலகிற்குப் பெற்றுத் தருகின்றன. மகத்தான தலைவர்கள், நூற்றாண்டு விழாக்களின் போது மீண்டும் பிறக்கிறார்கள். இந்தமுறை அவர்களின் பிறப்பு முதல் பிறப்பைவிட அதிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துவிடுகின்றது. வாழும் காலத்தில் சாதித்ததைவிடப் பல மடங்குச் சாதனைகளை அவர்கள் இந்த இரண்டாம் பிறப்பிலே சாதிப்பார்கள். அண்ணல் காந்தி, அண்ணல் அம்பேத்கர், தந்தைப் பெரியார், மகாகவி பாரதி முதலான சரித்திர நாயகர்களின் நூற்றாண்டு விழாக்கள் என்னுடைய கூற்றுக்குச் சான்று பகரும். மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாவும் இத்தகு சரித்திர நாயகர்களின் நூற்றாண்டு விழாக்களைப் போல மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். &lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு மண்ணுக்கும் நேராத, நேரக்கூடாத அவலம் புதுச்சேரிக்கு நேர்ந்து விட்டமை ஒரு வரலாற்றுக் கொடுமை. புதுச்சேரியின் விடுதலைநாள் எது? என்பதை அறியாத மக்கள், தெரிந்தும் தெரியாததுபோல் காட்டிக்கோள்ளும் அரசுகள் இதெல்லாம் புதுச்சேரிக்கு மட்டுமே கிடைத்த சாபக்கேடு. 1954 நவம்பர் 1 ஆம் தேதி புதுச்சேரியின் விடுதலைநாள். இது வரலாற்று உண்மை. ஆனால் புதுச்சேரி அரசும் மக்களும் கொண்டாடும் நாளோ! ஆகஸ்டு 16. இந்த வரலாற்றுப் பிழையின் பின்னால் ஒளிந்துகிடக்கும் நாடகங்கள் எத்தனை எத்தனையோ! தோழர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டு விழாக்களின் பின்விளைவாக இந்தக் கபட நாடகங்கள் முடிவுக்கு வரவேண்டும்! வரும்! ஆதனைச் செய்து முடிப்பதில்தான் நூற்றாண்டு விழாக்களின் முழுமையே அடங்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;III&lt;br /&gt;புதுவைத் தமிழ்நெஞ்சன் புதுச்சேரியின் ஆற்றல் மிக்க இளைஞர். பன்முகப்பட்ட ஆளுமைகளைக் கொண்டவர். அன்பும் தோழமையும் கொண்டு அனைவரிடமும் பழகும் பண்பாளர். கவிதை, உரைநடை இரண்டு வடிவங்களையும் அழுத்தமாகக் கையாளக் கூடியவர். எழுத்து, பேச்சு என்பதோடு நின்றுவிடாமல் செயலிலும் முற்போக்காளர். பேராட்ட குணம் அவரின் அடிப்படைப் பண்பு. எதையும் வெளிப்படப் பேசி விமர்சிக்கக் கூடிய துணிச்சல் மிக்கவர். அதனால் வரும் பகைமையைக் கண்டு அஞ்சாதவர். இனவுணர்வாளர். மொழி, இன, நிலக் காப்புப் போராட்டங்களில் முன்வரிசையில் நிற்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் புதுவைத் தமிழ்நெஞ்சன் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்களின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதத்தில் உருவாக்கியுள்ள ஓர் உயரிய படைப்பே தோழர் வ.சுப்பையா என்ற இக்கவிதை நூல். அடிப்படையில் மக்கள் தலைவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் பதிவாக உருவாகியுள்ள இக்கவிதை நூலில் பொதுவுடைமை மற்றும் செங்கொடிகளின் மேன்மையும் தோழர் கருணாசோதியின் பெருமைகளும் இடையிடையே பேசப்படுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தலைவரின் வாழ்க்கையைப் பேசும் நூலின் இடையிடையே அவரோடு தொடர்புடைய இயக்கம் மற்றும் இயக்கத் தோழர்கள் குறித்துப் பேசுவது நூலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தருகின்றது. தோழர் வ.சுப்பையாவின் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வாழ்க்கையில் உடன் பணியாற்றும் வாய்ப்பு பெற்ற நூலாசிரியரின் தந்தை சீனுவாசனார் குறித்த வரலாற்றுப் பதிவுகளையும் நூலாசிரியர் தமிழ்நெஞ்சனுக்கும்  மக்கள் தலைவருக்குமான சந்திப்புகள் குறித்த பதிவுகளையும் ஆசிரியர் நூலில் இடம்பெறச் செய்திருப்பது காலத்தின் தேவையறிந்த நல்லபணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சீனுவாசன் திருமணமே&lt;br /&gt;சீர்திருத்த முதல்மணமாம் சண்முகாபுரத்தில் &lt;br /&gt;சீனுவாசன் சுப்பையாவின்&lt;br /&gt;சிந்தனைக்கு ஏற்றமுள்ள உண்மைத் தோழர்&lt;br /&gt;பாவேந்தர் வந்திருந்து &lt;br /&gt;பாராட்டிச் சென்றுவிட்டார் ஊரில் உள்ளோர்&lt;br /&gt;நாவேந்தித் திருமணத்தை &lt;br /&gt;நல்லபடி பேசுகின்றார்.. .. புரட்சியாக&lt;br /&gt;சாவேந்தா சுப்பையா&lt;br /&gt;சரியாக வந்திருந்து வாழ்த்திச் சென்றார். &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம் தந்தையாரின் திருமணம் அந்த நாளிலேயே சீர்திருத்தத் திருமணமாக நடைபெற்றதையும் மக்கள் தலைவர், பாவேந்தர் முதலானவர்கள் வந்திருந்து வாழ்த்துக் கூறியமையும் மிக அழகாகப் பதிவுசெய்கிறார் நூலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்சியமே வாழும் வழி, பொதுவுடைமை, செங்கொடி ஏந்தடா! முதலான தலைப்புகளில் மார்க்சியம் குறித்தும், பொதுவுடைமை இயக்கம் குறித்தும், செங்கொடியின் பெருமை குறித்தும் நூலில் விரிவாகப் பேசும் தமிழ்நெஞ்சன் இந்திய இடதுசாரி இயக்கங்கள் குறித்த தமது விமர்சனப் பார்வையையும் நூலில் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொதுவுரிமை இல்லாமல் &lt;br /&gt;பொதுவுடைமை அமையாது&lt;br /&gt;இதுவரையில் மார்க்சியர்கள்&lt;br /&gt;இதையறிதல் கிடையாது&lt;br /&gt;சாதிக்குக் காப்பளிக்கும் &lt;br /&gt;சட்டத்தை மீறாமல்&lt;br /&gt;சமவுரிமை வந்திடுமா? &lt;br /&gt;சமவுடைமை அமைந்திடுமா?&lt;br /&gt;ஒப்போலை வழியாக&lt;br /&gt;ஒழியாது சாதிமதம்&lt;br /&gt;இப்போதே புரட்சியினைச்&lt;br /&gt;செய்யாமல் விடிவேது&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருணாசிரம வல்லடி மிக்க இந்தியச் சமூக அவல நிலைமைகளைக் கணக்கில் கொள்ளாமல் இங்கே மார்க்சியம் பேசப்படுவதில் தமக்கு உடன்பாடில்லை என்பதனையும் பாராளுமன்ற சனநாயக வழியில் சமவுடைமை சாத்தியமில்லை, புரட்சி ஒன்றே வழி என்பதனையும் நூலாசிரியர் தெளிவுபடுத்தியிருப்பது அவரின் அரசியல் தெளிவை வெளிப்படுத்துகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் போர்ப்படையின் இளைய தளபதியாக வீறுடன் செயல்பட்டுப் புதுச்சேரியின் விடிவெள்ளி என்ற நம்பிக்கையூட்டிய தோழர் கருணாசோதி குறித்த தமிழ்நெஞ்சனின் கவிதைகள் உண்மையில் நல்ல வரலாற்றுப் பதிவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கருணா சோதி ஒளியில் தானே &lt;br /&gt;காரிருள் இங்கே ஓடியது –அவன்&lt;br /&gt;வருகை தந்த வழியில்தானே&lt;br /&gt;இளைஞர் கூட்டம் கூடியது&lt;br /&gt;பொதுமை உலகைப் படைக்க விரும்பி&lt;br /&gt;புரட்சிப் படையை அமைத்திட்டான் - நம்&lt;br /&gt;புதுவை மண்ணில் பூத்த செம்மல்&lt;br /&gt;புரட்சி இளைஞனாய் வாழ்ந்திட்டான்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் கருணா சோதியின் எதிர்பாரா மறைவு (படுகொலை) புதுச்சேரியின் பொதுவுடைமை இயக்க அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்பதனையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தலைவரின் வரலாறு இன்றைய இளந்தலைமுறை யினருக்குச் சொல்லப்பட வேண்டும் என்ற நோக்கில் அவரின் போராட்ட வாழ்க்கையின் முக்கியப் பக்கங்களைக் கவிதை வடிவில் வடித்துக்காட்டும் இந்நூல், பலவகை மரபுப் பாவடிவங்களில் அமைந்துள்ளமை இதன் தனிச்சிறப்பு. திட்டமிட்ட வகையில் வாழ்க்கை வரலாறாக இந்நூலினை அமைக்காமல் தலைவரின் வாழ்க்கைப் பதிவுகள் சிதறிக் கிடக்கும் போக்கில் நூல் அமைந்துள்ளதால் போதிய மனநிறைவு கிடைக்கவில்லை என்பது ஒரு குறை என்றாலும் ஒவ்வொரு கவிதையும் தன்னளவில் ஒரு முழுமையைப் பெற்றிருப்பதனால் அந்தக் குறையும் பெரிதாகத் தோன்றவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் தலைவர் வ.சுப்பையாவின் நூற்றாண்டை ஒட்டித் தமிழிலும் ஆங்கிலம் முதலான பிற மொழிகளிலும் நிறைய நூல்கள் வந்திருக்க வேண்டும். தனித்தன்மை மிக்க அவரின் சுதந்திரப் போராட்ட வாழ்க்கை பரவலாகப் புதுவை மட்டுமின்றி தமிழகத்திற்கும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே சொல்லப்பட்டிருக்க வேண்டும். தேன்னிந்தியாவில் இடதுசாரி இயக்கம் தோன்றவும் பரவவும் தக்க துணையாய் இருந்து களத்தில் நின்று பணியாற்றிச் சொல்லவொண்ணா வேதனை களையும் சோதனைகளையும் எதிர்கொண்டு சாதித்துக்காட்டிய ஓர் ஒப்பற்ற தலைவர் தோழர் வ.சுப்பையா அவர்கள். அவரின் பேராட்ட வாழ்க்கை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியாது. ஏன் தெரியாது? என்றால் சொல்லப்படவில்லை. சொல்ல விரும்பவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய விடுதலையைப் போலவே புதுச்சேரியின் விடுதலையும் ஒரு குறிப்பிட்ட தேசிய இயக்கத்திற்குத்தான் சொந்தமானது என்று புனையப்பட்ட புனைவுகளையே உண்மையென்று நம்பிக்கொண்டிருப்பவர்கள் நாம். ஆனால் வரலாற்றின் பக்கங்கள் பொய்பேசுவதில்லை. தோழர் சுப்பையாவின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பு யாராலும் மறுக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாதது. தோழர் தமிழ்நெஞ்சன் இந்நூலின் வழியாகத் தம் வரலாற்றுக் கடமையைச் செவ்வனே ஆற்றியுள்ளார். புதுச்சேரியின் இடதுசாரி இயக்கம் குறித்த சரியான புரிதல்களோடும் வரலாற்றுணர்வோடும்  எழுதப் பட்டிருக்கும் இக் கவிதைநூல் உரிய காலத்தில் வெளிவருகின்றது. தமிழுலகம் இதனை ஏற்றுப் போற்றும் என்பதில் ஐயமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-2164518269162437390?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/2164518269162437390/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=2164518269162437390&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/2164518269162437390'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/2164518269162437390'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2012/01/blog-post.html' title='புதுவைத் தமிழ்நெஞ்சனின் &quot;தோழர் வ.சுப்பையா&quot; நூல் அணிந்துரை'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-9151297685851009826</id><published>2011-08-29T19:01:00.003+05:30</published><updated>2011-08-29T19:01:43.732+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க இலக்கிய ஆய்வு'/><title type='text'>பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை -பகுதி-1</title><content type='html'>&lt;b&gt;பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு&lt;br /&gt;(கொற்றவை வழிபாட்டை முன்வைத்து)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;பரிணாம வளர்ச்சியில் மரத்தைவிட்டுக் கீழிறங்கி இரண்டு கால்களால் நடக்கத் தொடங்கிய மனித இனத்தின் ஆறாவது அறிவுக்கு வாய்த்த முதல் அனுபவம் அச்சம்தான். இயற்கையின் எல்லையற்ற ஆற்றலும் விநோதங்களும் ஆபத்துக்களும் மனிதனுக்கு அச்ச மூட்டிக்கொண்டே இருந்தன. இயற்கையோடு இயைந்திருந்த விலங்குகளுக்கு இல்லாத அச்சம் இயற்கையோடு முரண்படுகிற, போராடுகிற, வெற்றிபெறக் கருதுகிற மனித இனத்துக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உலக உருண்டை உருவாகிப் பலகோடிக் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்பாராத விபத்துபோல் இப்புவியில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய உலகின் கோடிக்கணக்கான உயிரினங்களுக்குத் தேவைப்படாத கடவுள் சில இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய பூமியின் கடைசி உயிரினமான மனிதர்களுக்குத் தேவைப்பட்டதன் ரகசியமே இந்த அச்சம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;இப்புவியின் ஆதி மனிதர்களுக்கு இயற்கையே அச்சம் தரத்தக்கதாய் இருந்த நிலை காலப்போக்கில் மாற்றமடைந்து இந்த இயற்கைக்குள் இருந்து இயங்கும் ஏதோ ஒன்று அச்சம் தரத்தக்கதாய் இருக்கிறது என்று தோன்றியது. ஆதி மனிதர்களின் கடவுள் தோற்றக் கதைகளின் தொடக்கம் இதுதான். &lt;br /&gt;தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைப்பதில் பெரும்பங்காற்றுவன பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியமும் தொல்காப்பியமுமே. பழந்தமிழர் வழிபாட்டு வரலாற்றை எழுதுவதிலும் இந்நூல்களே தக்க ஆதாரங்களாயிருக்கின்றன. ஆனால் சங்க இலக்கியங்கள் என்று நாம் குறிப்பிடும் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஒரே காலத்தில் படைக்கப்பட்ட இலக்கியங்களல்ல. சற்றேறக்குறைய ஐநூறு ஆண்டுக்கால (கி.மு. 3ஆம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான) அகப்புற இலக்கியங்களின் தொகுப்புகள் அவை. சங்க இலக்கியங்கள் பதிவுசெய்யும் பழந்தமிழர் வாழ்க்கை மேற்குறிப்பிட்ட ஐநூறு ஆண்டுகாலத் தமிழர்களின் வாழ்க்கை மட்டுமன்று. பாடல்கள் உருவான சமூகத்திற்கு முந்தைய சுமார் ஆயிரம் ஆண்டுக்காலத் தமிழர் வாழ்க்கையின் பதிவுகள் இச்சங்க இலக்கியங்களிலே புதைவடிவங்களாகப் பதிவாகிக் கிடக்கின்றன.&lt;br /&gt; &lt;br /&gt;ஆக, கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ஆண்டுக்காலப் பழந்தமிழர் வாழ்க்கைப் பதிவுகளின் ஆவணமாகக் கிடைத்திருக்கும் சங்க இலக்கியங்களிலிருந்து நாம் பெறும் பழந்தமிழர் சமய வழிபாட்டுக் குறிப்புகள் யாருடையவை? அதாவது எத்தகு சமுதாயத்தின் பதிவுகள் என்ற வினா எழுவது இயல்பே. ஏனெனில் நம் பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்களில் தமிழர்களின் தொல்குடிச் சமூகம், இனக்குழுச் சமூகம், சீறூர்ச் சமூகம், பேரரசுகளின் சமூகம் என பல படித்தான சமூக அமைப்புகளும் அச்சமூக வாழ்க்கைப் பதிவுகளும் பல அடுக்குகளாக இடம்பெற்றுள்ளன. வேறுவகையில் குறிப்பிட வேண்டுமென்றால் பழந்தமிழர்களின் வேட்டைச் சமூகம், ஆநிரை வளர்ப்புச் சமூகம், வன்புல உணவு உற்பத்திச் சமூகம், மென்புல உணவு உற்பத்திச் சமூகம், வணிகச் சமூகம் எனப்பல அடுக்குகளில் பழந்தமிழ்ச் சமூகம் குறித்த பதிவுகள் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. எனவே பழந்தமிழ் இலக்கியச் சான்றுகளைக் கொண்டு பழந்தமிழர் சமய வழிபாட்டுக் குறிப்புகளைத் திரட்டுவதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சூரும் அணங்கும்: &lt;/b&gt;&lt;br /&gt;பழந்தமிழர் இயற்கையைக் கண்டு அஞ்சிய மனநிலையியிலிருந்து கொஞ்சம் தெளிந்து தேறி இயற்கைப் பொருட்களான காடும், மலையும், மரங்களும், நீர்நிலைகளும் அச்சந் தரத்தக்கன அல்ல என்றும் இயங்கும், இயக்கும் அச்சந்தரத்தக்க ஏதோ ஒன்று அதில் உறைகின்றது அதுவே நாம் அஞ்சத்தக்கது என்றும் கருதினர். அச்சம் தரும் அந்த இயற்கை இகந்த ஆற்றலை, சூர் என்றும் அணங்கு என்றும் குறிப்பிட்டனர். அணங்கு, சூர் என்னும் இப்பெயர்கள் துன்பம், அச்சம் என்னும் பொருள் தருவன. அணங்கு என்றால் துன்பம் தருவது என்று பொருள்;. சூர் என்னும் சொல்லுக்கு அச்சம் என்பது பொருள். ஆரணங்கு என்பது மிக்க துன்பத்தைத் தருபவள் என்று பொருள்படும். சூரர மகள் என்னும் சொல்லுக்கு அச்சம் தரும் தெய்வப் பெண் என்பது பொருளாகும். தொடக்கத்தில் சூரும் அணங்கும்  உருவமற்றனவாகவே கற்பித்துக் கொள்ளப்பட்டன. பின்னர் அவை உருவுடையனவாகவும் அதே சமயத்தில் பால் பேதமற்றனவாகவும் பேசப்பட்டன. காலப் போக்கில் சூரும் அணங்கும் பெண்களாக பாவிக்கப்பட்டன. சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தில் கடவுள் உருவாக்கம் என்ற கட்டுரையில், &lt;br /&gt;&lt;br /&gt;காடு, மலை, கடல், சுரம் முதலான பழைய கால நாகரிகப் பகுதிகளில் வாழ்ந்த குடிகளிடம் தாங்கள் வாழ்ந்த இயற்கைப் பகுதிகளான மரங்கள், மலைச்சாரல்கள், மலை உச்சிகள், காடுகள், மலைச்சுனைகள், நீரூற்றுகள், நீர்நிலைகள், கடல்துறைகள், காட்டுப்பூகள், பிலங்கள், ஆள் அரவமற்ற இடங்கள், இரவுக்காலம் .. ஆகியவற்றில் கடவுள், சூர், அணங்கு, சூலி, முருகு ஆகியவை தங்கின, நடமாடின என்ற நம்பிக்கை வெகு ஆழமாக வேர்விட்டிருந்ததைப் பாடல்களின் வழியாகக் காணலாம். மேற்கூறியவை மனித உருவம் உடையனவா என்பது தெளிவுறுவில்லை. (ராஜ் கௌதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், ப. 176)&lt;br /&gt;என்று குறிப்பிடும் ராஜ் கொளதமனின் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;அணங்குடைச் சிலம்பு, அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, அணங்குடை நெடுவரை, சூருடைச் சிலம்பு, சூர் உறை வெற்பு, அணங்குடை முந்நீர், சூருடை நனந்தலைச் சுனை, நிறை சுனை உறையும் சூர்மகள் முதலான சங்க இலக்கியச் சொல்லாட்சிகள் மலை, மலைச்சாரல், நீர்ச்சுனை, நீர்நிலை முதலான இயற்கைப் பகுதிகளில் சூரும் அணங்கும் குடிகொண்டிருந்தன என்ற சங்ககால மக்களின் நம்பிக்கைகளுக்கான அகச்சான்றுகளாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உருவம் இனங்காண இயலா நிலையில் சொல்லப்பட்ட சூரும் அணங்கும் காலப்போக்கில் பெண்தெய்வங்களாகக் கற்பிக்கப்பட்டன. சூர் என்பது சூர்மகள், சூரர மகளிர் என்றும் அணங்கு என்பது அர மகளிர், ஆரர மகளிர், ஆரணங்கு என்றும் வழங்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நம்படப்பைச்&lt;br /&gt;சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து&lt;br /&gt;தாம்வேண்டு உருவில் அணங்குமார் வருமே .. ..&lt;/b&gt; (அகநானூறு. 158)&lt;br /&gt;&lt;br /&gt;என்ற அகநானூற்றின் பாடல்பகுதியில் அணங்கு தான் வேண்டிய உருவெடுத்து வரும் என்றும் இப்பொழுது மலைப்பூக்களைச் சூடிக்கொண்டு அணங்கு பெண்ணாக வந்திருக்கின்றாள் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளமையை நோக்க அணங்கும் சூரும் விரும்பும் வடிவம் எடுத்து மக்களை அச்சுறுத்தும் என்ற அடுத்த காலக்கட்டத்து நம்பிக்கையை அறிந்துகொள்ள முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;	சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள இத்தகு சூர், அணங்கு முதலான வருத்தம் மற்றும் அச்சத்தைத் தரும் இயற்கை இகந்த ஆற்றல்களே பின்னர்ப் பல கிளைகளாகக் கிளைத்துப் பல்வகை நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றன. குறிப்பாகப் பழந்தமிழ் மக்களின் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடக்கத்தை இத்தகு சூர், அணங்கு முதலான இயற்கை இகந்த ஆற்றல்களிலிருந்தே நாம் இனங்காண முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சூரும் அணங்கும் கொற்றவையாதல்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;	தொல்குடிச் சமூகத்தில் தோற்றம் பெற்ற இத்தகு இயற்கை ஆற்றல்கள் குறித்த அச்சமே சமூகத்தில் ஒவ்வொரு அடுத்த கட்ட வளர்ச்சியிலும் புதுப் புது தெய்வங்களைப் படைத்துக்கொள்ள உந்தித் தள்ளியது. தொல்குடிச் சமூகத்தின் அடுத்த கட்டம் வேட்டைச் சமூகம், இது குறிஞ்சி நில வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது. அதற்கடுத்த காலக்கட்டம் கால்நடை வளர்ப்பு மேய்ச்சல் வாழ்க்கையும் தொடர்ந்த வன்புல பயிர்த்தொழில் வாழ்க்கையும் இது முல்லைநில வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது. அதற்கடுத்த காலக்கட்டம் மென்புலப் பயிர்த்தொழில் வாழ்க்கை இது மருதநில வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது. அதற்கடுத்த காலக்கட்டம் வணிகவாழ்க்கை அது மருதம் மற்றும் நெய்தல் நில வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது. இத்தகு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளும் சமூக வளர்ச்சிப் போக்குகளும் பதிவாகியுள்ள நம் சங்க இலக்கியங்களில் பழந்தமிழர் வழிபாட்டின் வளர்ச்சி மற்றும் மாற்றம் குறித்த படிநிலைகளையும் நாம் இனங்காண முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;	அணங்குடைச் சிலம்பு, அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, அணங்குடை நெடுவரை, சூருடைச் சிலம்பு, சூர் உறை வெற்பு என்றெல்லாம் மலை, மலையுச்சி, மலைச்சாரல்களில் வசிப்பதாகப் பேசப்பட்ட அணங்கும் சூரும் குறிஞ்சியிலிருந்து இறங்கி முல்லை நிலமாகிய காடுகளில் இடம் பெயர்ந்தபோது &lt;b&gt;கானமர் செல்வி &lt;/b&gt;(அகநானூறு. 345) என்றும் &lt;b&gt;காடுறை கடவுள் (காடுறை கடவுள் கடன் கழிப்பிய பின்றை- பொருநர். வரி.42) &lt;/b&gt;என்றும் அழைக்கப்பட்டுப் பின்னர், &lt;b&gt;பெருங்காட்டுக் கொற்றி (கலித். 89-8) &lt;/b&gt;ஆகிப் பின்னர் &lt;b&gt;கொற்றவை (பரி.11) &lt;/b&gt;ஆகவும் மாற்றம் பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;குறிஞ்சி (வேட்டைச் சமூகம்)		&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-சூர், அணங்கு &lt;br /&gt;பழையோள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முல்லை (வன்புல பயிர்த்தொழில்)	&lt;/b&gt;	&lt;br /&gt;&lt;br /&gt;கானமர் செல்வி &lt;br /&gt;காடுறை கடவுள் &lt;br /&gt;காடுகிழாள் &lt;br /&gt;பெருங்காட்டுக் கொற்றி&lt;br /&gt;கொற்றவை&lt;br /&gt;&lt;br /&gt;	குறிஞ்சிநில வேட்டைச் சமூக வாழ்க்கையிலிருந்து கால்நடை வளர்ப்பு, வன்புலப் பயிர்த்தொழில் வாழ்க்கையாகிய முல்லைநில வாழ்க்கைக்குப் பழந்தமிழ்ச் சமூகம் மாற்றம்பெற்ற தருணத்தில்தான் தாய்வழிச் சமூகம் உருவாயிற்று. இத்தகு தாய்த் தலைமைச் சமூகத்தில்தான் தாய்த்தெய்வ வணக்கம் தோன்றி நிலைபெற்றிருக்க வேண்டும். அக்காலக் கட்டத்துத் தாய்த்தெய்வம்தான் பெருங்காட்டுக் கொற்றி என்றழைக்கப்பட்ட கொற்றவை. நா.வானமாமலை அவர்களின் பின்வரும் எடுத்துக் காட்டு மேற்சொன்ன கருத்துக்கு வலிமை சேர்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறிஞ்சிநிலமக்கள் வேட்டைத் தொழிலிலிருந்து புராதனப் பயிர்த் தொழிலுக்குத் திரும்பிய காலத்தில் புன்புலப் பயிர் செய்யத் தொடங்கினார்கள். அக்காலத்தில் பெண்கள் ஆதிக்கம் பெறத் தொடங்கினார்கள். ஆகவே காட்டில் பெண்கள் பயிர்செய்யத் தொடங்கிய காலத்தில் காடுகிழாளும் தோன்றினாள் (நா.வானமாமலை, தமிழர் வரலாறும் பண்பாடும் ப. 76) &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-9151297685851009826?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/9151297685851009826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=9151297685851009826&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/9151297685851009826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/9151297685851009826'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/08/1.html' title='பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை -பகுதி-1'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-5517391293226738197</id><published>2011-08-29T18:55:00.000+05:30</published><updated>2011-08-29T18:55:30.635+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க இலக்கிய ஆய்வு'/><title type='text'>பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு - கொற்றவை -பகுதி-2</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பழந்தமிழர் கொற்றவை வழிபாடு:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழந்தமிழர் தாய்த்தய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம், கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு பெண்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் சங்க அகப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. அத்தகு குறிப்புகளைத் திரட்டி ஒருங்கு வைத்து ஆய்கையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பெண்தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள், தாய்த் தெய்வங்கள் என இருவேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டாலும் அவை தாய்த் தெய்வங்களே. பி.எல்.சாமி அவர்களின் கூற்று இக்கருத்துக்கு துணை நிற்பதாகும். “தாய்த் தெய்வத்தைத் தாயாகவும் கன்னியாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப்பழங்காலத்திலிருந்தே மரபாக உள்ளது. அவளை எல்லோரையும் பெற்ற தாயாகக் கருதுவதும் அழியாக் கன்னியாகக் கருதுவதும் சுமேரியா, எகிப்து, அசீரியா, இந்தியா ஆகிய நாடுகளின் பழைய நாகரிகங்களில் காணப்படுகின்றது.” (பி.எல்.சாமி, தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, ப.34) ஆக சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கெழு செல்வியும் (அகம். 370) கானமர் செல்வியும் (அகம். 345) தாய்த் தெய்வங்களே. &lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியங்களில் இடம்பெறும் தாய்த் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள், அத்தெய்வம் காட்டை இருப்பிடமாகக் கொண்டவள் என்ற பொருளிலேயே கையாளப் பட்டுள்ளன. பதிற்றுப்பத்தில் இடம்பெறும் அயிரை என்ற தெய்வம் மலையை இருப்பிடமாகக் கொண்டது. கடல்கெழு செல்வியைத் தவிர பிற இடங்களிலெல்லாம் காடு, மலை, மலைச்சாரல், மலைச்சுனை சார்ந்தே தாய்த் தெய்வங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அயிரையும் கொற்றவையும்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியங்களில் சேரர் இலக்கியம் என்ற பெருமைபெற்ற பதிற்றுப்பத்தில் மூன்று பாடல்கள் அயிரை என்ற தெய்வம் பற்றிப் பேசுகின்றன (பதிற்றுப்பத்து: 79, 88, 90) இரண்டு பாடல்கள் அயிரை மலையைக் குறிப்பிடுகின்றன. (பதிற்றுப்பத்து: 21, 70)  சேரர்களின் அயிரை மலையில் உறையும் தெய்வம் அயிரை என்றழைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நிறம்படு குருதி புறம்படின் அல்லது,&lt;br /&gt;மடைஎதிர் கொள்ளா அஞ்சுவரு மரபின்&lt;br /&gt;கடவுள் அயிரையின் நிலைஇ,&lt;br /&gt;கேடு இலவாக, பெரும! நின் புகழே! 	&lt;/b&gt;		-(பதிற்றுப்பத்து. 79)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;.. .. குருதி &lt;br /&gt;விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு&lt;br /&gt;உருகெழு மரபின் அயிரை பரைஇ, 	&lt;/b&gt;		-(பதிற்றுப்பத்து. 88)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உருகெழு மரபின் அயிரை பரவியும், 		&lt;/b&gt;	-(பதிற்றுப்பத்து. 90)&lt;br /&gt;&lt;br /&gt;பதிற்றுப்பத்தின் இம்மூன்று பாடல்களிலும் இடம்பெறும் அயிரை வழிபாட்டைக் கொற்றவை வழிபாடு என்றே பழைய உரைக்குறிப்பை ஒட்டி உரையாசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தும்பை சூடிப் பொருதலில் அமைந்த மெய்யிடத்தே யுண்டாகிய அசைவு பற்றிப் பிறந்த ஓய்ச்சலுடன்; மார்பிற்பட்ட புண்ணிடத்தொழுகும் குருதியாற் புறத்தே தெளிக்கப்பட்டாலன்றிக் கொடுக்கப்படும் படைச்சலை (பலியை) யேற்றுக் கொள்ளாத அச்சம் பொருந்திய முறைமை யினையுடைய கொற்றவை வீற்றிருக்கின்ற அயிரை மலைபோல நின் புகழ்களும் நிலைபெற்றுக் கெடாது விளங்குவனவாக (ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பதிற்றுப்பத்து உரை)&lt;br /&gt;&lt;br /&gt;பழைய உரைக் குறிப்பைக் கொண்டு அயிரையைக் கொற்றவை என்று ஒளவை அவர்கள் எழுதும் உரையின் பொருத்தம் ஆய்வுக்குரியது. அயிரையைப் பெண் தெய்வமாக/ தாய்த்தெய்வமாகக் கொள்வது ஓரளவு பொருந்தக்கூடியதே. ஆனால் கொற்றவை என்று வலிந்து பொருள்கொள்வதால் தாய்வழிச் சமூகத்தின் வழிபடு தெய்வமான கொற்றவை, நிலவுடைமைச் சமூகமாகவும் பேரரசுச் சமூகமாகவும் மாறிவிட்ட சேர மன்னர்கள் காலத்திலும் அதேநிலையில் வழிபடப்பட்டது என்று பொருள் கொள்ளப்படும். கொற்றவையோடு தொடர்பு படுத்தக் கூடிய எந்தவிதக் குறிப்புமற்று கடவுள் அயிரை என்றும் உருகெழு மரபின் அயிரை என்றும் சொல்லப்பட்டதன் பின்னணி கவனிக்கத்தக்கது. ஆகவே, அயிரையைத் தனித் தெய்வமாகக் கொள்ளாமல் அயிரை என்ற நெடுவரையே சேரர்களின் வழிபடு தெய்வமாய் தொழப்பட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-5517391293226738197?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/5517391293226738197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=5517391293226738197&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/5517391293226738197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/5517391293226738197'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/08/2.html' title='பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு - கொற்றவை -பகுதி-2'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-8958405622308762423</id><published>2011-08-29T18:46:00.003+05:30</published><updated>2011-08-29T18:46:59.393+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க இலக்கிய ஆய்வு'/><title type='text'>பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு - கொற்றவை -பகுதி-3</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொல்காப்பியரும் கொற்றவையும்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களுக்குமான தலைமைத் தெய்வங்களைக் குறிப்பிடும் இடத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மாயோன் மேய காடுஉறை உலகமும்&lt;br /&gt;    	சேயோன் மேய மைவரை உலகமும்&lt;br /&gt;    	வேந்தன் மேய தீம்புனல் உலகமும்&lt;br /&gt;    	வருணன் மேய பெருமணல் உலகமும்  &lt;/b&gt;- (தொல். அகத். நூ. 5) &lt;br /&gt;&lt;br /&gt;என மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என நான்கு நிலத்திற்கும் ஆண் தெய்வங்களையே தலைமைத் தெய்வங்களாகக் குறிப்பிட்டுள்ளார். தாய்த்தலைமைச் சமூகம் மாற்றம் பெற்றுத் தந்தைத் தலைமைச் சமூகம் நிலைபெற்றுவிட்ட நிலவுடைமைச் சமூகத்தின் கருத்தாக்கமே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வெளிப்படையாய்ப் பதிவு பெற்றுள்ளது. முல்லைக்கும் குறிஞ்சிக்கும் சொல்லப்பட்ட மாயோன், சேயோன் ஆகிய திருமாலும் முருகனும் தமிழ் மரபு சார்ந்த தெய்வங்கள். ஆனால் மருதத்திற்கும் நெய்தலுக்கும் சொல்லப்பட்ட வேந்தன் எனப்பட்ட இந்திரனும், வருணனும் தமிழ் மரபிற்கு அயலான தெய்வங்கள், வைதீக மரபுத் தெய்வங்கள். சங்க இலக்கியங்களில் ஓரிடத்தும் திணை சார்ந்தோ வேறெந்தத் தமிழ் வழிபாட்டு மரபு சார்ந்தோ குறிப்பிடப்படாத இந்திரனும் வருணனும் தமிழர்களின் நானிலத் தலைமைத் தெய்வங்களாயினமை மிகுந்த சிக்கலுக்குரியது. பழந்தமிழகத்தில் மக்கள் மத்தியில் பெருவழக்காயிருந்த கொற்றவை அல்லது வேறு பெயரிலான தாய்த் தெய்வங்கள் எதனையும் தொல்காப்பியர் திணைத் தலைமைத் தெய்வங்களாகக் குறிப்பிடாதது வியப்பிலும் வியப்பே. வைதீகச் சமயக் கருத்துக்கள் சங்க காலத்திலேயே தமிழகத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கிவிட்டன என்ற அடிப்படையில் தொல்காப்பியரின் நானிலத் தலைமைத் தெய்வக் கோட்பாட்டை வைதீகப் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவு என விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;	கொற்றவை வழிபாடு குறித்துச் சங்க இலக்கியங்கள் உரிய குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. கொற்றவை என்ற பெயரும் பெருங்காட்டுக் கொற்றி என்ற பெயரும் சங்க இலக்கியங்களில் பிற்பட்டனவாகக் கருதப்படும் பரிபாடல், கலித்தொகைகளில் தாம் இடம்பெற்றுள்ளன. சிலம்பு நா. செல்வராசு தம் ஆய்வொன்றில் சங்க காலத்துக் கொற்றவை குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை. &lt;b&gt;பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலி.89)&lt;/b&gt; எனவும் &lt;b&gt;நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண் (பரி.11)&lt;/b&gt; எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே, &lt;b&gt;கொற்றவைச் சிறுவன் (திரு.முருகு. .250) &lt;/b&gt;என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப் பட்டுள்ளது. &lt;b&gt;விறல் கெழு சூலி (குறு. 218) &lt;/b&gt;எனவும்&lt;b&gt; உருகெழு மரபின் அயிரை (பதி. 79,90) &lt;/b&gt;எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர். .. .. அச்சம் தரத்தக்க இத்தெய்வம் வெற்றிக்குரியவள் என்பதும் அவள் முருகனது தாய் என்பதும் அவள் மலைஃகாடு வாழ் தெய்வம் என்பதும் மேல் குறிப்புகள் தரும் தகவல்கள் ஆகும். இவைதவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை. (சிலம்பு நா.செல்வராசு, சங்க இலக்கிய மறுவாசிப்பு, ப. 12)&lt;br /&gt;&lt;br /&gt;கொற்றவை குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் குறைவாக உள்ளமைக்குக் பல்வேறு சமூக மானிடவியல் காரணங்களை நாம் சொல்லமுடியும். குறிப்பாக, குறிஞ்சி, முல்லை வாழ்க்கையும் இனக்குழுச் சமூக அமைப்பும் மாற்றம் பெற்று மென்புலப் பயிர்த்தொழிலும் வணிகமும் நிலைபெற்றுவிட்ட நிலவுடைமைச் சமூக அமைப்பில்தான் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. தொகுப்புக் காலத்தின் சமூக, சமய, அரசியலுக்கு ஏற்பவே சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் என்பதில் கருத்து வேற்றுமை இருக்கமுடியாது. ஆனாலும் சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு புதை அடுக்குகளாகத் தமிழர்களின் முந்தைய தொல்குடிச் சமூகம் தொடங்கி அனைத்துச் சமூகப் பண்பாட்டு எச்சங்களும் இடம்பெற்றுள்ளமை இவ்விலக்கியங்களின் தனிச்சிறப்பு. திருமால், முருகன் குறித்த பாடல்களைக் கொண்ட பரிபாடலில் காடுகிழாளாகிய கொற்றவைக்கும் ஒருபாடல் இருந்ததாக ஒரு பழைய குறிப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;	&lt;b&gt;திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்&lt;br /&gt;தொருபாட்டுக் காடுகாட்கு ஒன்று – மருவினிய&lt;br /&gt;வையைஇரு பத்தாறு மாமதுரை நான்கென்ப&lt;br /&gt;செய்ய பரிபாடல் திறம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரிபாடல் பாடல் எண்ணிக்கை மற்றும் பகுப்புகளைக் குறிப்பிடும் மேற்சொன்ன பழம்பாடலில் இடம்பெறும் காடுகாட்கு ஒன்று என்ற செய்தி காடுகாள் -காடுகிழாள் ஆகிய கொற்றவை குறித்த பரிபாடல் பதிவுக்குத் தக்க சான்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;	தொல்காப்பியர் திணைத் தலைமைத் தெய்வமாகக் கொற்றவையைக் குறிப்பிடவில்லை என்றாலும் தம் புறத்திணையியல் வெட்சித்திணைப் பகுதியில் புறநடைத் துறையாக கொற்றவை நிலை என்ற துறையினைக் குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த &lt;br /&gt;கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே 	&lt;/b&gt;	(தொல். புறத். 4)&lt;br /&gt;என்பது அந்நூற்பா.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்சித்திணையின் துறைகளை அடுக்கிச் சொன்ன நூற்பாவை அடுத்ததாக இப்புறநடை நூற்பாவைப் படைக்கும் தொல்காப்பியர். கொற்றவை நிலையை வெட்சித்திணைக்குப் புறனாக அமைக்கின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு புறநடையாகக் குறிப்பிடப்பெறும் எதுவுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டச் சமுதாயத்தில் முதன்மைத் தன்மையுடன் இருந்திருக்க வேண்டும் என்பது இயல்பு. இந்த வகையில் இத்தெய்வம் பண்டைய சமுதாயத்தில் ஒரு தனித் தெய்வமாய் இருந்துள்ளது என்பதற்கு இத்தொல்காப்பியத் துறைப்பகுப்பே சிறந்த சான்று. மாடு பொருளாதாரமாய்க் கருதப்பட்ட ஒரு சமுதாயத்தின் போர்முறையே வெட்சிப்போர். இதனால் தொல்காப்பியர் வெட்சித் திணையில் குறிப்பிட்டுள்ள கொற்றவை வழிபாட்டையும் ஒரு பழஞ்சமுதாய வழிபாடாய்க் கருதலாம். (பெ.மாதையன், தொன்மமும் சங்ககாலப் பெண்டிர் நிலையும்)&lt;br /&gt;&lt;br /&gt;தொல்காப்பியர் வெட்சித்திணையில் கொற்றவை வழிபாட்டினைக் குறிப்பிடுகின்ற காரணத்தால், வெட்சியின் புறனாகிய குறிஞ்சிக்கும் கொற்றவை நிலை உரியதாகின்றது. கொற்றவைநிலை நூற்பாவிற்கு உரையெழுதும் இளம்பூரணர், கொற்றவைநிலை என்றதனாலே, குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம் என்பார். நச்சினார்க்கினியர் கூடுதலாக, வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின் என்று விளக்கம் கூறுவர். ஆக நச்சினார்க்கினியர் உரை கொற்றவை நிலையை வெட்சிக்கும் வஞ்சிக்கும் உரியதாகக் குறிப்பிடுவதிலிருந்து வெட்சிக்கும் வஞ்சிக்கும் புறனான திணைகளான குறிஞ்சிக்கும் முல்லைக்கும் கொற்றவைநிலை உரியதாகின்றது. தொல்காப்பியரின் ஒரு புறநடைக் குறிப்பைக் கொண்டு, கொற்றவை வழிபாடு குறிஞ்சிக்கும் முல்லைக்கும் உரிய பழந்தமிழர் வழிபாடு என்பதனை உறுதிசெய்ய முடிகின்றது. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் உரிய தெய்வம் பாலைக்கும் தெய்வமாகும் என்பது வெளிப்படை. ஏனெனில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து &lt;br /&gt;நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப் &lt;br /&gt;பாலை என்பதோர் படிவம் கொள்ளும்  &lt;/b&gt;-(சிலப்பதி. காடுகாண். 64-66))&lt;br /&gt;&lt;br /&gt;என்ற சிலப்பதிகார மேற்கோளின் அடிப்படையில் முல்லையும் குறிஞ்சியும்தான் பாலை, பாலைதான் முல்லையும் குறிஞ்சியும். பிற்கால இலக்கண இலக்கிய நூல்கள் கொற்றவையைப் பாலைநிலக் கடவுளாகக் கருதியமைக்கு அதுவே காரணம். குறிஞ்சியும் முல்லையும் கடுங்கோடையில் பாலைநிலமாக வறண்டு போன பொழுதில் வழிபட ஒரு தெய்வமும் மழைபெய்து செழிப்பான போதில் வழிபட ஒரு தெய்வமும் என் ஆண்டுக்கு இருமுறை மாறிமாறி வழிபடு தெய்வங்கள் மாற்றம் பெற்றன எனக்கொள்வது பொருந்தாது. தொடக்கத்தில் குறிஞ்சிக்கும் பின்னர் முல்லைக்கும் வழிபடு தெய்வமாயிருந்த தாய்த்தெய்வம் கொற்றவையே பாலை நிலத்துக்கும் வழிபடு தெய்வமாகிப் பின்னர் பாலைக்குரிய தெய்வம் கொற்றவை என்ற மரபு நிலை பெற்றிருக்கும் எனக்கொள்வது பொருந்தக்கூடியதே.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-8958405622308762423?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/8958405622308762423/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=8958405622308762423&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8958405622308762423'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8958405622308762423'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/08/3.html' title='பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு - கொற்றவை -பகுதி-3'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-3503897400027036006</id><published>2011-08-29T18:39:00.002+05:30</published><updated>2011-08-29T18:39:43.992+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க இலக்கிய ஆய்வு'/><title type='text'>பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை -பகுதி-4</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிலம்பும் கொற்றவையும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள்தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன. ஆறலைக் கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர்கள் வணங்கும் கடவுளாகக் கொற்றவை வேட்டுவவரியில் சித்திரிக்கப் பெற்றுள்ளாள். ஆறலைக் கள்வர்களாகிய எயினர்களைப் பாலை நிலத்தில் வாழ்வோராகவும் வழிப்பறி செய்வோராகவும் கொள்ளை அடிப்போராகவும் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.  எயினர் மறக்குணம் வாய்ந்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையப்பொருளாகும். &lt;br /&gt;&lt;br /&gt;கொற்றவை வழிபாடு பற்றிய முழுமையான தகவல்களைத் தம் காலத்து வைதீகச் சார்போடு படைத்துக்காட்டும் இளங்கோடிகள் கொற்றவையைக் குறிப்பிடும் பல்வேறு பெயர்களை இடையிடையே பெய்து தம் வேட்டுவவரியை அமைக்கின்றார். அப்பெயர்களில் சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாயிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;கலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, ஐயை, கண்ணுதல் பாகம் ஆளுடையாள், திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள், பாய்கலைப் பாவை முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடும் இளங்கோவடிகள் ஓரிடத்தும் அயிரை என்ற சொல்லைக் கையாளவில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. பற்றுப்பத்து குறிப்பிடும் அயிரை வழிபாடு என்பது கொற்றவை வழிபாடாயிருக்குமாயின் சேரநாட்டு இலக்கியமான சிலப்பதிகாரம் அதனைக் கண்டிப்பாகப் பதிவுசெய்திருக்கும். செல்வி, ஐயை, அணங்கு முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடும் சிலம்பு பழந்தமிழர்களின் குறிஞ்சி, முல்லைநிலச் சமூகத்தின் தாய்த்தெய்வமே இக்கொற்றவை என்பதனையும் தவறாமல் பதிவு செய்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;சிலம்பின் இவ்வேட்டுவவரி பழந்தமிழர்களின் கொற்றவை வழிபாடு குறித்த தகவல்களின் களஞ்சியமாக இளங்கோவடிகளால் படைக்கப்பட்டுள்ளது. எயினர் குலக் குமரி ஒருத்திக்குக் கொற்றவைக் கோலம் புனைந்த செய்தி முதலில் பேசப்படுகின்றது. (சிலம்பு. வேட்டுவவரி, 21-35) கொற்றவையின் உருவம் குறித்த முதல்பதிவு அப்பகுதி. பின்னர் எயினர்கள் கொற்றவையைப் புகழ்ந்து பாடும் வழிபாட்டுப் பகுதியில் கொற்றவையின் உருவம் குறித்த வருணனை மீண்டும் விரிவாக எடுத்துரைக்கப் படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி&lt;br /&gt;நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் 	&lt;br /&gt;பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி&lt;br /&gt;நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து&lt;br /&gt;அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்&lt;br /&gt;துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வளையுடைக் கையிற் சூல மேந்தி 	&lt;br /&gt;கரியின் உரிவை போர்த்தணங் காகிய&lt;br /&gt;அரியின் உரிவை மேகலை யாட்டி&lt;br /&gt;சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி&lt;br /&gt;வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் 	&lt;br /&gt;தலைமிசை நின்ற தையல்		&lt;/b&gt;(சிலம்பு. வேட்டுவவரி, 54-66)&lt;br /&gt;&lt;br /&gt;“பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள்” &lt;br /&gt;&lt;br /&gt;என்றெல்லாம் கொற்றவையின் தோற்றம் குறித்துச் சிலம்பின் வேட்டுவவரி படைத்துக் காட்டும் வருணனையில் குறிஞ்சி, முல்லைநிலத் தாய்த்தெய்வக் கொற்றவையின் பழைய உருவம் மாற்றம்பெற்று புதிய வைதீகத் தோற்றத்தைக் காணமுடிகிறது. கொற்றவையின் புதிய தோற்றம் சிவனின் தோற்றத்தை ஒத்ததாக வருணிக்கப் பட்டுள்ளமையைக் நோக்கும்போது தாய்த்தலைமைத் தெய்வமாயிருந்த கொற்றவை, தந்தைத் தலைமைச் சமூகத்தில் ஆண்தெய்வமாம் சிவனோடு கலந்து ஒருமைப் பட்டுள்ளமையை உணர முடிகின்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;	வேட்டுவரி சித்தரிக்கும் கொற்றவையின் தோற்றத்தில் வைதீகச் சார்பு மிக்கிருந்தாலும் எயினர்களின் கொற்றவை வழிபாடு பழைய வேட்டைச் சமூக மரபுகளையே அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளமை சிலப்பதிகார வேட்டுவவரியின் தனிச் சிறப்பாகும். &lt;br /&gt;&lt;br /&gt;	&lt;b&gt;கலையமர் செல்வி கடனுணின் அல்லது&lt;br /&gt;சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்&lt;/b&gt;	(சிலம்பு. வேட்டுவவரி, 16-17)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்&lt;br /&gt;கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்&lt;/b&gt;&lt;br /&gt;						(சிலம்பு. வேட்டுவவரி, பா.13)&lt;br /&gt;&lt;br /&gt;மேலே காட்டப்பட்ட முதல் மேற்கோளில், “கொற்றவைக்குச் செய்யவேண்டிய நேர்த்திக் கடன்களைச் செலுத்தவில்லை யென்றால் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத் தரமாட்டாள்” என்றும் இரண்டாம் மேற்கோளில், “வீரர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரயைக் கவரப் போகும்போது, தான்கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும்” என்றும் வேட்டுவரி படைத்துக்காட்டும் கொற்றவை பழைய வேட்டைச் சமூகக் கொற்றவையாய் வில்லுக்கு வெற்றி தருபவளாயும், ஆநிரை கவரச் செல்லும் வீரர்களுக்கு உடன்சென்று நிரைகவரத் துணைநிற்பவளாயும் சித்தரிக்கப் பட்டுள்ளாள். இப்படி வேட்டுவவரி முழுவதிலும் பழைய வேட்டைக் கொற்றவை, வெட்சிக் கொற்றவை, புதிய வைதீக் கொற்றவை என்ற மூன்று வௌ;வேறு சமூக அடுக்குகளின் தாய்த்தெய்வ வழிபாடு மற்றும் நம்பிக்கைகள் கொற்றவை வழிபாடு என்ற ஒரே தளத்தில் காட்டப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;	பேரரசுகள் உருவாகிவிட்ட சிலப்பதிகாரக் காலத்து நிலவுடைமைச் சமூகத்தில் எயினர் மற்றும் வேடுவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய கொற்றவை வழிபாடு விரிவாகப் பாடப்பட்டதன் தேவை குறித்து, சிலம்பு நா.செல்வராசு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:&lt;br /&gt;&lt;br /&gt;தொல் தமிழகத்தில ஆநிரைச் சமூகம் வேளாண் சமூகத்தைத் தோற்றுவித்த நிலையில் வளமார்ந்த நெல் சமூகம் அமைக்கப்பெற்றது. மருதநில பொருளாதார அரசியல், எயினரையும் வேட்டுவரையும் விளிம்பு நிலை மக்களாக ஆக்கிவிட்டமையைச் சஙக இலக்கியப் பாலைத்திணைப் பாடல்கள் விவரிக்கின்றன. விளிம்பு நிலை மக்களாக மாறிய இவ்வினமக்கள் அரசு உருவாக்கத்தில் நாட்டின் மையத்திலிருந்து விடுபட்டு வழிப்பறிக் கொள்ளையர்களாக மாறியுள்ளனர். மாறவே இவ்வின மக்களின் பண்பாடு முதலியன விளிம்பு நிலைக்குத் தள்ளப் பெற்றிருக்க வேண்டும். எனவேதான் சங்க இலக்கியங்களில் கொற்றவை வழிபாடு பற்றிய செய்திகள் இடம் பெறாமல் போயின. பின்னாளில் ஒரே பேரரசு உருவாக்கம், ஒற்றைச் சமய உருவாக்கம் ஆகியவற்றிற்கான அரசியல் தொழிற்பட்டபோது எயினர், வேட்டுவர் இன மக்களைப் பேரரசு எல்லைக்குள் கொண்டு வரும் முயற்சியில் அவர்தம் வாழ்நிலை, சமயம் சார்ந்த பண்பாட்டு நிலைகள் மேனிலையாக்கம் பெறத் தொடங்கின. எனவேதான் சிலப்பதிகாரம் வேட்டுவ வரியைச் செவ்வியலாகப் புனைய வேண்டியதாயிற்று. (சிலம்பு நா.செல்வராசு, சங்க இலக்கிய மறுவாசிப்பு, பக். 126-127)&lt;br /&gt;&lt;br /&gt;பழந்தமிழர்களின் பல்வேறு சமூக அடுக்குகளின் சமய வழிபாட்டு நம்பிக்கைகளை ஒரே தளத்தில் வைத்து இளங்கோவடிகள் புனைந்தமைக்கான காரணங்களாக சிலம்பு நா.செல்வராசு குறிப்பிடும் தர்க்கம் பொருத்தமுடையதே.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-3503897400027036006?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/3503897400027036006/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=3503897400027036006&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/3503897400027036006'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/3503897400027036006'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/08/4.html' title='பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை -பகுதி-4'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-6596311041670526245</id><published>2011-08-29T18:34:00.001+05:30</published><updated>2011-08-29T19:02:07.771+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க இலக்கிய ஆய்வு'/><title type='text'>பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை - பகுதி-5</title><content type='html'>&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சங்க இலக்கியங்களில் கொற்றவை –பல தளங்களில்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள கொற்றவை குறித்த பதிவுகளை முன்பே கண்டோம். திருமுருகாற்றுப்படையில் முருகன் யாருடைய மகன் என்பதனைக் குறிப்பிடும் போது நக்கீரர் குறிப்பிடும் மூன்று தொடர்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தன. அவர் கையாளும் பழையோள், கொற்றவை, மலைமகள் என்ற மூன்று பெயர்களும் மூன்று வௌ;வேறு பழந்தமிழ்ச் சமூக அடையாளங்களைக் கொண்டதாகும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மலைமகள் மகனே! மாற்றோர்  கூற்றே!&lt;br /&gt;வெற்றி வெல்போர்க் கொற்றவைச் சிறுவ!&lt;br /&gt;இழையணி சிறப்பின் பழையோள் குழவி! 	&lt;/b&gt;	-(திரு.முரு. 257-259)&lt;br /&gt;&lt;br /&gt;புதைபொருள் ஆய்வின்போது தோண்டப்படும் குழியில் அடுக்குகள் பல காணப்படும். ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு காலப்பகுதியின் அடையாளமாகும்.. முதல் அடுக்கு அண்மைக் காலத்ததாகவும் அடுத்தடுத்த அடுக்குகள் காலப்பழமை உடையனவாகவும் இருக்கும். கடைசி அடுக்கு மிகப்பழங் காலத்தாக இருக்கும். இது புதைபொருளாய்வுக் குழியின் நிலை. திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடும் மேலே குறிப்பிட்டப் பட்டுள்ள மூன்று தொடர்களும் ஒரு புதைபொருளாய்வுக் குழியின் அமைப்பில் மேலிருந்து கீழாகக் காலப் பழமையை நோக்கிச் செல்கின்றது. &lt;br /&gt;இவ்வரிசையில் கடைசியாக இடம்பெறும் பழையோள் பழந்தமிழர் தொல்குடிச் சமூகத் தாய்த்தெய்வமாகும். அடுத்து இடம்பெற்றுள்ள கொற்றவை வேட்டை மற்றும் மேய்ச்சல் சமூகத் தாய்த்தெய்வமாகும். அடுத்து இடம்பெற்றுள்ள மலைமகள் நிலவுடைமைச் சமூக வைதீகக் கலப்புத் தாய்த் தெய்வமாகும். ஆக, சங்க இலக்கியத்திலேயே கொற்றவை வழிபாட்டின் வைதீகக் கலப்பும் முருகனின் தாய் என்று ஆண்தெய்வத்தோடு தொடர்புபடுத்தித் தாய்த் தெய்வத்தைப் பின்னுக்குத் தள்ளிய தந்தைத் தலைமைச் சமூக நிலையையும் காணமுடிகிறது. ஆயினும் கொற்றவைச் சிறுவ! என்று தாயை முன்னிறுத்தி மகன் அடையாளப்படுத்தப் படுவதால் தாய்வழிச் சமூகத்தின் மிச்ச சொச்சங்களும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;திருமுருகாற்றுப் படைக்கு முந்தைய பெரும்பாணாற்றுப்படையிலேயே சூரனைக் கொன்ற முருகனைப் பெற்ற வயிற்றினையும், பேய்களாடும் துணங்கைக் கூத்தையும் அழகையும் உடைய பெண்தெய்வம் என்னும் பொருள்படும் “கடுஞ்சூர் கொன்ற பைம்பூட் சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கைஅம் செல்வி” என்னும் குறிப்பு இடம் பெற்றுள்ளது. இக்குறிப்பில் இடம்பெறும் சேய் பயந்த செல்வி கொற்றவையே.&lt;br /&gt;இப்படிச் சங்க இலக்கியங்களில் முருகனோடு தொடர்புபடுத்தி அவன்தாய் எனக் கொற்றவை அடையாளம் காட்டப்படும் நிலையேயன்றி சிவனோடு கொற்றவையைத் தொடர்புபடுத்தும் அடையாளங்களும் இடம்பெற்றுள்ளன. பரிபாடலில் இடம்பெறும் அப்பகுதி பின்வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நெற்றி விழியா நிறைத்திலக மிட்டாளே&lt;br /&gt;கொற்றவைக் கோலங் கொண்டோர் பெண் 	&lt;/b&gt;	(பரிபாடல், 11 : 99-100)&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாடலடிகளில் கொற்றவைக் கோலம் கொண்ட பெண் ஒருத்தி நெற்றிக்கண்ணாகத் திலகமிட்டுக்கொண்ட குறிப்பு இடம்பெற்றுள்ளது. சிவனின் நெற்றிக்கண் இங்குக் கொற்றவைக்கு உரியதாய்க் காட்டப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;1.	சங்க இலக்கியம் குறிப்பிடும் வெற்றி வெல்போர்க் கொற்றவையைத்தான் வேட்டுவரியின் எயினர்கள் வணங்கிய கொற்றவை வழிபாடு குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;2.	சங்க இலக்கியம் குறிப்பிடும் பழையோள் என்ற தொல் தாய்த்தெய்வத்தைத் தான் வேட்டுவவரி அணங்கு, ஐயை முதலான பெயர்களில் குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;3.	சங்க இலக்கியம் குறிப்பிடும் மலைமகளைத்தான் வேட்டுவரியின் கொற்றவைக் கோலத்தில் நாம் காண்கிறோம். பழந்தமிழகத்தில் நிகழ்ந்த ஆரிய வைதீகக் கலப்பின் காரணமாக வடவர்களின் பெருந்தெய்வக் கோட்பாட்டுக்குள் கொற்றவையை இணைத்துத் துர்க்கையாகவும் சிவனின் மனைவியாகவும் திருமாலின் தங்கையாகவும், உமையாகவும் மாற்றிய சமயப் பண்பாட்டுக் கலப்பின் அடையாளமே இம்மாற்றம். &lt;br /&gt;ஆக, சிலப்பதிகாரம் குறிப்பிடும் கொற்றவை வழிபாடு குறித்த அனைத்துத் தகவல்களும் சங்க இலக்கியங்களிலேயே அடையாளம் காட்டப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நிறைவாக: &lt;/b&gt;&lt;br /&gt;சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள சூர், அணங்கு முதலான வருத்தம் மற்றும் அச்சத்தைத் தரும் இயற்கை இகந்த ஆற்றல்களைக் குறித்த நம்பிக்கைகளே பல்வகை வழிபாட்டுச் சடங்குகளாகப் பரிணாமம் பெற்றன. பழந்தமிழ் மக்களின் தாய்த்தெய்வ வழிபாட்டின் தொடக்கத்தை இத்தகு சூர், அணங்கு முதலான இயற்கை இகந்த ஆற்றல்களிலிருந்தே நாம் இனங்காண முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;காடுகிழாள், காடுகிழவோள், கானமர் செல்வி எனப் பழந்தமிழர்களின் தாய்த்தெய்வம் அழைக்கப்பட்டாள். இனக்குழு மக்களின் வேட்டையில் வெற்றி தருபவளாக இவள் இருந்தாள். காடுகிழாள் உணவு சேகரிக்கும் காலத்தில் பயிர்த்தொழிற் தெய்வம். வேட்டையாடும் காலத்தில் வெற்றி தரும் தெய்வம். கொற்றவையின் தொடக்கநிலை இது. இவளே குறிஞ்சிநிலத் தாய்த் தெய்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாய்த் தெய்வமே பின்னர்க் கொற்றவை எனும் தெய்வமாக வளர்ச்சி பெறுகிறது. முல்லை நிலத்தில் மேய்ச்சல் வாழ்க்கையும் வன்புலப் பயிர்த்தொழிலும் ஆரம்பமானபோது மாடுகள் செல்வமாயின. மாடுகளைக் கவர்வது முல்லை நிலப் போராகியது. வெட்சிக்குப் புறனாகக் கொற்றவை நிலையைத் தொல்காப்பியர் கூறுகிறார். முல்லை நிலக்காலத்தின் நிலை இது. &lt;br /&gt;&lt;br /&gt;முல்லையும் குறிஞ்சியும் திரிந்து பாலையான போது பாலைநிலத்திற்குரிய தாய்த்தெய்வமானாள் கொற்றவை. வேடர்களின், எயினர்களின், ஆறலைக்கள்வர்களின் வழிபடு தெய்வமான கொற்றவையே பிற்கால இக்கியங்களில் பெரிதும் இடம்பெற்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மருத, நெய்தல்நில நிலவுடைமைச் சமூகத்தில் பேரரசுகளின் காலங்களில் ஆரிய வைதீக மரபுகள் தமிழகத்துக்குள் நுழைகின்றன. முருகன் கொற்றவையின் சிறுவனானான். (திருமுருகாற்றுப் படை) கொற்றவை சிவனின் மனைவியானாள் (பரிபாடல்). தொடர்ந்து காளி துர்க்கை போன்ற தெய்வங்கள் தமிழகத்துக்கு அறிமுகமாகின்றன. தமிழரின் போருக்குரிய தெய்வமான கொற்றவையும் ஆரியரின் போருக்குரிய தெய்வமான காளியும் ஒன்றாக இணைக்கப்படுகின்றனர். &lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-6596311041670526245?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/6596311041670526245/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=6596311041670526245&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/6596311041670526245'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/6596311041670526245'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/08/5.html' title='பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாடு -கொற்றவை - பகுதி-5'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-5421202178314779515</id><published>2011-07-24T14:59:00.001+05:30</published><updated>2011-07-24T15:00:38.230+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமிய இலக்கிய ஆய்வு'/><title type='text'>சீறாவில் உமறுப்புலவர் காட்டும் புதுமை உலா -பகுதி-1</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ்ப் பேராசிரியர்&lt;br /&gt;காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி- 605008&lt;br /&gt;&lt;br /&gt;தமிழில் எழுதப்பட்ட தலைச்சிறந்த இசுலாமிய இலக்கியம் சீறாப் புராணம் ஆகும். இந்நூல் இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட ஒரு காப்பியம். இதனை இயற்றியவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப்புலவர் (கி.பி.1642-1703) ஆவார். இவர் பிறந்த ஊர் கீழக்கரை. சீறா என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் தமிழ் வடிவம். சீறத் என்னும் அரபிச் சொல்லிற்கு வரலாறு என்பது பொருள். புராணம் என்பது பழமையான வரலாறு எனப் பொருள்படும். திருநபி அவர்களின் வரலாற்றைக் கூறும் புராணம் என்பது இதன் பொருள். இக்காப்பியம் மூன்று காண்டங்களைக் கொண்டது. அவை: 1).விலாதத்துக் காண்டம், 2).நுபுவ்வத்துக் காண்டம், 3).ஹிஜ்ரத்துக் காண்டம் என்பவை ஆகும். விலாதத்துக் காண்டம் என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிறப்பு முதல் திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிக்கும் பகுதியாகும். நுபுவ்வத்துக் காண்டம் நபிப்பட்டம் அருளப்பட்டதில் இருந்து மக்கமாநகரில் நபிகள் நாயகம் வாழ்ந்த காலம்வரை நடந்த வரலாற்றினைக் கூறுவதாகும். ஹிஜ்ரத் காண்டம் என்பது மக்கமா நகரிலிருந்து மதீனா நகருக்கு நபிகள் நாயகம் புறப்பட்டுச் சென்றது முதல் அவர்களின் மதீனாநகர் வாழ்க்கையைக் கூறுவதாகும். சீறாப்புராணத்தில் மொத்தம் 92 படலங்கள் உள்ளன. நூலின் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 5,228. 18 ஆம் நூற்றாண்டில் இந்நூலை ஏடுதேடிப் பதிப்பித்து வெளியிட்டவர் புலவர் நாயகம் செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம் புலவர் (N~கனாப் புலவர்)ஆவார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உலா இலக்கியம்:&lt;/b&gt; உலா என்பது பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்ளும் வண்ணம் தலைவன் ஒருவன் வீதியில் பவனி வந்தான் என்று பாடுவதாகும். இது கலிவெண்பாவால் பாடப்படும். தொல்காப்பியர் தம் பொருளதிகாரப் புறத்திணையியலில் உலாவிற்கு இலக்கணம் கூறுகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப&lt;br /&gt;வழக்கொடு சிவணிய வகைமையான &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (தொல். பொருள். புறம். 25)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உலா இலக்கியம் பற்றிய குறிப்பு, தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணையியலிலேயே இடம்பெற்றாலும் முதன்முதலில் முத்தொள்ளாயிரம் நூலில்தான் உலா பாடுபொருளாவதைப் பார்க்கின்றோம். அதன்பின்னர் உலா இலக்கியத்தின் வளர்ச்சியைக் காப்பிய இலக்கியங்களில் காணமுடிகின்றது. காப்பியங்களில் அவற்றின் தலைவர்கள் உலாவரும் காட்சிகளை அழகுற அமைத்துப் பாடுதல் மரபு. மணம்புரிதல், வெற்றிபெறுதல் முதலிய காலங்களில் அத் தலைவர்கள் உலாவரும் செய்தி பெருங்கதை, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம் முதலான தமிழ்க் காப்பியங்களில் கூறப்பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சீறாப்புராணத்தில் நபிகள் நாயகத்தின் உலா:&lt;/b&gt;&lt;br /&gt;தமிழிலக்கிய நெடும்பரப்பில் 13 ஆம் நூற்றாண்டு தொடங்கி 16 ஆம் நூற்றாண்டு முடிய நான்கு நூற்றாண்டுகள் தமிழில் பெருங்காப்பியங்கள் ஒன்றும் படைக்கப்படவில்லை. நான்கு நூற்றாண்டுகளாகத் தமிழிலக்கியம் காணாத பெருங்காப்பிய மரபுத் தொடச்சியை மீண்டும் தொடங்கிவைத்த பெருமை உமறுப் புலவருக்கு உண்டு. பதினேழாம் நூற்றாண்டில் அவர் பாடிய சீறாப்புராணம் எனும் பெருங்காப்பியமே மீண்டும் தமிழில் பெருங்காப்பியங்கள் தோன்றப் பாதையமைத்துத் தந்தது. உமறுப்புலவர், தமிழிலக்கியக் காப்பிய மரபுகள் முழுவதையும் உள்வாங்கித் தமிழிலக்கிய மரபுக்குச் சிதைவு ஏற்படாவண்ணம் தம் காப்பியத்தைப் படைத்த அதே சமயம் இசுலாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் காப்பிய வடிவில் அமைக்கும் முயற்சியில் இசுலாமிய மரபுகளையும் பொன்னேபோல் போற்றித் தம் காப்பிய முயற்சியில் முழுமைகண்டார் என்பது பெரிதும் பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;காப்பிய நாயகர்கள் தங்களின் திருமணம் மற்றும் வெற்றிவிழா காலங்களில் உலா வருவதாகப் பாடும் தமிழ்க் காப்பிய மரபினை ஒட்டி, சீறாப்புராணக் காப்பிய நாயகராம் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகிவசல்லம் அவர்கள் தம் திருமண நிகழ்ச்சியின்போது உலா போந்ததாகப் படைக்கின்றார் உமறுப்புலவர். &lt;br /&gt;நபி பெருமானார் மணக்கோலம் பூண்டு, குதிரை மீதேறி பவனி புறப்படும் பொழுது எளியவர்களுக்குப் பொன்னும் மணியும் ஆடைகளும் வழங்குகின்றார். (தானமென ஏற்பவர்க்குப் பொன்மணி தூசெடுத் தருளி). அப்பொழுது தண்ணுமை, முருடு, துந்துபி, சிறுபறை, சல்லரி, பதலை, திண்டிமம், பேரிகை, முரசு, மத்தளம் முதலான இசைக்கருவிகள் முழங்குகின்றன.&lt;br /&gt;குதிரையின் மீது முழுமதியெனத் திருமுகம் விளங்கித் தோன்ற நபிகள் நாயகம் அவர்கள் மணமகனாக நகர்வலம் வருகின்ற காட்சியைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப் பருவப் பெண்களும் வீதிகள் தோறும் கூடிநின்று கண்டு களிக்கின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;செழுமுகிற் கவிகையஞ் செம்மல் வீதிவாய்&lt;br /&gt;வழுவறு பவனியின் வருகின் றாரென&lt;br /&gt;வெழுவகைப் பேதை பேரிளம்பெண் ஈறதாய்க்&lt;br /&gt;குழுவுடன் றிசைதிசை நிறைந்து கூடினர்.&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (மணம்புரி படலம்- 51)&lt;/b&gt;&lt;br /&gt;வழக்கமாகத் தமிழ்க் காப்பியங்களிலும் உலா நூல்களிலும் தலைவன் உலா வருவதைக் காணும் பெண்கள் தன்நிலை மறந்து, தலைவன் மீது கொண்ட காதல் மிகுவதால் காமவயப்பட்டுப் புலம்புவதாக இலக்கியம் செய்வது வழக்கம். அதிலும் குறிப்பாக முன்னர் குறிப்பிட்ட எழுபருவ மகளிரும், அதாவது ஐந்துவயது சிறுமி தொடங்கி ஐம்பது வயது பேரிளம்பெண் ஈறாகப் பெண்கள் எல்லோரும் உலாப்போகும் தலைவன்மேல் காதல்கொண்டு காமுற்றுப் புலம்புவதாகப் பாடுவது தமிழ்ச் சிற்றிலக்கிய மரபு. உமறுப்புலவர் நபி பெருமானாரின் உலாக் காட்சிகளை அப்படிப் படைத்துக் காட்டாமல் மாற்றம் செய்து பண்பார்ந்த நிலையில் விவரிக்கின்றார். எழுபருவப் பெண்களும் நபிகளாரின்&amp;nbsp; உலாவினைக் காண நிறைந்து கூடினர் என்று மட்டுமே குறிப்பிடும் உமறுப்புலவர் அவர்கள் காதல் வயப்பட்டதாகக் குறிப்பிடவில்லை. அந்தவகையில் தமிழ்மரபு கருதி எழுபருவப் பெண்களையும் உலாக் காண அழைத்துவரும் காப்பிய ஆசிரியர் மரபில் தேவைப்படும் மாற்றமாக அவர்களைப் பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்துகின்றார். உலாக்காணும் பெண்களின் பேச்சு கூட நாம் வழக்கமாகக் கேட்கும் பேச்சாக இல்லாமல் புதிய பேச்சாக புதுமையான பேச்சாக அமைகின்றது.&lt;br /&gt;ஆமீனா காணாத அரிய காட்சி:&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உலகத்தவர் மகிழ்ந்து காணும் நபிகள் நாயகம் சல்லல்லாகு அலைகி வசல்லம் அவர்களின் இந்த மணக்கோல உலாக் காட்சியை அவரின் தாயார் ஆமீனா உயிரோடிருந்து காணும் பேறு பெறாமல் போய்விட்டாளே, என்று பவனி காணும் மகளிர் வேதனையை வெளிப்படுத்துவதாக உமறுப்புலவர் பாடுகின்றார்.&lt;br /&gt;கண்ணகன் ஞால மெல்லாம் களிப்புறும் அரிய காட்சி&lt;br /&gt;அண்ணல்தன் மனத்தின் கோலம் ஆமீனா வென்னும் அந்தப்&lt;br /&gt;பெண்ணிருந்து இனிது காணப் பெற்றிலள் காணும் என்பார் &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (மணம். 57)&lt;br /&gt;இப்பாடலில், ஆமீனா என்னும் அந்தப் பெண்ணிருந்து இனிது காணப் பெற்றிலள் என்று வரும் பகுதியைக் கூர்ந்து நோக்கினால் இப்படிப் பேசும் பெண்கள் நபிகளாரின் தாயார் ஆமீனாவின் ஒத்த அல்லது மூத்த வயதுடைய பெண்கள் என்பது புலப்படும். ஆக, மூத்த வயதுடைய பெண்கள் நபிகளாரின் உலாவைக் காணுங்கால் அவரின் தாயாரை நினைவு கூர்கிறார்கள். &lt;br /&gt;கதீஜா செய்த தவப்பேறு:&lt;br /&gt;குடை நீழலில் வேகநடையுடைய குதிரை மீதமர்ந்து உலாவரும் முகம்மதுவின் அழகே உலகத்திலுள்ள அழகுகளிலெல்லாம் மேலான அழகு என வியக்கும் பெண்கள் இத்தகு பேரழகுடைய முகம்மதுவை மணாளனாகப் பெற்றது கதீசாவின் தவப்பேறே என்றும் அவரைப்போல் பேறு பெற்றவர்கள் இம் மண்ணுலகில் வேறு எவரும் இல்லை யென்றும் வியந்து பாராட்டு கின்றார்கள்.&lt;br /&gt;கடுநடைப் புரவி மேலாய்க் கவிகைமா நிழற்ற வந்த&lt;br /&gt;வடிவுறை முகம்ம தின்றன் வனப்பலால் வனப்பு மில்லைக்&lt;br /&gt;கொடியிடைக் கதீசா வென்னுங் கொம்புசெய் தவப்பே றாகப்&lt;br /&gt;பிடிநடை யவரிற் பேறு பெற்றவ ரில்லை என்பார்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (மணம். 58)&lt;br /&gt;இந்தப் பாடலில் தவப்பேறாக, பேறு பெற்றவரில்லை என்று பேசும் பெண்களின் பேச்சு வெறும் உதட்டளவிலான பேச்சோ, வெற்று ஆரவாரப் பேச்சோ இல்லை. இந்த வார்த்தைகள் அவர்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து மனநிறைவோடு வெளிப்படுகின்ற பாராட்டுரைகளாகும். ஏனெனில் கதீசா முகம்மதுவைப் பெற்றது அவள் செய்த தவத்தின் பயன் என்பதும் இதைவிட வேறு பெரும்பேறு ஒன்றும் உலகத்தில் இருக்கமுடியாது என்பதும் அவர்களின் தீர்க்கமான முடிவு. இப்பேச்சில் பொறாமை உணர்ச்சி ஒருசிறிதும் இல்லை என்பது வெளிப்படை. &lt;br /&gt;மேலும், உலா காணும் பெண்கள் ஒரு முடிவுக்கு வருகின்றார்கள். கதீசா, தாம்&amp;nbsp; செய்த தவத்தின் பயனாய் முகம்மதுவை அடையப்பெற்றார். நமக்கு நபிகளாரை அடையும் பேறு கிடைக்கவில்லை என்றாலும் அவரின் வீதியுலாவினைக் காணும் பேறு கிடைத்ததே அதுவே நமக்குப் பெறும்பேறு. நபிகளாரின் சிறப்பு பொருந்திய இப்பவனியை தினந்தோறும் தம் வீதியில் கண்டு மகிழும் வாய்ப்பை வேண்டி நாமும் அரிய தவத்தைச் செய்குவோம் என்று உறுதி ஏற்கின்றார்கள் பவனி காணும் பெண்கள். தினந்தொறும் பவனி காணச் செய்தவம் செய்வோம் என்பார் (மணம். 60) அது மட்டுமல்லாமல் நபிகளாரைச் சுமந்து வீதியுலா அழைத்துச் செல்லும் குதிரையை நோக்கி உலாக் காணும் பெண்கள் மிக்க அன்போடு ஒரு கோரிக்கை வைக்கிறார்கள். நபிகளாரின் பூரண அழகைக் கண்டு மகிழ்வதற்கு ஏதுவாகக் குதிரையே, மெல்லமெல்லச் செல்வாயாக என்பது அவர்களின் வேண்டுகோள். பரியை நோக்கிப் பாரிடைப் பையப்பையச் செல்லெனப் பரிவில் சொல்வார். (மணம். 62) என்ற சீறாப்புராணத்தின் இப்பகுதியைப் பயில்வோர்க்கு முத்தொள்ளாயிக் கைக்கிளைத் தலைவி பாண்டிய மன்னனின் குதிரையைப் பார்த்து ஊரகத்து மெல்ல நடவாயோ என்று வேண்டுகோள் வைத்த பகுதி நினைவுக்கு வராமல் போகாது. அப்பகுதி பின்வருமாறு,&lt;br /&gt;ஊரகத்து மெல்ல நடவாயோ- கூர்வேல்&lt;br /&gt;மதிவெங் களியானை மாறன் தன் மார்பங்&lt;br /&gt;கதவங்கொண் டியாமுந் தொழ. &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (முத்தொள்ளாயிரம்: 74)&lt;br /&gt;நபிகளாரின் உலாக் காட்சியினை வருணிக்கும் உமறுப்புலவர் முததொள்ளாயிர இலக்கிய மரபுகளை உள்வாங்கியே அப்பகுதியை அமைத்துள்ளார் என்பது கண்கூடு.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-5421202178314779515?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/5421202178314779515/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=5421202178314779515&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/5421202178314779515'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/5421202178314779515'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/07/2_24.html' title='சீறாவில் உமறுப்புலவர் காட்டும் புதுமை உலா -பகுதி-1'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-1549845642246824470</id><published>2011-07-21T08:08:00.001+05:30</published><updated>2011-07-24T15:01:08.858+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமிய இலக்கிய ஆய்வு'/><title type='text'>சீறாவில் உமறுப்புலவர் காட்டும் புதுமை உலா -பகுதி-2</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ்ப் பேராசிரியர்&lt;br /&gt;காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம்&lt;br /&gt;புதுச்சேரி- 605008&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கிளி விடு தூது:&lt;/b&gt;&lt;br /&gt;நபிகள் நாயகத்தின் மேனிஎழிலைக் கண்டு பசலை பூத்து நிற்கின்ற பெண்களின் பேச்சிலும் கூடக் காதல் வெளிப்படுகின்றதே அன்றிக் காமம் வெளிப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;திருத்தகு பவனி நோக்குஞ் சேயிழை யொருத்தி காதல்&lt;br /&gt;வருத்தமுற் றிருந்து பஞ்ச வனக்கிளி கையில் ஏந்திக்&lt;br /&gt;கரத்தினைப் பொருத்தச் செய்த காளைபால் ஏகி என்றன்&lt;br /&gt;உரத்தினைப் பொருந்தச் சொல்லென் றோதும்வாய் ஒழிகிலாளே&lt;/b&gt; (மணம். 65)&lt;br /&gt;&lt;br /&gt;நபிகளாரின் திருத்தமான பவனியைக் கூர்ந்து பார்த்த பெண்ணொருத்தி, அண்ணலார்மேல் கொண்ட காதலால் தமக்கேற்பட்ட வருத்தம் தீர, அவர் என்னைத்&amp;nbsp; தழுவிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சென்று சொல்லுவாயாக என்று தம் கையில் உள்ள பஞ்சவர்ணக் கிளியிடம் தூதுச் செய்தியினை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். ஏன் அவள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கிறாள் என்றால் கிளி அவள் பேச்சைக்கேட்டுத் தூது செய்தியினைச் சொல்ல உடனே புறப்பட்டுப் போகவில்லை, அது அவள் கையிலேயே இருக்கின்றது. தாதி தூதோ தீது தத்தைத் தூதோதாது என்ற செய்தி அறியாமல் அப்பெண் வாய்ஒழியாமல் புலம்பிக் கொண்டே இருக்கிறாள் என்ற பகடி தோன்றப் புலவர் படைத்துள்ள இக்காட்சி நயம்மிக்கது. இன்னும் சிந்தித்துப் பார்த்தால், பெருமைமிகு கதீசாவினைத் தழுவப்போகும் அண்ணலாரிடம் போய் பவனிகாணும் பெண்ணொருத்தியின் மார்பைத் தழுவுக என்ற தூதுச் செய்தியைச் சொல்ல விரும்பாமல்தான் அப்பஞ்சவனக் கிளி அமைதியாய் இருந்திருக்குமோ என்று எண்ணவும் தோன்றுகிறது. காப்பியத்தின் போக்கில் உலா என்ற சிற்றிலக்கிய மரபினைப் புகுத்திப்பாடும் சிறு வாய்ப்பினைப் பயன்படுத்தி ஒரு கிளி விடு தூதினையும் இடையில் கையாண்டுள்ள உமறுப்புலவரின் இலக்கிய உத்தி தனிச்சிறப்புடையது.&lt;br /&gt;தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள்: &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; அண்ணலாரின் பவனியைக் கண்ட பெண்ணொருத்தி தன் நினைவையெல்லாம் முகம்மது உலாப்போகும் வழியிலேயே போகவிட்டுவிட்டுத் தன்னை மறந்து நிற்கின்றாள். உமறுப்புலவர் சித்தரிக்கும் அப்பெண்ணின் நிலையைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;b&gt;கனமுகில் அனைய கூந்தல் காரிகை ஒருத்தி உள்ள&lt;br /&gt;நினைவெலாம் குரிசில் தோன்று நெறியிடை எதிரில் போக்கி&lt;br /&gt;இனமெங்கே ஆய மெங்கே எவ்விடத்து ஏகின் றேன்என்&lt;br /&gt;மனமெங்கே யான்தான் எங்கே எனநின்று மறுகு கின்றாள்.&amp;nbsp; &lt;/b&gt;(மணம். 68)&lt;br /&gt;&lt;br /&gt;அப்பர் சுவாமிகளின் கைக்கிளைத் தலைவி ஒருத்தி சிவனைக் குறித்த செய்திகள் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்க எப்படித் தன்னை மறந்தாளோ (&lt;b&gt;தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே -தேவாரம்&lt;/b&gt;) அப்படியே, அண்ணலார் பவனி கண்ட பெண்ணும் தன்கைக்கிளைக் காதலால் உள்ளம், நினைவு இரண்டையும் அவர் பின்னால் போக்கிவிட்டு, பவனி தன்னைக் கடந்து போனதுகூடத் தெரியாமல் தனித்துநின்று, என்னோடு இங்கே குழுமியிருந்த பெண்கள் கூட்டமெங்கே? என்னுடன் வந்த தோழியர் ஆயமெங்கே? நான் எங்கே இருக்கிறேன்? என்றெல்லாம் புலம்பித் திகைத்து நிற்கிறாள். அதுமட்டுமா, என் மனம்எங்கே? நான்தான் எங்கே? என்று அடுத்து அவள் கேட்கும் கேள்விகள்தாம் அவலத்தின் உச்சம். நபிகளாரின் பவனியில் அவள் தன் மனத்தையும் தொலைத்துவிட்டாள், தன்னையும் தொலைத்துவிட்டாள். முத்தொள்ளாயிரம் முதலான தமிழிலக்கியங்கள் மிகுத்துப் பேசும் பெண்பாற் கைக்கிளைப் பாடல் மரபை உள்வாங்கித் தக்க இடத்தில் அம்மரபினைக் கையாண்டுத் தமிழின் இலக்கிய மரபுத் தொடர்ச்சியைத் தம் காப்பியத்துள் வைத்துக் காப்பாற்றும் உமறுப்புலவரின் புலமைநலம் பாராட்டத்தக்கதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுவன மடந்தையர் அண்ணலார் உலாகண்டு மயங்கினர்: &lt;/b&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உமறுப்புலவர் தமிழ்க்காப்பிய மற்றும் சிற்றிலக்கிய மரபுகளைப் பின்பற்றி அண்ணலாரின் திருமண உலாக் காட்சியை அமைக்கின்றார் என்றாலும் அதிலும் ஒரு புதுமை காண்கின்றார். மண்ணுலக மடந்தையர் பவனி கண்டு கைக்கிளைக் காதல் கொண்டதுபோல் விண்ணுலக சுவன மங்கையர்களும் நபிகளாரின் பவனிகண்டு மயங்கி நிற்பதாகப் புலவர் படைத்துக் காட்டுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மன்னர் மன்னர் முகம்மது தம்பெயர்&lt;br /&gt;சொன்ன போதில் சுவன மடந்தையர்&lt;br /&gt;முன்னி ருந்த வடிவினும் மும்மடங்கு&lt;br /&gt;என்ன லாகி இருங்களிப் பேறினார்.&lt;/b&gt; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (மணம். 80)&lt;br /&gt;&lt;br /&gt;முகம்மது திருமணக் கோலத்தில் பவனிவருகிறார் பாருங்கள் என்று அமரர்கள் சொன்னதைக் கேட்ட விண்ணுலக மங்கையர், முகம்மது என்னும் திருநாமம் காதில் விழுந்த அந்தத் தருணத்திலேயே தம்முடைய முந்தைய அழகைவிட மும்மடங்கு அழகுபெற்றுப் பொலிந்ததோடு பெருமகிழ்வும் எய்தினார்கள் என்கிறார் உமறுப்புலவர். மண்ணுலகப் பெண்கள் உலாகண்ட காட்சியினை வருணித்தது போலவே விண்ணுலக மங்கையர் உலாகண்ட காட்சியினையும் விரிவாக விவரித்துக் காட்டுகின்றார் புலவர். அவர்களும் அண்ணலார் மீது கைக்கிளைக் காதல் கொள்கின்றனர். பாட்டுடைத் தலைவனின் பேரழகில் பெண்கள் மயங்கி ஒருதலைக் காதல் கொள்ளுவதாகப் பாடும் மரபிற்கேற்ப விண்ணுலகப் பெண்களும் அண்ணலார் மீது ஒருதலைக் காதல் கொள்கின்றனர். தமிழின் பிற உலா இலக்கியப் பெண்களுக்கு வருகின்ற காமமயக்கம் போல் விண்ணுலகப் பெண்களுக்கும் காமமயக்கம் மிகுகின்றது. அவர்கள் நிலைமையினை வருணிக்கும் சீறாப்புராணப் பகுதி இதோ,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏந்து கொங்கை அணியிழப்பார் சிலர்&lt;br /&gt;கூந்தல் சோரக் குழைந்து நிற்பார் சிலர்&lt;br /&gt;காந்தி மேனி கரிந்திடுவார் சிலர்&lt;br /&gt;மாந்தி ஆசை மயக்குறுவார் சிலர்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;/b&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; (மணம். 100)&lt;br /&gt;&lt;br /&gt;காதல் அளவுகடந்து காமமானதால் அவர்களின் ஒளிவீசம் மேனி கரிந்து போகிறதாம், காதல் மயக்கத்தில் ஆடை அணிகலன்களை இழக்கிறார்களாம் இப்படி உமறுப்புலவர் சுவனலோகப் பெண்களை வருணிக்கும் இடத்தில்தான் தமிழின் உலா இலக்கியப் பெண்களைக் காணமுடிகிறது. ஆக, இருவேறு நிலைகளில் மண்ணுலக மங்கையர், விண்ணுலக மங்கையர் எனத் தனித்தனியே பிரித்து அண்ணலாரின் உலாக் காட்சியினை விவரிக்கும் உமறுப் புலவரின் படைப்பாக்க உத்தி வியப்பளிக்கக் கூடியது.&lt;br /&gt;இவ்வாறு உமறுப்புலவர் தம் சீறாப்புராணத்தில் அண்ணல் நபிகளாரின் மணக்கோல உலாவினை வழக்கான தமிழ் உலா நூற்களின் நிலையில் படைத்துக் காட்டாமல் மரபினை மாற்றம் செய்து இருவேறு நிலைகளில் உலா காணும் மகளிர் உள்ளத்து உணர்வுகளைச் சிறப்புற எடுத்துக்காட்டிப் பண்பார்ந்த இசுலாமிய நெறியைத் தாம் படைக்கும் இலக்கியத்துள்ளும் பொன்னேபோல் போற்றியுள்ள திறம் சீறாப்புராணத்தின் தனிச் சிறப்பாகும்.&amp;nbsp; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-1549845642246824470?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/1549845642246824470/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=1549845642246824470&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1549845642246824470'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1549845642246824470'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/07/2.html' title='சீறாவில் உமறுப்புலவர் காட்டும் புதுமை உலா -பகுதி-2'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-3842122124280848158</id><published>2011-04-18T08:39:00.000+05:30</published><updated>2011-04-18T08:39:23.501+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்தர் இலக்கியம்'/><title type='text'>சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -1</title><content type='html'>&lt;b&gt;சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல்&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா. இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்தர்களின் காலம் என்பது சிக்கலான ஒரு விவாதக் கருத்தாகவே இருந்து வருகின்றது. திருமந்திரத்தில் சித்தன் என்ற சொல் காணப்படுவதால், திருமந்திரக் காலமாகிய கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே சித்தர் மரபு தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். திருமூலரே தமிழகத்தின் முதல்சித்தர் என்னும் கருத்து ஆய்வுலகில் வலுப்பெற்றிருக்கிறது. ஆனால் பிற்காலச் சித்தர்களுடைய பாடல்களே இன்று நமக்குக் கிடைத்திருக்கின்றன. பழைய நிகண்டுகள் எவற்றிலும் சித்தர் என்ற சொல் காணப்படாததால் நிகண்டுக் காலமான கி.பி. பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டுகட்குப் பிறகே தமிழ்ச் சித்தர்கள் தோன்றியிருக்க வேண்டும் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார் போன்றோர் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் அகப்பேய், அழுகணி, இடைக்காடு, கடுவெளி, குதம்பை மற்றும் பாம்பாட்டிச் சித்தர்கள் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் 16, 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தம் தமிழ் இலக்கிய வரலாறு நூற்றாண்டு வரிசை நூற்களில் வரையறுக்கின்றார் மு.அருணாசலம். திருமூலர் காலத்திற்கும், தமிழ்ச் சித்தர் இலக்கியக் காலத்திற்கும் இடையே ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளி தென்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்கள் யோகம், மருத்துவம், சோதிடம் போன்ற பலதுறைகளிலும் நூல் செய்துள்ளார்கள். இவர்களில் யோகம் பற்றி நூல் செய்த சித்தர்களே காலத்தால் முற்பட்டவர்கள்;. இவ்வகைச் சித்தர் பாடல்களில் யோகம் குறித்த செய்திகளோடு சமயச் சடங்குகள், உருவ வழிபாடு, சாதிப்பிரிவினை போன்றவற்றிற்கு எதிரான கருத்துக்களும் இடம்பெற்றிருக்கும். சித்தர் பாடல்களில் கவித்துவம் நிறைந்த இலக்கியத் தகுதி பெறுவன இவ்வகைச் சித்தர் பாடல்களே. எனவே சித்தர் பாடல்களில் யோகச் சித்தர் பாடல்களே சித்தர் இலக்கியம் எனும் சிறப்பினைப் பெறுகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;யோக இலக்கியம் படைத்த சித்தர்களுள் ஒளவையார், சிவவாக்கியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், கடுவெளிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகணிச் சித்தர் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்களாவர். (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.7) சமயங்களின் ஆதிக்கத்தில் இருந்தும் சமயச் சடங்குகளின் பிடியில் இருந்தும் மக்களை விடுவிக்கும் பொருட்டு கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் முகிழ்த்த சித்தர் நெறியே சமூக மீறல்களுக்கான எதிர்க்குரலை அழுத்தமாகப் பதிவு செய்த பெருமைபெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சித்தர் பாடல் பதிப்புகள்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்களின் யோக, ஞானப் பாடல்களின் தொகுப்பு பெரிய ஞானக்கோவை, சித்தர் ஞானக்கோவை, சித்தர் பாடல்கள் போன்ற தலைப்புகளில் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பதிப்பிக்கப் பெற்ற வா. சரவண முத்துப் பிள்ளை பதிப்பே முதல் பதிப்பாயிருக்கலாம். ஞானவான்களுக்கு உபயோகமாகும் பொருட்டு சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும் 44 அரிய நூல்களைச் சேகரித்துத் தொகுக்கப்பெற்றது என்ற குறிப்போடு பெரிய ஞானக்கோவை என்ற இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. வா.சரவண முத்துப்பிள்ளைப் பதிப்பு, வித்யாதர நாகர அச்சுக்கூடப் பதிப்பு, இரத்தின நாயக்கர் அண்டு சன்ஸ் பதிப்பு, எம்.ஆர். அப்பாத்துரைப் பதிப்பு ஆகியன பாடல் தொகுப்பில் ஏறத்தாழ ஒத்திருக்கின்றன. இப்பதிப்புகளில் 34 சித்தர்களின் 44 நூல்கள் மூன்று பாகங்களாகத் தரப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;வா.சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பை அடியொற்றிப் பிற பதிப்புகள் மிகச்சில மாற்றங்களோடு வெளியிடப் பட்டுள்ளன. சரவண முத்துப் பிள்ளைப் பதிப்பில் இடம்பெற்றுள்ள பாடல்கள் சில ஏட்டுப் பிரதிகளிலிருந்தும் அச்சுப் பிரதிகளிலிருந்தும்  திரட்டப்பட்டன என்று குறிப்பிடப் பட்டிருந்தாலும் நூலின் முகவுரைப்பாடல், பாடல்கள் திரட்டப்பட்ட விதம்குறித்து வேறு தகவலைத் தெரிவிக்கின்றது. முகவுரைப்பாடலின் அப்பகுதி வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஆவலோடு இவருரைத்த ஞானம் யாவும்&lt;br /&gt;அவனியுள மனுக்களெலாம் அறிய வென்றே&lt;br /&gt;பாவலரை நாவலரை பண்டி தோரை&lt;br /&gt;பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு&lt;br /&gt;மாவிதமாய்ப் பிழையின்றி திருத்தம் செய்து&lt;br /&gt;மாசறவே அச்சியற்றி மகிழ்ந்த வாறே.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘பாவலரை நாவலரை பண்டி தோரை பற்பலவாம் பெரியோரைப் பணிந்து கேட்டு’ என்ற முகவுரைப் பகுதி, பாடல்கள் வாய்மொழியாகக் கேட்டுப் பதிப்பிக்கப் பெற்றன என்று தெரிவிக்கின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;மு.அருணாசலம், தமிழிலக்கிய வரலாறு 14 ஆம் நூற்றாண்டு நூலில் சித்தர் பாடல் பதிப்புகள் பற்றிக் குறிப்பிடும் போது சித்தர் ஞானக்கோவை ஆதாரபூர்வமான ஒரு நூலாகக் கொள்ளத்தக்க தன்று என்றும் தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள் அனைத்தும் சித்தர் இலக்கியங்களாகா என்றும் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பலர் சித்தர்கள் அல்லர் என்றும் இத்தொகுப்பின் காலம் கி.பி. 1875 -1900 என்று கருத வேண்டும் என்றும் மதிப்பிட்டுள்ளார். &lt;br /&gt;சித்தர் பாடல்களின் நம்பகத்தன்மை குறித்துப் பலரும் ஐயம் எழுப்பியுள்ள நிலையில் இத்தொகுப்புகளுக்கு ஆதாரமாயிருக்கக் கூடும் என்பதான ஓலைச்சுவடிகள் ஏதும் இதுவரை எங்கும் கிடைக்கப் பெறவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஓலைச்சுவடிகளோ முந்தைய பதிப்புகளோ அற்ற நிலையில் சித்தர்பாடல் தொகுப்புகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எவ்வாறு பதிப்பிக்கப் பெற்றன? என்பது ஓர் அவிழ்க்க முடியாத புதிராகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்க்குரல்களைக் கொண்ட சித்தர் பாடல்களின் உள்ளடக்க வீரியம் காரணமாகச் சித்தர் இலக்கியங்கள் சனாதனக் காப்பாளர்களால் பேணப்படாமல் போயிருக்கலாம் அல்லது அழிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. சைவர்கள், சிவவாக்கியர்;, பட்டினத்தார் பாடல்களைத் தேடிப்பிடித்து எரித்திருக்கிறார்கள் (Kamil V. Zvelebil, The Poets of the Powers. P. 10-20)  என்ற செய்தியை வரலாற்று ஆதாரத்துடன் அயலகத் தமிழறிஞர் கமில் சுவலபிள் குறிப்பிடுகின்றார் என்று ச.மாடசாமி அவர்கள் தரும் அதிர்ச்சித் தகவல் (ச.மாடசாமி, பாம்பாட்டிச் சித்தர், ப.11) இக்கருத்தை உறுதிசெய்கின்றது. ஐரோப்பிய, இங்கிலாந்து ஆவணக் காப்பகங்களில் தேடினால் ஒருக்கால் சித்தர்பாடல் ஓலைச்சுவடிகள் கிடைக்கலாம்.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகத்தில் நாட்டுப்புறப் பாடல் தொகுப்பில் ஈடுபடும் கள ஆய்வாளர்களுக்குப் பல சமயங்களில் நாட்டுப்புறப் பாடல்களோடு இணைந்து சித்தர் பாடல்களும் கிடைப்பது வழக்கம். அண்மைக்காலம் வரையிலும் சித்தர் பாடல்கள் வாய்மொழி இலக்கியமாக நாட்டுப்புற மக்களால் பாடப்பட்டு வருவது கண்கூடு. பொருளுணர்ந்தோ, உணராமலோ நாட்டுப்புற மக்களால் வாய்மொழி மரபில் காப்பாற்றப்பட்டு வந்த சித்தர் பாடல்களே இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அச்சுவடிவம் பெற்றன என்று முடிவு செய்வதில்  பிழையில்லை. சித்தர் பாடல்களின் சிந்து, நொண்டிச் சிந்து, கும்மி, ஆனந்தக் கும்மி, கண்ணி முதலான வடிவங்கள் இதற்குத் துணை புரிந்திருக்கின்றன. சனாதனிகளின் எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டே சித்தர்கள் வாய்மொழி மரபில் நின்று நிலைக்கத் தக்கதாக இத்தகு நாட்டுப்புறச் சந்த மெட்டுகளைக் கையாண்டிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சித்தர் சிவவாக்கியர்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை வெளிவந்துள்ள அனைத்துச் சித்தர் பாடல் தொகுப்புகளிலும் தவறாமல் இடம்பெறும் சித்தர் சிவவாக்கியர் ஆவார். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய திருமூலருக்குப் பின்னர் சற்றேறக் குறைய 800 ஆண்டுக்கால இடைவெளியில் சித்தர் சிவவாக்கியர் தோன்றுகின்றார். சரவண முத்துப் பிள்ளை அவர்களின் பெரிய ஞானக் கோவை பதிப்பின் முகவுரைப் பாடல் சித்தர்களின் பட்டியலைப் பாடல்வடிவில் தரும்போது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;திட்டமுள ஆரியநில் லாது நோக்கச்&lt;br /&gt;செய்தசிவ வாக்கியந்தான் நூலே ஆதி &lt;br /&gt;பட்டினத்தார் பாடலொடு புலம்பல் ஞானம்&lt;br /&gt;பத்திரகிரி அருட்புலம்பல் பாம்பாட் டீசர் .. ..&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பட்டியலைத் தொடருகின்றது. சிவவாக்கியந்தான் நூலே ஆதி என்ற குறிப்பைக் கொண்டு, கி.பி. 14 ஆம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்ற தமிழ்ச் சித்தர் மரபு சிவவாக்கியரிலிருந்தே தொடங்குகின்றது எனலாம். சிவவாக்கியர், பூமியில் பிறக்கையில் சிவ என்று சொல்லிக்கொண்டு விழுந்தபடியால் இவருக்கு இப்பெயர் இடப்பட்டது என்று அபிதான சிந்தாமணி பெயர்க்காரணத்தைக் குறிப்பிடுகின்றது. அது பொருந்துமாறில்லை. சிவவாக்கியம் என்ற நூலைச் செய்தவர் என்ற காரணம் பற்றி அவர் சிவவாக்கியர் என்றழைக்கப் பட்டார் எனக்கொள்வதே பொருத்தமுடையதாகும். தாம் இயற்றிய நூலின் பெயரை அவரே தம் காப்புச் செய்யுளில் சிவவாக்கியம் எனப் பதிவு செய்கின்றார். &lt;br /&gt; &lt;br /&gt;&lt;b&gt;அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்&lt;br /&gt;ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்&lt;br /&gt;சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்  &lt;/b&gt; (சிவ.வா. காப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;என்பது அக்காப்புச் செய்யுள். சிவவாக்கியரின் வாழ்க்கைக் குறிப்புகளாக அபிதான சிந்தாமணி, சாம்பசிவம் பிள்ளையின் மூலிகை அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, பாவலர் சரித்திர தீபகம் முதலான நூல்களின் வழி நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எதுவும் வரலாற்றுத் தகவல்களாக இல்லாமல் பௌரானிகத் தன்மைகளோடு உள்ளன. சிவவாக்கியரும் திருமழிசை ஆழ்வாரும் ஒருவரே என்று ‘குரு பரம்பரை பிரபாவம் பன்னீராயிரம்’ குறிப்பிடுகின்றது. மொத்தத்தில் சிவவாக்கியர் வாழ்க்கை குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் ஒன்றுகூடக் கிடைக்கப்பெறவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சிவவாக்கியம் நூலின் அகச் சான்றுகளைக் கொண்டு அவரைச் சைவர் என்றும் வைணவர் என்றும் தனித்தனியே சொல்லுவாருண்டு. சிவவாக்கியர் சமயச் சிமிழ்களுக்குள் அடைபடாத சமரச யோகி என்பதே உண்மைநிலை. சிவவாக்கியர் காலத்தை வரையறை செய்யும் மு.அருணாசலம் அகப் புறச் சான்றுகளின் துணைக்கொண்டு சிவவாக்கியர் வாழ்ந்த காலம் 14 ஆம் நூற்றாண்டின் இறுதி, 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்கின்றார். தமிழக வரலாற்றில் சிவவாக்கியர் வாழ்ந்த இந்தக் காலப்பகுதியே, தமிழகம் சமய, சமூக அரசியல் சூழல்களில் பல புதிய மாற்றங்களை எதிர்கொண்ட காலமாகும்.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;b&gt;சிவவாக்கியர் காலம்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தமிழ்ச் சித்தர்களில் சிவவாக்கியர் பலநிலைகளில் தனித்தன்மை வாய்ந்தவர். நிறுவன மயமாக்கப்பட்ட சமயத்தை, சமயச் சடங்காசாரங்களை முழுமூச்சோடு எதிர்ப்பதில் அவர் முனைந்து நின்றார். அவர் காலத்தில் புனிதத்தன்மை வாய்ந்தது என்று கருதப்பட்ட அனைத்து அம்சங்களையும் அவர் துச்சமென நிராகரித்தார். தமது கண்டனங்களில் மென்மையான அணுகுமுறையை அவர் வேண்டுமென்றே தவிர்த்தார். கறாரான தமது விமர்சனங்களால் பார்ப்பனக் கருத்தாக்கங்களை மட்டுமின்றி பார்ப்பனர்களையும் நேரடியாகத் தாக்கினார். இத்தகு கூர்மையான விமர்சன எதிர்க்குரலைப் பதிவுசெய்வதில் சிவவாக்கியருக்குத் தூண்டுகோலாய் அமைந்த சமூகச்சூழல் குறித்து விவாதிப்பது இங்கு அவசியமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt; பிற்காலப் பாண்டிய மன்னர்களின் பங்காளிச் சண்டையால் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட இசுலாம், சிவவாக்கியர் காலத்தில் தமிழகத்தில் நன்கு அறிமுகமாயிருந்தது. நிறுவன மயமாகிப் போன சமயங்களின் பேரால் நிகழ்ந்துவரும் சமூகக் கொடுமைகளின் உக்கிரமே சிவவாக்கியரின் உரத்த எதிர்க் குரலுக்கு அடிப்படை என்றாலும் இசுலாத்தின் வருகை தந்த விழிப்புணர்வும் இப்புதிய போக்கிற்குப் பங்காற்றியிருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-3842122124280848158?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/3842122124280848158/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=3842122124280848158&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/3842122124280848158'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/3842122124280848158'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/04/1.html' title='சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -1'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-1355735604288205595</id><published>2011-04-18T08:28:00.002+05:30</published><updated>2011-04-18T08:31:57.396+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்தர் இலக்கியம்'/><title type='text'>சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -2</title><content type='html'>&lt;b&gt;சிவவாக்கியரின் எதிர்க்குரல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா. இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிவவாக்கியரின் எதிர்க்குரல்:&lt;/b&gt;&lt;br /&gt;சிவவாக்கியர் எதிர்க்குரலின் மையப் புள்ளியாக இருப்பது வைதீக எதிர்ப்பே. இந்தியத் தத்துவ மரபில் வைதீக எதிர்ப்பு என்பது வைதீகத்தோடே உடன்பிறந்தது. வைதீகம், வைதீக எதிர்ப்பு என்ற இருமைகளைக் கொண்டே இந்தியத் தத்துவம் இயங்குகின்றது என்றால் மிகையில்லை. சிவவாக்கியர் வேதங்கள், மந்திரங்கள், யாகசாலை அனைத்தையும் கேள்விக்குட்படுத்தி, இவையாவும் பயனற்றவை என்று ஒதுக்கித் தள்ளுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சாமம் நாலுவேதமும் சகல சாத்திரங்களும்&lt;br /&gt;சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்    &lt;/b&gt; (சி.வா. 311) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?&lt;br /&gt;சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?&lt;br /&gt;முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்&lt;br /&gt;பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே.  &lt;/b&gt;  (சி.வா. 312) &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப் பல பாடல்களில் வேதத்தையும் வேதமோதும் பிராமணர்களையும் சாடுகின்ற சிவவாக்கியர் வேள்விக் குண்டத்தையும் அதற்கு ஆதாரமான ரிக்வேதத்தையும் மண்கலத்தில் நூலைச்சுற்றி பூரணகும்பம் என்று ஆராதிக்கும் கலத்தையும் கேலிசெய்து இத்தகு வேத வேள்விமுறைகள் பயனற்றவை என்கிறார். சேமமாக ஓதினும் என்பதிலுள்ள N~மம் என்பது பார்ப்பனர்களின் பேச்சு மொழிச்சொல். சிவவாக்கியர் பகடிக்காக இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேதங்கள் மட்டுமல்ல இறைவழிபாடு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் பூசை மற்றும் மந்திர உச்சாடனங்களும் சிவவாக்கியரின் கண்டனத்துக்குள்ளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே&lt;br /&gt;சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திரம் ஏதடா?&lt;br /&gt;நட்டகல்லும் பேசுமோ! நாதன்உள் இருக்கையில்!&lt;br /&gt;சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ? &lt;/b&gt;   (சி.வா. 494) &lt;br /&gt;&lt;br /&gt;இப்பாடலில் வடமொழி அர்ச்சனையை முணுமுணு வென்று சொல்லும் மந்திரம் என்று அவர் இகழ்ந்துரைப்பது குறிப்பிடத்தக்கது. சிவவாக்கியரைப் பொறுத்தமட்டில் இறைவழிபாடு, பூசனை மற்றும் பக்தி மார்க்கங்கள் மட்டுமல்ல மூர்த்தங்கள் என மதிக்கப்படும் இறை உருவங்களும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின்றன. இறை உருக்களை நட்டகல் என்றும் உற்சவ மூர்த்திகளைச் செம்பு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். ஆலய வழிபாட்டுக்கு முதன்மை தரும் சைவ, வைணவ மதங்களைச் சாடும் போக்கில் கோயில்கள், குளங்கள், திருவிழாக்கள், தேரோட்டங்கள் அனைத்தும் பயனற்ற வெற்று ஆரவாரங்களே, இறையனுபவம் இவைகளில் இல்லை என வன்மையாகச் சாடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே&lt;br /&gt;தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்&lt;br /&gt;ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை&lt;br /&gt;போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே. &lt;/b&gt;  (சி.வா. 242)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?&lt;br /&gt;கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே!&lt;br /&gt;கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே!&lt;br /&gt;ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே. &lt;/b&gt;  (சி.வா. 34)&lt;br /&gt;&lt;br /&gt;ஊரே கூடி நடத்தும் தேர்த் திருவிழாவை மனிதர் பண்ணும் புரளி என்று ஒதுக்கித் தள்ளும் சிவவாக்கியரின் துணிச்சல் உண்மையிலேயே வியப்புக்குரியது.&lt;br /&gt;&lt;br /&gt;வைதீகத்தை எதிர்ப்பதென்பது உண்மையில் பார்ப்பனீயத்தை, ஆரியத்தை எதிர்ப்பதே ஆகும். பார்ப்பனீயக் கருத்தாக்கங்களை எதிர்க்கும் சிவவாக்கியர் அத்தோடு நிறுத்தாமல் நேரடியாகப் பார்ப்பனர்களையே விசாரணைக்கு உட்படுத்துகின்றார். பார்ப்பனர்களின் தோற்றம், பூணூல், அனுஷ்டானங்கள் எனப்படும் வாழ்க்கை முறைகள் அனைத்துமே சிவவாக்கியரால் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும்&lt;br /&gt;பிறந்ததுடன் பிறந்ததோ, பிறங்குநூல் சடங்கெலாம்&lt;br /&gt;மறந்தநாலு வேதமும் மனத்துளே உதித்ததோ?&lt;br /&gt;நிலம்பிளந்து வான்இடிந்து நின்றதுஎன்ன வல்லீரே?  &lt;/b&gt; (சி.வா. 192)&lt;br /&gt;&lt;br /&gt;இப்பாடலில் பார்ப்பனர்களின் பூணூல், குடுமியைச் சிவவாக்கியர் கேலி செய்வதென்பது அவர் வாழ்ந்த (இன்றைக்கும் தொடரும்) சனாதனச் சமூகத்தில் எத்தகைய சிக்கலான செயல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். நிலம் பிளந்து வான்இடிந்து நின்றது என்ன? என்ற அவரின் வினாவில் வெளிப்படும், ஆகாயத்துக்கும் பூமிக்குமாக உயர்ந்து நிற்கும் பார்ப்பனர் என்ற வருணனை, சிவவாக்கியரின் நயமான நையாண்டிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மீன்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்&lt;br /&gt;மீன்இருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்&lt;br /&gt;மான்இறைச்சி தின்றதில்லை அன்றும்இன்றும் வேதியர்,&lt;br /&gt;மான்உரித்த தோலலோ மார்புநூல் அணிவதும். &lt;/b&gt;  (சி.வா. 157)&lt;br /&gt;&lt;br /&gt;அசைவ உணவு உண்ணும் பிற வருணத்தாரை விட, சைவ உணவு உண்ணும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரியும் பார்ப்பனர்களின் உணவு முறையையே கேள்விக்கு உள்ளாக்குகின்றார் சிவவாக்கியர். மீன்கள் வாழும் நீரைக் குடிப்பதும் குளிப்பதும் மான்தோல் அணிவதும் எந்தவகையில் சைவத்தில் சேரும் என்பது அவரின் வினா. இந்த சைவ உணவுப் பிரச்சனையில் பார்ப்பனர்களை மட்டுமல்ல சைவ வேளாளர்களையும் கிண்டல் செய்கிறார் சிவவாக்கியர். உடம்பை வளர்க்க நீங்கள் குடிக்கும் பால் உதிரம் அல்லவா? அது எப்படிச் சைவமாயிற்று, சைவ மூடர்களே! என்று கேள்விக்கணை தொடுக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உதிரமான பால்குடித்து ஒக்கநீர் வளர்ந்ததும்&lt;br /&gt;இதரமாய் இருந்ததுஒன்று இரண்டுபட்டது என்னலாம்&lt;br /&gt;மதிரமாக விட்டதேது மாங்கிசப்புலால் அதென்?&lt;br /&gt;சதிரமாய் வளர்ந்ததேது சைவரான மூடரே?  &lt;/b&gt;  (சி.வா. 148)&lt;br /&gt;&lt;br /&gt;சிவவாக்கியர் காலத்து ஆதிக்கச் சாதியரான பார்ப்பனர் மற்றும் சைவ வேளாளர்களை கேலியும் கிண்டலும் செய்யும் துணிச்சலுக்குப் பக்க பலமாய் அவர் அமைத்துக் கொண்ட தர்க்கம், வருணாசிரம தர்மம் என்ற ஆரிய சூழ்ச்சியின் அடிப்படையையே தகர்க்கும் சாதி எதிர்ப்பே. பிறப்பால் அனைவரும் ஒன்றே. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் எங்கே இருக்கிறது? மனிதர்களின் எலும்பு, தோல், சதைகளில் எங்கேனும் தாழ்ந்த சாதி உயர்ந்தசாதி என்ற அடையாளம் இருக்கின்றதா? பறைச்சியோடு நுகரும் உடலின்பம் பார்ப்பனத்தியோடு நுகரும் உடலின்பம் இரண்டும் வேறு வேறா? என்று உரத்துக் குரலெழுப்பும் சிவவாக்கியரின் குரல் காலத்தைக் கடந்து எல்லா நூற்றாண்டுகளுக்கும் எதிரொலிக்கும் ஆவேசக் குரலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?&lt;br /&gt;இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?&lt;br /&gt;பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?&lt;br /&gt;பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!  &lt;/b&gt; (சி.வா. 39)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ச் சமூகத்தைத் தொழுநோய் போல் பீடித்திருக்கும் சாதி அமைப்பைத் தகர்த்தெறியக் கூடிய எதிர்க்குரலை அழுத்தமாகத் தம் சிவவாக்கியத்தில் பதிவு செய்யும் சிவவாக்கியரின் குரல், பின்னர் அகப்பேய்ச் சித்தர், கடுவெளிச் சித்தர், பாம்பாட்டிச் சித்தர் முதலான சித்தர்களின் குரல்களாகத் தொடர்ந்து ஒலிக்கின்றது. வருணாசிரம எதிர்ப்பில் சித்தர்களிடம் இருபதாம் நூற்றாண்டுக்குரிய சமுதாய விழிப்புணர்வைக் காணும் கலாநிதி க.கைலாசபதி சித்தர்களைக் கிளர்ச்சியாளர் என்றழைக்கின்றார். (ஒப்பியல் இலக்கியம், ப.189)&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தம் எதிர்க்குரலை சாதீய எதிர்ப்போடு நிறுத்தாமல் அதன் ஆணிவேராயிருக்கின்ற சமய நிறுவனங்கள், பார்ப்பனீயம், வைதீகம் இவற்றை வேரறுக்கும் வகையில் கோயில் வழிபாட்டை அடியோடு வெறுத்தார், புனிதங்களை விசாரணைக்கு உட்படுத்தினார், எச்சில், தீட்டு இவைகள் குறித்த சமூக மதிப்பீடுகளை நோக்கி எதிர்க்கேள்வி கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஓதுகின்ற வேதம்எச்சில் உள்ளமந்திரங்கள் எச்சில்;&lt;br /&gt;போதகங்க ளானஎச்சில் பூதலங்கள் ஏழும்எச்சில்;&lt;br /&gt;மாதிருந்த விந்துஎச்சில் மதியும் எச்சில் ஒளியும்எச்சில்;&lt;br /&gt;ஏதில்எச்சில் இல்லதில்லை இல்லைஇல்லை இல்லையே! &lt;/b&gt;  (சி.வா. 41)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;&lt;br /&gt;கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே&lt;br /&gt;மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்&lt;br /&gt;துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே. &lt;/b&gt;   (சி.வா. 205)&lt;br /&gt;&lt;br /&gt;மேலே காட்டப்பட்ட இரண்டு பாடல்களும் எச்சில், தீட்டு எனப்படும் தூமை குறித்து எழுப்பும் எதிர்கேள்விகளின் நியாயத்தைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும். இப்படிச் சிவவாக்கியரின் பல பாடல்கள் நாசூக்கற்ற வெளிப்படையான வார்த்தைகளால் ஒழுக்கவாதிகளை அதிர்ச்சியடைய வைக்கின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-1355735604288205595?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/1355735604288205595/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=1355735604288205595&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1355735604288205595'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1355735604288205595'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/04/2.html' title='சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி -2'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-9187082969359553644</id><published>2011-04-18T08:21:00.001+05:30</published><updated>2011-04-18T08:33:00.426+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சித்தர் இலக்கியம்'/><title type='text'>சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி 3</title><content type='html'>&lt;b&gt;சமூக மீறலும் எதிர்க்குரலும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா. இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;கா.மா.பட்டமேற்படிப்பு மையம்,&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சமூக மீறலும் எதிர்க்குரலும்: &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்தர் இலக்கியக் காலப்பகுதி என்று அடையாளம் காணப்படும் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டுக் காலங்களில் தமிழ்ச் சமூகத்தில் நிறுவனமயப் படுத்தப்பட்டு போன சமயமும் ஆலயங்களும் பார்ப்பன மேலாதிக்கத்தின் பிடியில் இருந்தன. மன்னர்கள் தொடர்ந்து கோயில்களுக்கும் மடங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் நிலங்களைத் தானமளித்து வந்தனர். பெரும்பான்மையான நிலங்கள் பார்ப்பனர்களிடமும் உயர்சாதி இந்துக்களான வேளாளர்களிடமுமே குவிந்திருந்தன. பார்ப்பனர்கள் வைதீகத்தின் பேரால் சமூகத்தை வருணங்களாகப் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி வைத்திருந்தனர். ஆட்சியாளர்களால் வடக்கிலிருந்தும் ஆந்திர, கர்நாடகப் பகுதிகளிலிருந்தும் பார்ப்பனர்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு குடியமர்த்தப்பட்டதோடு இறையிலி நிலங்களும் வழங்கப்பட்டன. பார்ப்பனர்கள் சமயம், சமூகம், அரசியல், பொருள்நிலை அனைத்திலும் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தனர். அடுத்த நிலையில் வேளாளர்கள் இருந்தனர். பிற்படுத்தப்பட்ட சூத்திரர்களும் பஞ்சமர்களும் சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகு நெருக்கடியான சூழலில் தமிழகத்தில் இசுலாமும் கிருத்துவமும் நுழைந்தன. இசுலாத்தின் நுழைவு வைதீகக் காப்பாளர்களுக்கு உவப்பைத் தரவில்லை. மீண்டும் வைதீகத்தையும் வருணாசிரமத்தையும் தூக்கி நிறுத்தும் முயற்சியின் உச்சக் கட்டத்தில்தான் வைதீகம் மற்றும் வருணாசிரம எதிர்ப்பு ஆயுதங்களுடன் களத்தில் இறங்கினர் தமிழ்ச் சித்தர்கள். சிவவாக்கியரின் வருகை இத்தகு சமூக மீறலோடுதான் தொடங்குகின்றது. சித்தர்களின் ஆன்மீகப் பயணம் திருமூலர், ஒளவையார் போன்றவர்களின் வழியில் யோகமார்க்கத்தோடு தொடங்கினாலும் சித்தர்களின் சமூகப் பயணம் புத்தம் புதிய தளத்தில் கொஞ்சம் சமண, பௌத்த மிச்ச சொச்சங்களோடு வீறுநடை போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் இத்தகு நெருக்கடியான சூழல் வைதீகத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் எதிராகக் குரலெழுப்பும் துணிவைச் சித்தர்களுக்கு மட்டுமில்லாமல் வேறு சிலருக்கும் தந்திருக்கின்றது. சாதீயத்தையும் தீண்டாமையையும் வன்மையாக விமர்சித்து எழுதப்பட்ட கபிலரகவல் மற்றும் சாதியத்தினால், தீண்டாமையினால் கொடுமையாகப் பாதிக்கப்பட்ட உத்திரநல்லூர் நங்கை என்ற பெண்பாற் புலவர் எழுதிய பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் தோற்றம் பெற்றது இக்காலத்தில்தான். இரண்டு நூல்களுமே வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பைத் தர்க்கங்களோடு பதிவு செய்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஊருடன் பார்ப்பார் கூடி உயர்ந்ததோர் சாலை கட்டி &lt;br /&gt;நீரிலே மூழ்கி வந்து நெருப்பினில் நெய்யைத் தூவி &lt;br /&gt;கார்வயல் தவளைபோல கலங்கிய உங்கள் வேதம் &lt;br /&gt;பாரைவிட்டு அகன்றதேனோ? பாய்ச்சலூர் கிராமத்தாரே&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சந்தனம் அகிலும் வேம்பும் தனித்தனி வாசம் வீசும் &lt;br /&gt;அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ? &lt;br /&gt;செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீமணம் வேறதாமோ? &lt;br /&gt;பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர் கிராமத்தாரே  &lt;/b&gt; (பாய்ச்சலூர்ப் பதிகம்)&lt;br /&gt;&lt;br /&gt;கபிலரகவல், பாய்ச்சலூர்ப் பதிகம் முதலான இலக்கியங்களில் வெளிப்படும் குரலின் முழுமை பெற்ற வடிவமே சித்தர்களின் குரல் என்று கொள்வதில் பிழையில்லை.&lt;br /&gt;சாதியமைப்புக்கு எதிரான சித்தர்களின் கண்டனக் குரல்கள் ஒரு சமூகச் சீர்திருத்தக் குரலாக மட்டும் ஒலிக்கவில்லை. மாறாகச் சாதீய, சனாதன ஒடுக்கு முறைகளுக்கு ஆளான தாழ்த்தப்பட்ட சமூகத்தின் புரட்சிகர எதிர்விளைவாகவே நினைக்கத் தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சிவவாக்கியர் பாடல்களில் இந்த அடையாளங்கள் இன்னும் அழுத்தமாகவே வெளிப்படுகின்றன. &lt;b&gt;“பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?”&lt;/b&gt; என்ற சிவவாக்கியரின் குரலில் வெளிப்படும் ஆவேசம், சாதீய ஒடுக்குதலில் பீறிட்டுக் கிளம்பும் தலித்திய எதிர்க்குரலன்றி வேறென்ன?.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் பார்ப்பனர்களின் சாதீய அடையாளத் தோற்றம் குறித்து &lt;b&gt;“பிறந்தபோது கோவணம் இலங்குநூல் குடுமியும் பிறந்ததுடன் பிறந்ததோ” &lt;/b&gt;என்று வினா எழுப்பும் பகுதியில் பார்ப்பனர்களின் கோவணம், குடுமி, பூணூல் முதலான அவர்களின் புனித அடையாளங்களை விசாரணைக்குட்படுத்துவது நேரடியான எதிர்த் தாக்குதலாக அமைந்துள்ளமை வெளிப்படை. சிவவாக்கியரின் கவிதைகளில் வெளிப்படும் புனைவற்ற வெளிப்படையான மொழி அதாவது உயர்சாதினரால் நாசூக்கற்றதாகக் கருதப்படும் தலித்தியச் சொல்லாடல்கள் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்தும். &lt;br /&gt;&lt;br /&gt;சித்தர்; சிவவாக்கியர் பாடல்களில் வெளிப்படும் சமூகமீறல்களின் எதிர்க்குரலில் வெடித்துக் கிளம்புவது ஆதிக்கச் சாதிகளுக்கெதிரான ஒரு தலித்தியப் புரட்சிக்குரலே என்று கருத வாய்ப்புள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;துணைநின்ற நூல்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;1. அருணன்,     தமிழரின் தத்துவ மரபு-இரண்டாம் தொகுதி, 2008&lt;br /&gt;2. மு.அருணாசலம்,    தமிழ் இலக்கிய வரலாறு-14 ஆம் நூற்றாண்டு,  &lt;br /&gt;3. க.கைலாசபதி,    ஒப்பியல் இலக்கியம், 1978&lt;br /&gt;4. வா. சரவண முத்துப்பிள்ளை,  பெரிய ஞானக்கோவை, (ஆ.இ)&lt;br /&gt;5. க.நாராயணன்,    சித்தர் சிவவாக்கியர், 2003&lt;br /&gt;6. ச.மாடசாமி,     பாம்பாட்டிச் சித்தர், 1980&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-9187082969359553644?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/9187082969359553644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=9187082969359553644&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/9187082969359553644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/9187082969359553644'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/04/3.html' title='சித்தர் சிவவாக்கியர் பாடல்களில் சமூக மீறல்களின் எதிர்க்குரல் - பகுதி 3'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-1131489893507217235</id><published>2011-01-28T13:25:00.000+05:30</published><updated>2011-01-28T13:25:43.399+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாவலரேறுவின் தென்மொழி இதழ்'/><title type='text'>தென்மொழி இதழல்ல இயக்கம் - பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம் -பகுதி-2</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாவலரேறுவும் தென்மொழியும்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்மொழி 1963 ஆம் ஆண்டில் மீண்டும் முழுவேகத்தோடு வெளிவரத் தொடங்கிய காலம்தொட்டே பாவலரேறு அவர்கள் தென்மொழியையும் தென்மொழி அன்பர்களையும், மொழியையும் நாட்டையும் ஆளாமல் துஞ்சுவதில்லை என்ற இதழின் நோக்கத்திற்கு ஆற்றுப்படுத்தும் முயல்வில் இதழினை இயக்கமாக்கும் பணியில் முனைப்பு காட்டி வந்தார்கள். அறிவுக் கொளுத்தல்களும் உணர்வூட்டல்களும் மட்டும் போதா, அவை செயற்பாடு எய்தவேண்டுமெனில் ஓர் இயக்கம் இன்றியமையாதது என்னும் நிலையில் இதழின் முதலாண்டிலேயே தென்மொழி இயக்கம் குறித்த ஓர் அறிவிப்பினை இதழில் வெளியிட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;“மொழி, இலக்கிய, இன, வரலாற்றுப் பாதுகாப்பிற்காக மட்டுமின்றி, மக்கள் வாழ்வியற் கூறுபாடுகளை ஆங்காங்கு அறிந்து துணைநிற்கவும், அவர்தாம் அல்வழிச் செல்லுங்கால் நல்வழிப்படுத்தவும், செவ்வழிப் போவார்க்கு அவ்வழி உதவவும் குல, சமய, அரசுச் சார்பின்றி ஒரு தனித்தமிழ்க் கழகம் வேண்டுவதாயிற்று. இதன் கொள்கைகளை ஒருவாறு வகுத்துரைப்போமாயின், தமிழ்க் குலமும், தமிழர் சமயமும், தமிழ் அரசும் நிறுவுகின்ற முயல்வே ஆம் எனக்கொள்க. இத்தகைய உயர்தனிச் செம்பொருட் கழகமே, நாம் நிறுவப் புகும் தென்மொழிக் கழகம்.” &lt;br /&gt;&lt;br /&gt;தென்மொழிக் கழகத்தின் நோக்கங்களாக ஐயா அவர்கள் வரையறுத்துள்ள தமிழ்க் குலமும், தமிழர் சமயமும், தமிழ் அரசும் நிறுவுதல் என்ற மூன்று முதன்மைத்  திட்டங்களும்தான் பாவலரேறு தமிழுலகிற்கு வகுத்தளித்த சமூக அரசியல் கோட்பாடு என்று வரையறுப்பது சாலப் பொருந்தும். பிற தமிழ் இயக்கங்களிலிருந்தும், திராவிட இயக்கங்களிலிருந்தும் ஐயாவின் தென்மொழி இயக்கம் வேறுபடும் மையப்புள்ளி இதுவே. இம்மையப் புள்ளியிலிருந்தே இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் சமூக, அரசியல் இயக்கங்களை ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் பார்க்க இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;1916, தமிழகத்தின் சமூக, அரசியல் வரலாற்றில் முகாமையான பாத்திரம் வகித்த இரண்டு இயக்கங்கள் தோற்றம் பெற்ற ஆண்டு. முதல் இயக்கம், மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கம், இரண்டாவது இயக்கம், நீதிக் கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம். இந்த இரண்டு இயக்கங்களுமே தமிழ்த் தேசியக் கருத்தாக்கங்களுக்குப் பேருதவி புரிந்தவை. தனித்தமிழ் இயக்கம் மொழித்துறையில் வடமொழியின் ஆதிக்கத்தை எதிர்த்தும், தென்னிந்திய நலஉரிமைச் சங்கம். சமூகத்துறையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தும் தொடங்கப்பட்ட இயக்கங்கள். பாவலரேறுவின் தென்மொழி இயக்கம் மொழித்துறை, சமூகத்துறை ஆகிய இரண்டு நிலைகளிலும் வடவர்களின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய இயக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்கமோ வேளாளச் சார்பும் சைவ சமயச் சார்பும் உடையது. பாவலரேறு ஐயாவின் தென்மொழி இயக்கமோ தமிழ்க் குலம், தமிழர் சமயம் எனச் சாதி, மத வேறுபாடுகளற்ற பொதுமையை வேண்டிப் போராடிய இயக்கம். &lt;br /&gt;நீதிக்கட்சி மற்றும் அதன் தொடர்ச்சியில் உருவான பெரியாரின் திராவிட இயக்கங்கள் போன்றவற்றிற்குச் சாதி, மத வேறுபாடுகளற்ற பொதுமை என்ற சிந்தனை யிருந்தது என்றாலும் தமிழ் அரசு நிறுவுதல் என்ற நோக்கம் அவற்றுக்கில்லை. தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நிலம் என்ற நிலையிலிருந்து மாறுபட்டுத் திராவிடம் என்ற கற்பனைக் கருத்தாக்கத்தால் இந்த வகை இயக்கங்களுக்குத் தமிழ்த் தேசிய ஓர்மை ஏற்படவில்லை. ஐயாவின் தென்மொழி இயக்கமோ தனித்தமிழ்நாடு ஒன்றே அனைத்துச் சிக்கலகளுக்குமான ஒரே தீர்வு என்ற கொள்கையில் உறுதிப்பாட்டுடன் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“தமிழினம் தலைதூக்கவும் தமிழ்நாடு தன்னிறைவுறவும் தமிழ்மொழி தூய்மையுறவும் வேண்டும். இதற்குத் தடையாக இருப்பது பார்ப்பனியமும் இந்து மதமும். இவற்றுக்கு அடிப்படையாக இருப்பது இந்திய ஒருமைப்பாடு. எனவே நமது தலையாய அரசியல் பணி இதனைச் சிதைப்பதே. தமிழக விடுதலையே நமது மூச்சு என்பது அவரது அரசியல் தருக்கம். தமிழின விடுதலையின் மூன்று பெரும் எதிரிகளாக அவர் இந்து மதத்தையும், பார்ப்பனியத்தையும், இந்திய ஒற்றுமையையும் குறிப்பிடுவது ஆழ்ந்து சிந்திக்கற்பாலது. பிற தனித்தமிழ் இயக்கத்தினரிடமிருந்தும், பிற தனிநாட்டு இயக்கத்தினரிடமிருந்தும் பெருஞ்சித்திரனார் வேறுபட்டு நிற்கும் மிக முகாமையான புள்ளி இது.” (அ.மார்க்சு, பாவலரேறு பெருஞ்சித்தினார் வாழ்க்கைக் குறிப்புகள், ப.173-74) &lt;br /&gt;மேலே இடம்பெற்றுள்ள மேற்கோளில் மார்க்சு அவர்கள் பெருஞ்சித்திரனார் வேறுபட்டு நிற்கும் புள்ளி என்று குறிப்பிடும் பகுதிதான் தென்மொழி இயக்கத்தின் தனித்தன்மை வாய்ந்த பகுதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-1131489893507217235?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/1131489893507217235/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=1131489893507217235&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1131489893507217235'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1131489893507217235'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/01/2.html' title='தென்மொழி இதழல்ல இயக்கம் - பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம் -பகுதி-2'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-2797253756950781727</id><published>2011-01-23T22:19:00.000+05:30</published><updated>2011-01-23T22:19:53.009+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாவலரேறுவின் தென்மொழி இதழ்'/><title type='text'>பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம்</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தென்மொழி இயக்கம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருஞ்சித்திரனாரின் தமிழ் இயக்க மற்றும் அரசியல் பணியில் பெரும் பங்காற்றியது அவரின் தென்மொழி இதழே. இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழன்பர்களின் போர்வாளாக இவ்விதழ் விளங்கியது. முதல் இதழ் 1-8-1959 இல் வெளியானது. இதழின் குறிக்கோள் முழக்கமாகப் பின்வரும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்&lt;br /&gt;அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்&lt;br /&gt;துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்&lt;br /&gt;எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்மொழி இதழ் தன் குறிக்கோளில் ஒருபோதும் பின்வாங்கியதும் இல்லை, சமரசம் செய்து கொண்டதுமில்லை. தென்மொழி ஓர் இதழன்று, ஓர் இயக்கம் என்று பாவலரேறு அவர்களே குறிப்பிட்டதற்கேற்ப இதழின் கட்டுரைகளில் பாடல்களில் எப்பொழுதும் தமிழுணர்வு கொழுந்து விட்டெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt; 1960 களின் தொடக்கத்தில் தென்மொழி முழுவீச்சில் செயல்படத் தொடங்கிய காலத்தில் தமிழின உணர்வுடைய ஒவ்வொரு தமிழனும் தென்மொழியை வாசிப்பதில் செம்மாப்பு எய்திய நிலை இருந்தது. தமிழுணர்வின் அடையாளச் சின்னமாகத் தென்மொழி அக்காலங்களில் விளங்கியது. பாவாணர், பாவலரேறு ஆகியோரின் படைப்புகள் தனித்தமிழ் உணர்வை ஊட்டியதோடு நில்லாமல் மொழி, இன, நில மீட்சிக்கான எழுச்சியை விதைப்பனவாகவும் விளங்கின. 1965 இல் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய இந்தி எதிர்ப்பு மொழிப்போர் நடைபெற்றது. இம்மொழிப் போருக்கான உந்துசக்தியாக இருந்து செயலாற்றிய பெருமை தென்மொழிக்கு உண்டு.&lt;br /&gt; &lt;br /&gt;தென்மொழியின் மைய நோக்கம் தமிழ்நாட்டு விடுதலையே என்பதனை அதன் ஒவ்வொரு இதழும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும். தென்மொழி இரண்டாமாண்டின் முதல் இதழில் தென்மொழியின் இம்மைய நோக்கத்தை வலியுறுத்தி ஐயா எழுதிய ஆசிரிய உரையின் ஒருபகுதி பின் வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நாட்டு விடுதலை நோக்கி நாம் வைத்த வலக்காலை எக்காரணம் பற்றியும் பின்னிழுக்க மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஏதம் படுப்பாரை என்னவழி முயன்றேனும் சேதப்படுத்துவோம். இஃது உறுதி! பனிமலை அன்ன உறுதி! அரசினுக்கும் ஆளுமைக்கும் அஞ்சி, நம் முரசம் என்றும் தன் முழக்கை நிறுத்தாது. வாழ்க்கைக்கும் இன்பத்துக்கும் கெஞ்சி நாம் என்றும் நம் குரலில் குழைவைக் காட்டோம்! உயிர்மேல் நமக்கு உவப்பில்லை! செல்வ நிலைக்கு நாம் என்றும் அங்காந்ததில்லை! நாம் பிறந்த நாட்டுக்கும் மொழிக்கும் நமக்கிருக்கும் உடலும் உழைப்பும் செலவிடப்பெறும்.! ..இவற்றுக்கெல்லாம் படைக்கருவியாகத் தொடங்கியதே, தென்மொழி&lt;/b&gt; (சுவடி:2, ஓலை:1, ஆசிரிய உரை)&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரிய உரையில் ஐயா குறிப்பிட்டது போல் தென்மொழி கடைசிவரை தமிழ்நாட்டு விடுதலைக்கான போர்ப்படையாக விளங்கியது என்பதனையும் உயிர்மேல் நமக்கு உவப்பில்லை! செல்வ நிலைக்கு நாம் என்றும் அங்காந்ததில்லை! என்ற வரிகளுக்கு உண்மையாக ஐயாவின் முழுவாழ்க்கையும் அப்பழுக்கற்றதாக விளங்கியது என்பதனையும் காலம் மெய்ப்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தென்மொழி இயக்கத்துக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. தூய தமிழ் வளர்ச்சி, தமிழின அடிமை நீக்க முயற்சி, தமிழக விடுதலை என்பார் பாவலரேறு. இந்த மூன்று நோக்கங்களும் தமிழக விடுதலை என்ற ஒற்றை இலக்கில் மையம் கொண்டுள்ளன என்பதைத் தருக்க முறையில் விளக்கிச் சொல்லும் ஐயாவின் அரசியல் தெளிவு நம்மை வியப்பிலாழ்த்துகிறது. &lt;br /&gt; &lt;br /&gt;&lt;b&gt;இந்தியா ஒன்றாக இருக்கும்வரை இந்துமதம் இருக்கும். இந்துமதம் இருக்கும்வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும்வரை மதப்பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையிலிருந்தும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனியப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை தமிழ்மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது, தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது எனவே இந்து மதத்தினின்றும் மதப் பூசல்களினின்றும் ஆரியப் பார்ப்பனியதினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும். &lt;/b&gt;&lt;br /&gt;    (பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு மலர், ப.105)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் கடந்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய தனித் தமிழியக்கம், திராவிட இயக்கம் முதலான இயக்கங்கள் மொழித் தூய்மையையும் ஆரிய மேலாதிக்க எதிர்ப்பையும் இருவேறு முரண்பட்ட நிலைகளில் சிந்தித்து மயங்கிக் கிடந்த சூழலில் பாவலரேறுவின் தென்மொழி இயக்கம் இந்த இரண்டு முரண்பட்ட இயக்கச் சிந்தனைகளையும் ஒன்றாக இணைத்துத் தமிழக விடுதலையால் அவை முழுமைபெறும் என்பதனை மெய்ப்பித்துக் காட்டியது. தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று எழுதியது பேசியதோடு மட்டும் நில்லாமல் எள்ளளவும் தம் கொள்கையிலிருந்து பிறழாமல் அடக்குமுறைகள் எத்தகு கொடியதாக இருந்தபோதும் தனியனாக நெடுவழி நடந்தவர் ஐயா அவர்கள். அவரின் போராட்ட வாழ்க்கையில் இறுதி மூச்சுவரை கொடுஞ்சிறைக்கும் அஞ்சாமல் தொடர்ந்து செயலாற்றிய காரணத்தால் சிறைவாழ்க்கை அவருக்குப் பூந்தோட்டமாயிற்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-2797253756950781727?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/2797253756950781727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=2797253756950781727&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/2797253756950781727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/2797253756950781727'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/01/blog-post_23.html' title='பெருஞ்சித்திரனாரின் தென்மொழி இயக்கம்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-4038977274102095827</id><published>2011-01-15T07:51:00.000+05:30</published><updated>2011-01-15T07:51:19.351+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கைக் குறிப்பு'/><title type='text'>பாவலரேறு பெருஞ்சித்தினரனார் வாழ்க்கைக் குறிப்புகள்</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;பாவலரேறு எனவும் பெருஞ்சித்திரனார் எனவும் போற்றி மதிக்கப்படும் இவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்ற சிற்றூரில் 1933 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 10 ஆம் நாளன்று பிறந்தார். இவரின் பெற்றோர் &lt;b&gt;துரைசாமி -குஞ்சம்மாள் &lt;/b&gt;தம்பதியினர். இவருடைய இயற்பெயர் இராசமாணிக்கம். ஆனால் இவர் தம்முடைய தந்தையார் பெயரை இணைத்துத் &lt;b&gt;துரை.மாணிக்கம் &lt;/b&gt;என்று தன்பெயரை மாற்றி அமைத்துக் கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் பருவத்தில் குழந்தை என்னும் பெயரில் கையெழுத்து இதழையும் சிறிது காலம் கழித்து அருணமணி என்னும் புனைபெயரில் மலர்க்காடு என்ற கையெழுத்து இதழையும் நடத்தினார். மல்லிகை, பூக்காரி என்னும் இரு பாவியங்களைத் துரை.மாணிக்கம் தம் பள்ளிப் பருவத்திலேயே இயற்றினார். சேலம் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இவரின் தமிழாசிரியர்களாக அமைந்தவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் &lt;b&gt;சேலம் நடேசனாரும் தமிழ்மறவர் பொன்னம்பலனாரும் &lt;/b&gt;ஆவர்.&lt;br /&gt; &lt;br /&gt;1950 இல் பள்ளிப்படிப்பை முடித்த துரை. மாணிக்கம் சேலம் அரசுக் கல்லூரியில் தம் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவரின் ஆசானாக &lt;b&gt;மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் &lt;/b&gt;அமைந்து சிறந்தது இக்கல்லூரியில்தான் என்பது மிக முகாமையான செய்தியாகும். கல்லூரியில் ஆசிரியர் மாணவர் என்ற நிலையில் தொடங்கிய இவர்களின் உறவு கடைசிவரை தொடர்ந்தது. கல்லூரிப் படிப்பிற்கு இடையிலேயே சேலம் ஆட்டையாம்பட்டி சின்னசாமி -செல்லம்மாள் இணையரின் புதல்வி கமலம் என்கிற &lt;b&gt;தாமரையம்மையாரைக் &lt;/b&gt;காதலித்து மணம் புரிந்துகொண்டார். திருமண நாள் 25-4-1951.&lt;br /&gt;    &lt;br /&gt; 1954 இல் அஞ்சல்துறை உதவியாளராகப் புதுவையில் பணியமர்த்தம் கிடைத்தது. பாவேந்தரோடு பழகக்கூடிய வாய்ப்பை எண்ணி மிக மகிழ்வோடு புதுவைப் பணியை ஏற்றார் பாவலரேறு. எதிர்பார்த்தது போல் &lt;b&gt;பாவேந்தருடனான நட்பு &lt;/b&gt;கிட்டியது. பாவலரேறுவின் பாக்கள் பல இதழ்களிலும் வெளிவந்தன. 1959 இல் பாவலரேறு கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாவலரேறுவின் அச்சிதழ் நடத்தும் நோக்கம் நிறைவேறும் தக்கசூழல் அமைந்தது கடலூரில்தான். &lt;br /&gt;&lt;br /&gt;பாவாணர் இக்காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அகரமுதலிப் பணிப் பொறுப்பேற்றிருந்தார். பாவாணரின் வழிகாட்டுதலுடன் திங்கள் ஈரிதழாக 01-08-1959 இல் கடலூரிலிருந்து பாவலரேறுவின் &lt;b&gt;தென்மொழி &lt;/b&gt;வெளிவரத் தொடங்கியது. துரை.மாணிக்கம் பெருஞ்சித்திரன் என்னும் புனைபெயரில் பொறுப்பாசிரியராகத் தென்மொழியில் இடம்பெற்றார். பதினாறு இதழ்கள் வெளிவந்த நிலையில் தொடர்ந்து இதழை நடத்தமுடியாமல் பொருள் முட்டுப்பாடு காரணமாக இதழ் நின்றுபோனது.&lt;br /&gt; &lt;br /&gt; மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1963 பிப்ரவரி முதல் மீண்டும் தென்மொழி புத்துயிர் பெற்றது. இதழின் சிறப்பாசிரியராகப் பாவாணர் இடம்பெற்றார். உறுப்பாசிரியர்களாக ம.லெனின் தங்கப்பா, மு.சாத்தையா, செம்பியன் ஆகியோர் குறிக்கப் பெற்றனர். தென்மொழி முன்னிலும் வீறுடன் மொழி, இன, நில விடுதலைக்கான சிந்தனைகளை ஆழமாகத் தமிழர் நெஞ்சில் விதைக்கத் தொடங்கியது. இந்நிலையில் 1965 இல் இந்தி வல்லாண்மை எதிர்ப்புப் போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. இப்போராட்ட முனைப்புகளில் தென்மொழியின் பங்கு மிகக் கணிசமானது. போராட்டங்களின் உச்சத்தில் பெருஞ்சித்திரனார் தம் அஞ்சல்துறை அரசுப்பணியை உதறித்தள்ளினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்டும் வகையில் எழுதிய காரணத்தால் தென்மொழி இதழின் பொறுப்பாசிரியரான பெருஞ்சித்திரனாரைக் கைதுசெய்து வேலூர் சிறையில் அடைத்தது தமிழக அரசு.&lt;br /&gt; &lt;br /&gt; 1966 இல் தென்மொழிக்கான சொந்த அச்சுக்கூடம் நிறுவப்பெற்றது. &lt;b&gt;தமிழ்ச்சிட்டு &lt;/b&gt;எனும் சிறுவர் இதழ் பெருஞ்சித்திரனாரால் தொடங்கப்பெற்றது. 1968 இல் திருச்சியில் நடைபெற்ற தனித்தமிழ்க் கழக மாநாட்டின் போது உலகத் தமிழ்க் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் தலைவராக மொழிஞாயிறு பாவாணர் அவர்களும் பொதுச் செயலராகப் பெருஞ்சித்திரனார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். &lt;br /&gt;&lt;br /&gt; மொழிவளர்ச்சிப் பணிகளோடு நில்லாமல் நாட்டு விடுதலை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்ற முனைப்புடன் ஐயா அவர்கள் 1972 இல் திருச்சியில் தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு என்னும் பெயரில் &lt;b&gt;தமிழக விடுதலை மாநாடு &lt;/b&gt;ஒன்றை நடத்தினார். இரண்டாவது தமிழக விடுதலை மாநாட்டினை 1973 இல் மதுரையில் நடத்த முற்பட்டபோது காவல்துறை பெருஞ்சித்தினாரைக் கைது செய்து சிறைப்படுத்தியது. 1974 இல் சிங்கை, மலேசியத் தமிழன்பர்களின் அழைப்பையேற்று ஐயா அவர்கள் மூன்று திங்கள் சிங்கப்பூர், மலேசியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்மொழி உணர்வினையும் இனவுணர்வினையும் ஊட்டும் பல பொழிவுகளை நிகழ்த்தித் தாயகம் திரும்பினார்கள். &lt;br /&gt;&lt;br /&gt; 1974 இல் பாவலரேறுவின் குடும்பமும் தென்மொழி அச்சகமும் சென்னைக்கு இடம் பெயர்ந்தன. 1975 இல் மூன்றாவது தமிழக விடுதலை மாநாடு சென்னைக் கடற்கரையில் நடத்தத் திட்டமிடப்பட்டது. அரசு மாநாட்டை நடத்தவிடாமல் ஐயா மற்றும் முரசொலி அடியார் உள்ளிட்ட இருபத்திரண்டு தனித்தமிழ் மறவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்தது. 1976 இல் நெருக்கடிக் கால அடக்குமுறைச் சட்டத்தின் கீழ்ப் பாவலரேறு ஐயா அவர்களைத் தளைசெய்து சிறையிலடைத்தது இந்திய நடுவணரசு. மிசா காலங்களில் தென்மொழி தடைசெய்யப்பட்ட போது ஐயாவின் தமிழ்ச்சிட்டு இதழே தென்மொழி இதழாக வெளிவந்தது. தமிழன்பர்களின் அழைப்பையேற்றுப் பாவலரேறு அவர்கள் 1977 இல் இலங்கைப் பயணத்தையும் 1978 இல் அந்தமான் செலவையும் மேற்கொண்டார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt; தொடர்ந்து, ஐயா அவர்களின் தமிழ்ப்பணியோடு குமுகாயச் சீர்திருத்தப் பணிகளும் அரசியல் செயற்பாடுகளும் முடுக்கம் பெற்றன. 1981 இறுதியில் &lt;b&gt;உலகத் தமிழின முன்னேற்றக் கழகம் &lt;/b&gt;என்னும் அமைப்பு நிறுவப்பெற்றது. இதன் தொடக்க மாநாடு சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பிற பகுதிகளிலிருந்தும் தமிழின உணர்வாளர்கள் பலர் இம்மாநாட்டில் பங்கேற்றனர். 1982 இல் உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தின் இதழாகத் தமிழ்நிலம் தொடங்கப்பட்டது. 1983 -84 இல் தென்மொழி அன்பர் திரு. வளங்கோ அவர்களின்  முன்முயற்சியில் பாவலரேறு அவர்கள் ஐரோப்பியச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து, பிரான்சு, செருமனி, சுவிட்சர்லாந்து நாடுகளில் தமிழ்மொழி, இன உணர்வூட்டும் பொழிவுகளை ஆற்றித் தாயகம் திரும்பினார்கள். தொடர்ச்சியாக, தமிழ் மொழி, இன நலம் நாடும் அமைப்புகளெல்லாம் தத்தம் நிகழ்ச்சிகளில் பாவலரேறு அவர்களின் பங்கேற்பினை விழைந்தன. ஐயா அவர்களும் தமிழகமெங்கும் இடையறாது பயணம்செய்து சொற்பொழிவுகளாற்றித் தொடர்ந்து செயல்களத்திலேயே இயங்கிக் கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt; 1983 இல் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போரின்போதும் அதற்கு முன்பும் தமிழகம் வரும் தமிழீழத் தலைவர்கள் பலரும் பாவலரேறு அவர்களைச் சந்திப்பதும் கலந்துரையாடுவதும் கருத்துரைகள் பெறுவதும் வழக்கமாயிருந்தன. விடுதலைப் புலிகள், தமிழீழப் போரில் முனைப்புடன் வினையாற்றிக் கொண்டிருந்த காலங்களில் பாவலரேறு ஐயா அவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதும் எழுதுவதும் காலத்தின் கடமை என்பதனை உணர்ந்து செயலாற்றிக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராசீவ் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழீழ ஆதரவுக் குரல்களுக்கு இந்திய அரசு தடைவிதித்தது. விடுதலைப் புலிகள் இயக்கமும் தடை செய்யப்பட்டது. ஐயா அவர்கள் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து எழுதியும் பேசியும் வந்தார்கள். 1993 இல் தமிழீழ ஆதரவுப் பேரணி நடத்தத் திட்டமிட்டதாலும் தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையைத் தென்மொழியில் தொடர்ந்து எழுதியதாலும் ஐயா பாவலரேறு அவர்களைத் &lt;b&gt;தடா எனும் அடக்குமுறைச் சட்டத்தின்படி கைதுசெய்து கொடுஞ்சிறையிலடைத்தது&lt;/b&gt; தமிழக அரசு. தடாச் சிறைக் கொடுமைகளால்; ஐயாவின் உடல்நலம் நலிவுற்றது. &lt;br /&gt;&lt;br /&gt; ஏழுமாத கால தடாக் கொடுஞ்சிறை வாசத்தின் பின்னர் ஐயா அவர்களின் உடல் நலிவுற்றாலும் உள்ளம் முன்னிலும் பலமடங்கு வீறுகொண்டெழுந்தது. தொடர்ந்து போராட்டங்கள், சிறைவாழ்க்கை என ஐயாவின் செயல்களங்கள் விரிந்தன. &lt;br /&gt;1995 மார்ச் திங்களில் உடுமலைப்பேட்டை, ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் பங்கேற்கப் புறப்பட்ட ஐயா உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை திரும்பினார்.  தொடர்ந்து காய்ச்சலில் துன்புற்ற நிலையிலும், தமிழே பயிற்றுமொழி, ஆட்சிமொழி என்பதை வலியுறுத்தித் தலைநகர்த் தமிழ்க்கழகம் நடத்திய பேரணியில் குடும்பத்தோடு பாவலரேறு ஐயா அவர்கள் கலந்துகொண்டு தளைப்பட்டார்கள். ஐயா அவர்கள் பங்கேற்ற இறுதிப் போராட்டம் இதுவே. &lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் 7-6-95 இல் இராமச்சந்திரா மருத்துவமனையில் உடலநலக் குறைவு காரணமாக மருத்துவச் சிகிச்சைக்கு அனுமதிப்பட்டிருந்த ஐயா அவர்களின் குருதி அழுத்தம் குறைந்து சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் &lt;b&gt;11-6-1995 ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணியளவில் பாவலரேறு ஐயா இயற்கை எய்தினார்கள்.&lt;/b&gt; உலகத் தமிழர்களின் உரிமைக்குச் செயலாற்றும் ஒப்பற்ற ஒரு போராளி மறைந்தார். 16-6-1995 அன்று ஐயா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட உலகத் தமிழன்பர்கள் கலந்துகொண்டு தமிழின விடியலுக்கான வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம் செலுத்தினார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-4038977274102095827?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/4038977274102095827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=4038977274102095827&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/4038977274102095827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/4038977274102095827'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2011/01/blog-post.html' title='பாவலரேறு பெருஞ்சித்தினரனார் வாழ்க்கைக் குறிப்புகள்'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-8203893849229099221</id><published>2010-12-25T08:01:00.000+05:30</published><updated>2010-12-25T08:01:20.825+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் அணிந்துரை'/><title type='text'>கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு - அணிந்துரை</title><content type='html'>&lt;b&gt;செ. பவானியின் &lt;br /&gt;கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு&lt;br /&gt;அணிந்துரை&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் தமிழ்ஒளி தமிழிலக்கிய வரலாற்றில் மறக்கப்பட்ட / மறைக்கப்பட்ட மிகச்சிறந்த படைப்பாளி. அவரின் கவிதைகள் காலவெள்ளத்தால் கரைந்து போகாத கவித்துவமும் கருத்துச் செறிவும் உடையவை. பாவேந்தர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலத்துக் கவிஞர். இந்த இருவரது படைப்பாளுமைகளையும் உள்வாங்கித் தமக்கென ஒரு புதுப்பாதை சமைத்துக் கொண்டவர். பாரதி, பாவேந்தர் வரிசையில் புதுச்சேரி தமிழுலகிற்குத் தந்த மிகப்பெரிய கொடை கவிஞர் தமிழ்ஒளி. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த மனிதநேயப் படைப்பாளி. எங்கும் எப்பொழுதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவே உரத்துக் குரல் கொடுத்தவர். அவருடைய படைப்புகள் பல பரிமாணங்களைக் கொண்டவை.&lt;br /&gt;&lt;br /&gt; மனிதாபிமானம், தேசியம், சமத்துவம் ஆகிய மாபெரும் கொள்கைகளில் பற்றுகொண்டு, தமிழின் பண்டைய மற்றும் நவீன இலக்கிய மரபுகளில் தோய்ந்து சிந்தனை வளத்தோடும் சந்த நயத்தோடும் செஞ்சொற் கவிதைகளை யாத்தவர் கவிஞர் தமிழ்ஒளி.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் தமிழ்ஒளி தமிழ்ச் சமுதாயத்தில் சாதி வேற்றுமையில்லாத, ஏற்றத் தாழ்வற்ற சமூக அமைப்பை நிறுவக் கனவு கண்டார். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லதை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். இந்தியச் சமுதாயத்தைக் கட்டிப் போட்டிருக்கும் சாதி மதக் கோட்பாடுகளையும் சுரண்டல் கொள்கைகளையும் ஆணிவேரோடு பிடுங்கி எறியும் வல்லமை தொழிலாளி வர்க்கத்துக்கே உண்டு என்பதை அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் பல்வேறு பிரிவினரையும் வர்க்க அமைப்புகளில் ஒன்று திரட்டும் பணியைத் தம் படைப்புகளில் பாராட்டினார், துணைநின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் தமிழ்ஒளி தம் கவிதைகளிலும் குறுங்காவியங்களிலும் சிறுகதைகளிலும் எதார்த்த வாழ்விலுள்ள இன்னல்கள் பலவற்றைப் பரவலாக எடுத்துரைக்கின்றார். ஒடுக்கப்பட்ட மக்களின் சோகமயமான வாழ்க்கைச் சித்திரம் படிப்பவர்கள் நெஞ்சை நெகிழ்விக்கச் செய்யும் வகையில் கவிஞரின் படைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவரின் காவியங்களும் சிறுகதைகளும் மிகுதியும் துன்பியல் முடிவுகளைக் கொண்டதாகவே படைக்கப்பட்டிருக்கும். அவரின் வாழ்க்கைச் சூழல் அப்படி. சொகுசு மாளிகைகளில் இருந்துகொண்டு கற்பனைகளில் மிதந்து அவர் தம் இலக்கியங்களைப் படைக்கவில்லை. வறுமை, பசி, பட்டினி இவைகளோடு வாழ்க்கையே போராட்டமாய்க் காலந்தள்ளும் மக்களோடு மக்களாய் இருந்து தம் படைப்புகளைப் படைத்தவர் தமிழ்ஒளி. &lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் தமிழ்ஒளி கவிதைத் துறை மட்டுமல்லாது தமிழிலக்கியத்தின் பல்வேறு படைப்பிலக்கிய வடிவங்களிலும் தம் கவனத்தைச் செலுத்தியவர். நாடகம், வரலாறு, காவியங்கள், குறு நாவல்கள், சிறுகதைகள் என அவர் படைத்த நூல்களின் பட்டியல் நீளும். படைப்பிலக்கியத்துறை மட்டுமல்லாது ஆய்வு நூல்கள் படைப்பதிலும் தமிழொளி முத்திரை பதித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;II&lt;br /&gt;கவிஞர் தமிழ்ஒளியின் ‘உயிரோவியங்கள்’ சிறுகதைத் தொகுதி பதினைந்து சிறுகதைகளைக் கொண்டது. இச் சிறுகதைத் தொகுதியிலுள்ள சிறுகதைகளை ஆய்வு செய்து கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் -ஓர் ஆய்வு என்ற தலைப்பில் நூலாகத் தந்துள்ளார் செ.பவானி. இவர் என்னுடைய வழிகாட்டுதலில் தம் இளமுனைவர் பட்ட ஆய்வினை இதே தலைப்பில் நிகழ்த்தியவர். அந்த ஆய்வேடே நூலாக்கம் பெற்று இப்பொழுது வெளிவருகின்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய கல்வியாளர்களின் ஆய்வுகள் குறித்துக் கல்விப் புலத்துக்கு வெளியே ஓர் அவநம்பிக்கையே நிலவிவரும் சூழலில் இத்தகைய ஆய்வுகள் வெளிவருவது ஒரு நம்பிக்கை ஊட்டக்கூடிய செயலாகும். பட்டங்களுக்காக நிகழ்த்தப்படும் பல்கலைக் கழக ஆய்வுகள் கடந்த முப்பதாண்டுகளில் பல்கிப் பெருகிவிட்டன. அதிலும் பல பல்கலைக் கழகங்கள் வருவாயை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தம் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் இளமுனைவர் பட்டப் படிப்புகளைத் தொடங்கியபோது கல்வியாளர்கள் மற்றும் நல்ல ஆய்வாளர்கள் மத்தியில் ஓர் அச்சம் தொற்றிக்கொண்டது. அந்த அச்சம் நியாயமானதுதான் என்பதனைக் கடந்தகால நடைமுறைகள் நமக்கு நிரூபித்தன. ஆனால் அதிலும் ஒரு மெல்லிய ஆறுதலை இப்படிப்பட்ட சில நல்ல ஆய்வுகள் நமக்கு வழங்கின. அந்தவகையில் ஆய்வாளர் பவானி அவர்களின் இவ் ஆய்வு முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞராக மட்டுமே தமிழுலகிற்குத் தெரிந்த கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஆய்வாளர் இப்பொருளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டமையே அவரின் தனித்தன்மையைக் காட்டுகின்றது. எடுத்துக்கொண்ட பொருளை நுணுகிக் கற்று வகைதொகை செய்து நல்லதொரு ஆய்வாகப் பின்வரும் நான்கு இயல்களாக அமைத்துள்ளார் செ.பவானி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் படைப்பும்&lt;br /&gt;2. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் கருவும் உருவும்&lt;br /&gt;3. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் பாத்திரப்படைப்பு&lt;br /&gt;4. தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாயப் பார்வை.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு இயல்களிலும் இழையோடியிருப்பது கவிஞர் தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகள்தாம் என்பது இந்நூலின் தனிச்சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt; உயிரோவியங்கள் நூலின் முன்னுரையில் கவிஞர் இன்குலாப் தமிழ்ஒளியின் மனிதநேயம் எப்படிப்பட்டது என்பதை மிகத் தெளிவாக வரையறுக்கின்றார். அப்பகுதி வருமாறு,&lt;br /&gt;&lt;b&gt;“மனிதநேயம் என்பது ஒடுக்குபவனையும் ஒடுக்கப்படுவனையும் ஒரே நிலையில் வைத்து, அன்பு காட்டுவதன்று. .. .. மனசாட்சியுள்ளவன் இருவருக்கும் பொதுவாக நிற்கமாட்டான். தமிழ்ஒளியின் மனிதநேயம் ஒடுக்குமுறைக்கு எதிரானது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒருகுரல் வேண்டியிருக்கிறது. தம் காலத்தில் கவிஞர் தமிழ்ஒளி அத்தகைய குரலாக இருந்திருக்கின்றார். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் தமக்குச் சொந்தமான ஒரு குரலைக் கேட்காமல் போனதுதான் பரிதாபத்துக்குரியது. இதற்குக் கவிஞர் தமிழ்ஒளியோ, ஒடுக்கப்பட்டவர்களோ பொறுப்பாக மாட்டார்கள். இந்த நியாயத்தின் குரல்களைத் தமது பகட்டு ஆரவாரத்தால் மூழ்கடிக்கும் முதலாளியம் மட்டுந்தான் இதற்குப் பொறுப்பாகும்.”&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் இன்குலாப்பின் மேற்கோளைத் தமது நூலில் எடுத்துக்காட்டும் நூலாசிரியர் செ.பவானி தமது நூலின் மையப்புள்ளியாக தமிழ்ஒளியின் மனிதநேயம் குறித்த பதிவுகளை அமைத்துக் கொண்டுள்ளார். ஒடுக்குமுறைக்கு எதிரான குரலாகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான குரலாகவும் சிறுகதையாசிரியர் தமிழ்ஒளியின் குரல் எவ்வாறு வெளிப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே அவரின் ஆய்வுநூல் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ஒளியின் சிறுகதைகள் எப்பொழுதும் பசி, பட்டினி, வறுமை, சாவு என்று ஒரே சோக மயமாயிருக்கிறது என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு. அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரின் சிறுகதையிலேயே அவர் பதில் சொல்கிறார். பட்டினிச் சாவு கதையில் கதையாசிரியரும் (தமிழ்ஒளி) அவரது நண்பர் ராமுவும் பேசிக் கொள்வதாக வரும் உரையாடல் பின்வருமாறு, &lt;br /&gt;&lt;br /&gt;‘சமுதாயம் முன்னேறுகிறது’ என்று ராமு சொன்னான், ‘இல்லை செத்துக் கொண்டிருக்கிறது’ என்று நான் பதில் சொன்னேன். ‘உனக்கு எப்பொழுதும், சாவு, பயங்கரம், ட்ராஜெடி இதுதான் நினைவு, எல்லாம் கற்பனை’ என்று தன்னுடைய எதிர் வாதத்தைத் தொடங்கினான்.&lt;br /&gt;‘எட்ட இருந்துகொண்டு சமுதாயத்தைப் பார்த்தால் எல்லாம் கற்பனையாகத்தான் இருக்கும்’ என்று நான் சூடு கொடுத்தேன்.&lt;br /&gt;‘நான் எழுத்தாளனல்ல, இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க. எனக்கு வேறே வேலையிருக்கிறது’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சமுதாயத்தை எட்ட இருந்துகொண்டு வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் தமழ்ஒளியின் சிறுகதைகள் சோகக் கற்பனைகளாகத் தோன்றலாம். ஆனால் அவை புனைவுகளற்ற முழு உண்மைகள். அச்சோகங்களைப் பதிவுசெய்வதும் தீர்வுகளை முன்மொழிவதும் படைப்பாளனின் தலையாய பணி என்பதையே தமிழ்ஒளி தம் சிறுகதைகளில் பிரகடனம் செய்கிறார் &lt;br /&gt;&lt;br /&gt; காலவெள்ளத்தில் கரைந்துபோன தமிழ்ஒளியின் சிறுகதைகளை ஆய்வுப் பொருளாக்கி மறைக்கப்பட்டஃ மறுக்கப்பட்ட அவரின் படைப்பாளுமையை வெளிக் கொணர்கிறார் நூலாசிரியர். சிறுகதைகளின் வடிவ நேர்த்தியில் வெளிப்படும் படைப்பாளுமையை விட உணர்வு பூர்வமான உள்ளடகத்தால் வெளிப்படும் படைப்பாளுமையே சிறந்தது. அந்தவகையில் தமிழ்ஒளியின் சிறுகதைகள் மிகச் சிறந்த படைப்பாக விளங்குகின்றன என்பதே அவரது ஆய்வு நமக்குத் தரும் செய்தியாகும். &lt;br /&gt;&lt;br /&gt; நல்லதோர் ஆய்வுப்படைப்பை வழங்கியிருக்கும் நூலாசிரியர் செ.பவானியின் ஆய்வுப்பணியும் எழுத்துப்பணியும் தொடர வாழ்த்துக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6-12-2010&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-8203893849229099221?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/8203893849229099221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=8203893849229099221&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8203893849229099221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8203893849229099221'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/12/blog-post_8289.html' title='கவிஞர் தமிழ்ஒளியின் சிறுகதைகள் ஓர் ஆய்வு - அணிந்துரை'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-7490020510557277334</id><published>2010-12-25T07:55:00.000+05:30</published><updated>2010-12-25T07:55:59.888+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் அணிந்துரை'/><title type='text'>தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு -அணிந்துரை</title><content type='html'>&lt;b&gt;வி.அமலோற்பவமேரியின்&lt;br /&gt;தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு&lt;br /&gt;-அணிந்துரை&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் தமிழ்ஒளி இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கவி. அவர் திராவிட இயக்கச் சிந்தனைகளில் கால்கொண்டு பொதுவுடைமை இயக்கச் சிந்தனைகளில் தம் சிறகுகளை விரித்தவர். சுரண்டுகிறவனும் சுரண்டப்படுகிறவனுமாகப் பிரிந்துகிடக்கும் இச்சமூக அமைப்பில் ஒரு படைப்பாளி யார் பக்கம் நிற்கவேண்டும் என்பதில் தெளிவான பார்வை அவருக்கிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஏ செந்தமிழா! என்னுடைய சோதரா!&lt;br /&gt; நீ யார்பக்கம்? நிகழ்த்திட வேண்டும்&lt;br /&gt; கொள்ளை யடித்திடும் கொடியவர் பக்கமா? &lt;br /&gt; துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கமா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று தம் கவிதைகளில் கேள்வியெழுப்பும் கவிஞர் தமிழ்ஒளி, தம் படைப்புகளிலும் வாழ்க்கையிலும் எப்பொழுதுமே துன்பமுற்றிடும் தொழிலாளர் பக்கம்தான் இருந்தார். 1944 இல் எழுதத் தொடங்கிய தமிழ்ஒளி, தமிழ், தமிழினம், தமிழர் எழுச்சி, சீர்திருத்தம் என்ற போக்கில் அதாவது தேசிய இனங்களின் உரிமை, தமிழ் ஆட்சிமொழி, சுயமரியாதை, சமத்துவம் என்ற செயல்பாட்டில் தம் படைப்;புப் பணியைத் தொடங்கினார். 1945இல் கவிஞர் மார்க்சீயத் தத்துவத்தை ஆழ்ந்து பயிலத் தொடங்கினார். அதன் விளைவாகவே நிலைபெற்ற சிலை, வீராயி ஆகிய காவியங்களைப் படைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1947இல் இலக்கியப் பேராசான் ஜீவா முன்னிலையில் தமிழ்ஒளி பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தார். 1947 தொடங்கி ஒன்பது ஆண்டுகள் பொதுவுடைமை இயக்கத்தில் உறுப்பினராகவும் கலை இலக்கியத் தளத்தில் புரட்சிப் படைப்பாளராகவும் விளங்கினார். 1953இல் பொதுவுடைமை இயக்கத்திலிருந்து வெளியேறினார். 1953க்குப் பிறகு புதியபுதிய உள்ளடக்கங்களிலும் உத்திகளிலும் கவிதைகள், காவியங்கள் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். தம் இன்னல் மிகுந்த வாழ்வின் கடைசிவரை உழைக்கும் மக்களுக்கான படைப்பாளியாகவும் களப் போராளியாகவும் வாழ்ந்தவர். ஆக, தமிழிலக்கிய நெடும்பரப்பின் மிகச்சிறந்த பொதுவுடைமைக் கவிஞராக வாழ்ந்து மறைந்த தமிழ்ஒளிக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைத்த பாடில்லை. தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்துவிட்டதைத் தவிர, அவர் வேறு ஒருபிழையும் செய்யவில்லை. தமிழகத்தின் சாதீயச் சமூகம் தமிழ்ஒளியை மறைத்துவிட்டது, மறந்துவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், கடந்த முப்பதாண்டுகளில் கல்விப்புலத்தில் பெருகிவரும் இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வுகளுக்கான களம் காலத்தால் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட பல படைப்பாளிகளின் படைப்புகளை ஆய்வு செய்து தமிழுலகிற்கு மீட்டெடுத்து வருகின்றது. அவ்வகையில் வி. அமலோற்பவமேரி என்னுடைய வழிகாட்டுதலில் உருவாக்கிய இளமுனைவர் பட்ட ஆய்வேட்டின் நூல் வடிவமே தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு என்கிற இந்நூல்.&lt;br /&gt;&lt;br /&gt;நாற்பதாண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ்ஒளி கவிதை, காவியங்கள், சிறுகதை, குறுநாவல்கள், நாடகம், ஆய்வுக் கட்டுரைகள் என இலக்கியத்தின் பல துறைகளிலும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தளித்துள்ளார். இவை அனைத்தும் 1944 முதல் 1965 வரையிலான இருபத்தோரு ஆண்டுகளில் படைக்கப்பட்டவை. சிறுகதை, நாடகம், குறுநாவல்கள், ஆய்வு என அவரின் படைப்புகள் பன்முகப்பட்டாலும் தமிழ்ஒளிக்கு மிகுந்த பெயரும் புகழும் பெற்றுத்தந்த படைப்புகள் அவரின் குறுங்காவியங்களே. தமிழ்ஒளி மொத்தம் ஒன்பது குறுங்காவியங்களைப் படைத்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;குறுங்காவியங்கள்:  எழுதிய ஆண்டு வெளிவந்த ஆண்டு&lt;br /&gt;&lt;b&gt;1. கவிஞனின் காதல்    1944   1947&lt;br /&gt;2. நிலைபெற்ற சிலை   1945   1947&lt;br /&gt;3. வீராயி    1947   1947&lt;br /&gt;4. மேதின ரோஜா   1952   1952&lt;br /&gt;5. விதியோ? வீணையோ?  1954   1961&lt;br /&gt;6. மாதவி காவியம்   1958   1995&lt;br /&gt;7. கண்ணப்பன் கிளிகள்  1958   1966&lt;br /&gt;8. புத்தர் பிறந்தார்   1958   1966&lt;br /&gt;9. கோசலக்குமரி   1962   1966&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட தமிழ்ஒளியின் ஒன்பது குறுங்காவியங்களில் முதல் மூன்று குறுங்காவியங்களான கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி குறித்த ஆய்வே இந்நூலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;II&lt;br /&gt;இந்நூலாசிரியர் வி.அமலோற்பவமேரி என்னுடைய ஆய்வு மாணவர். சிறந்த கவிஞர், நல்ல மேடைப் பேச்சாளர், நுணுக்க ஆய்வாளர் எனப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவர். வானொலி, தொலைக்காட்சி முதலான ஊடகங்களின் வழியாகத் தமிழுலகம் அறிந்த இனிய குரலுக்குச் சொந்தக்காரர். மாடலிங் துறையிலும் ஆர்வத்தோடு முனைந்து செயல்படுபவர். முற்போக்கு இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர். அதுமட்டுமன்றி உழைப்பே உயர்வு என்ற கொள்கையாளராய் நாளும் சுறுசுறுப்போடு தொடர்ந்து இயங்கிவருபவர். தம் இளமுனைவர் பட்டத்திற்கு வழக்கமான தலைப்புகளிலிருந்து மாறுபட்டு முற்போக்குச் சிந்தனையாளரும் பாட்டாளிகளின் தோழனும் மிகச்சிறந்த மனிதநேயப் படைப்பாளியுமான தமிழ்ஒளியின் படைப்புகளை ஆய்வுப்பொருளாகத் தேர்ந்தெடுத்தமையே இந்நூலாசிரியரின் சமூக அரசியல் ஈடுபாட்டினை வெளிப்படுத்தும். எடுத்துக்கொண்ட ஆய்வுப்பொருளை வகைதொகை செய்பவராக மட்டும் அமையாமல் சமூகம் பயன்கொள்ளத்தக்க வகையில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைத் தமிழுலகிற்கு மிகச்சரியாக இனம் காட்டும் பெரும்பணியினையும் இவர் செய்துள்ளார். அந்தவகையில் நூலாசிரியர் அமலோற்பவமேரியின் முயற்சி பெரிதும் பாராட்டுக்குரியது.&lt;br /&gt; &lt;br /&gt; தமிழ்ஒளியின் குறுங்காவியங்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்யும் இந்நூல் பின்வரும் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;b&gt;1. கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்வும் பணியும்.&lt;br /&gt;2. கவிஞர் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் ஓர் அறிமுகம்.&lt;br /&gt;3. சமூக நோக்கில் தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள்.&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;முதல் இயல், தமிழனே! நான் உலகின் சொந்தக் காரன், தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து எனப் பிரகடனம் செய்துகொண்ட மக்கள்; கவிஞர் தமிழ்ஒளியின் வாழ்க்கைக் குறிப்புகள் மற்றும் அவரின் படைப்புகள் குறித்த அறிமுகமாக அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;இரண்டாம் இயல், காவிய இலக்கியவகை குறித்த அறிமுகங்களோடு ஆய்வுக்குரிய மூன்று குறுங்காவியங்களின் கதைச் சுருக்கம் மற்றும் பாத்திரப்படைப்புகளை அறிமுகம் செய்யும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;மூன்றாம் இயல், ஆய்வுக்குரிய கவிஞனின் காதல், நிலைபெற்ற சிலை, வீராயி காவியங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைச் சமூகவியல் நோக்கில் ஆய்வுசெய்கிறது. அந்த வகையில் இக்குறுங்காவியங்களில் பேசப்படும் சாதியச் சிக்கல்கள், தொழிலாளர் பிரச்சனை, வறுமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பொதுவுடைமைச் சமூகத்திற்கான போராட்டம், தமிழ்மொழி உயர்வு முதலான உள்ளடக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இவ்வியல்.&lt;br /&gt;&lt;br /&gt;நூலின் நிறைவுப் பகுதியில் நூலாசிரியர் தரும் முடிப்புரை பயன்தரத்தக்க வகையில் தொகுத்தளிக்கப் பட்டுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;நூலின் மொழிநடை தனித்துக் குறிப்பிடத் தக்கவொன்றாகும். எளிய இனிய மொழிநடையில் இவ்ஆய்வுநூல் அமைந்திருக்கின்றது. ஆய்வு நூல்களுக்கே உரிய கடுநடை தவிர்க்கப்பட்டு எளிய இனிய தமிழில் இடையிடையே தமிழ்ஒளியின் கவிதைப் பகுதிகள் மிளிர ஆய்வாளர்கள் மட்டுமின்றிப் பொதுமக்களும் மாணவர்களும்கூட இந்நூலைப் படித்துச் சுவைக்கத்தக்க விதத்தில் இந்நூல் எழுதப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;கவிஞர் தமிழ்ஒளி, 1947இல் வெளியிட்ட வீராயி காவியத்தின் முன்னுரையில் பின்வருமாறு எழுதினார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;“நம் கண்ணெதிரே நம் உடன் பிறந்தவன் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்து போகிறான், அவன் குடும்பம் வறுமைப் படுகுழியில் வீழ்ந்து கதறுகிறது. இதைக்கண்டு மனமிரங்காமல் மரத்துப் போன நெஞ்சுடன் உலாவும் மானிடப் பிண்டங்களின் உடலில் சுரீர் சுரீர் என்று தைக்கும்படி எழுதுவதுதான் உண்மை எழுத்தாளனின் கடமையும் நோக்கமும் ஆகும்.&lt;br /&gt;எழுத்தாள நண்பர்களே! கற்பனையுலகைப் படைக்கும் கவிஞர்களே! நான் வீராயி மூலம் விடுக்கும் வேண்டுகோள் இதுதான், மக்களுக்காக மக்கள் உயர மக்கள் காலத்துக் கதைகளை எழுதுங்கள்" &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் தமிழ்ஒளி எழுத்தாள நண்பர்களுக்கு விடுத்த வேண்டுகோளுக்குத் தாமே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து தம் படைப்புகளைப் படைத்துக் காட்டினார். கவிஞர் தமிழ்ஒளியின் படைப்பாளுமை அளப்பரிது. அவர் படைப்பின் உள்ளடக்கங்களோ வீரியமிக்க புரட்சி வித்துக்களைக் கொண்டது. காலத்தின் தேவை கருதி இவ்வாய்வு நூலைத் தமிழுலகிற்கு உவந்தளிக்கும் வி. அமலோற்பவமேரி பாராட்டுக்குரியவர். அவரின் சமூகப் பணியும் எழுத்துப் பணியும் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-7490020510557277334?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/7490020510557277334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=7490020510557277334&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/7490020510557277334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/7490020510557277334'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/12/blog-post_25.html' title='தமிழ்ஒளியின் குறுங்காவியங்கள் சமூகவியல் நோக்கு -அணிந்துரை'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-4576930262701880865</id><published>2010-12-12T10:46:00.000+05:30</published><updated>2010-12-12T10:46:12.605+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் அணிந்துரை'/><title type='text'>கோவைக் கொண்டாட்டம் - அணிந்துரை</title><content type='html'>&lt;b&gt;தோழர் புதுச்சேரி லெனின் பாரதியின்&lt;br /&gt;கோவைக் கொண்டாட்டம்&lt;/b&gt;&lt;br /&gt;அணிந்துரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய சமூக அரசியல் சூழலில் ஒரு தகவலைப் பதிவு செய்வதிலும் பதிவு செய்யாமல் விடுவதிலும் கூட அரசியல் உண்டு. ஏனென்றால் பதிவுகளே வரலாற்றிற்கான மூலங்கள். எப்பொழுதும் வரலாறுகள் பதிவுகளைக் கொண்டே புனையப்படுகின்றன.&lt;br /&gt;* * *&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கோவைக் கொண்டாட்டம் &lt;/b&gt;என்ற இந்நூல் தோழர் &lt;b&gt;புதுச்சேரி லெனின் பாரதியின்&lt;/b&gt; அரிய உழைப்பால் உருவான ஒரு தொகுப்பு நூலாகும். கடந்த 2010 ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூன் 27ஆம் தேதி வரை தமிழகத்தின் கோயம்பத்தூரில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை ஒட்டிய ஒரு சிறிய பதிவே இந்நூல்.&lt;br /&gt; &lt;br /&gt;தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசும் அதன் &lt;b&gt;பிதாமகன் கலைஞர் &lt;/b&gt;அவர்களும் இம்மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினர் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை. பொதுவாக இத்தகு அரசியல் பின்னணி கொண்ட மாநாடுகள் மிகப் பெரிய அளவில் கொண்டாட்டங்களிலும் கேளிக்கைகளிலும் மட்டுமே கவனம் செலுத்தி வேடிக்கை காட்டுவதுதான் வாடிக்கை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சற்றே விதிவிலக்கானது. கோவை மாநாட்டிலும் கொண்டாட்டங்கள் உண்டு என்றாலும் அதில் நேரடியான அரசியல் வண்ணங்கள் தலைகாட்டவில்லை என்பது ஓர் ஆறுதல்.  மாநாட்டின் இன்றியமையாத பகுதியான கல்வியாளர்கள் பங்கேற்ற ஆய்வரங்கப் பகுதிகள் மிகச் சிறப்பாகத் திட்டமிடப்பட்டுச் செம்மையாக நடைபெற்றன என்பது மாநாட்டின் தனிச்சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;தோழர் லெனின் பாரதி மிகச்சிறந்த சமூக சேவகர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். எல்லாவற்றுக்கும் மேலாகச் சமூக அரசியல் மாற்றத்தை விரும்பும் ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர். உலகத் தமிழர்களின் கவனத்தை ஈர்த்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தோழர் லெனின் பாரதியின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது என்பதற்கான ஓர் அடையாளமே அவரின் கோவைக் கொண்டாட்டம் என்ற இத்தொகுப்பு நூல். &lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலைத் தாம் தொகுத்து வெளியிட முயன்றதற்கான நோக்கத்தை அவரே நூலின் முன்னுரையில் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்,&lt;br /&gt;&lt;br /&gt;மாநாட்டு நிகழ்வுகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் தமிழக அரசு தொகுப்பாக வெளிக்கொணர வேண்டுமென அறிஞர் பெருமக்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஒரு சிறிய படைப்பாவது பதிவாக வேண்டுமே என்ற ஆதங்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்தச் சிறிய நூல். முடிந்தவரை பேச்சுகளும் தகவல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. (முன்னுரை)&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுகளுக்கான ஆதாரங்களாக அவர் எடுத்துக்கொண்டன ஹிந்து, தினமலர், தினகரன், தினத்தந்தி, தீக்கதிர் முதலான செய்தித்தாள்களில் இடம்பெற்ற தகவல்களைத்தாம். நமது தினசரிகளிலிருந்து இத்தகு நல்ல தகவல்களைத் திரட்ட முடிந்திருந்திருக்கிறது என்பதே ஒரு வரலாற்று அதிசயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt; மாநாடு தொடர்பான அவரது பதிவுகளை மூன்றாக வகைப்படுத்தலாம். அவை, &lt;br /&gt;1. மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள். &lt;br /&gt;2. மாநாட்டுப் பங்கேற்பாளர்களின் கருத்துப் பதிவுகள். &lt;br /&gt;(குறிப்பாக வெளிநாட்டுப் பேராளர்கள் மற்றும் அறிஞர்களின்  கருத்துக்கள்) &lt;br /&gt;3. மாநாட்டோடு ஒட்டிய தகவல் குறிப்புகள்.&lt;br /&gt; &lt;br /&gt; மாநாட்டு உரைகளில் தமிழக முதல்வரின் தொடக்கவிழாப் பேருரையும் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வாழ்த்துரையும் சிறப்பாகப் பதிவு செய்யப் பட்டுள்ளது. குறிப்பாக, யெச்சூரி அவர்களின் உரையில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டுக்குப் பிந்தைய பணிகள் பற்றிய கருத்துரை கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.&lt;br /&gt; &lt;br /&gt;அவை வருமாறு,&lt;br /&gt;தமிழுக்குப் பழமையான மரபு உண்டு. இன்றைக்கும் மிகவும் பொருந்தக் கூடிய பெருமைமிகு இலக்கியங்களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது. இது தவிர ஏட்டில் எழுதப்படாத வாய்மொழி வரலாற்றுச் செல்வங்களையும் அபரிமிதமாகக் கொண்டுள்ள மொழி தமிழ். இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களை உடனடியாக ஆவணப்படுத்தி என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டதாக மாற்றிப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.&lt;br /&gt; &lt;br /&gt;நாட்டுப்புற இசை, நாடகம், கூத்து, நாட்டுப்புறக் கலைகள் அனைத்தும் மதிப்புமிக்க பொக்கி~ங்களாகக் கிராமப்புற மக்கள் மத்தியில் விளங்குகின்றன. இவற்றைப் பாதுக்காக்க வேண்டிய நடவடிக்கைகளை மாநாடு எடுக்குமென்று நான் நம்புகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt;தேசிய இயக்கம், சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் இயக்கம், தலித் மற்றும் பெண்ணுரிமை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களால் தமிழ்ச் சமூகம் செழுமையடைந்த ஒன்றாகும். இந்த இயக்கங்களின் இலக்கியப் பங்களிப்பு மூலம் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்திற்கும் ஏற்பட்டுள்ள செல்வாக்கு மற்றும் வளர்ச்சி குறித்து இம்மாநாடு சரியான அறிவியல் கண்ணோட்டத்துடன் முழுமையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். &lt;b&gt;(சீத்தாராம் யெச்சூரி)&lt;/b&gt;&lt;br /&gt; &lt;br /&gt;இடதுசாரிகள் ஆதரவு பெற்ற அரசால் தமிழ் செம்மொழித் தகுதி பெற்றது என்ற வரலாற்றை யெச்சூரி அவர்கள் தம்பேச்சின் இடையே குறிப்பிட, அதனையே தலைப்பாக்கி அவரது பேச்சைத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பது லெனின் பாரதியின் படைப்பாற்றலுக்குத் தக்க சான்றாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பின் இடையிடையே பொருத்தமான படங்களை இடம்பெறச் செய்திருப்பது நூலுக்கு அழகு சேர்ப்பதோடு வரலாற்று ஆதாரங்களாகவும் அமைந்து சிறக்கின்றன. சான்றாக, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி இந்திய அஞ்சல் துறையின் சார்பில் சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது என்ற தகவலோடு மாநாட்டு இலச்சினை பொறிக்கப்பட்ட அந்த அஞ்சல் அட்டையின் படத்தையும் நூலில் இணைத்திருப்பதனைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt; செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் அவர்கள் முன்மொழிந்த மாநாட்டுத் தீர்மானங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் மிக மிக இன்றியமையாதனவாகும். வருங்காலத் தலைமுறைக்கும் தமிழின் வருங் காலத்துக்கும் தேவைப்படுவன அவை. மாநாட்டுத் தீர்மானங்களைத் தொடர்ந்து தீர்மானங்களின் செயல்வடிவம் குறித்த சில தகவல்களும் இடம்பெற்றிருப்பது நம்பிக்கையூட்டக் கூடியதாயுள்ளது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;b&gt;நூலில் இடம்பெற்றுள்ள சில முக்கிய பதிவுகள்:&lt;/b&gt;&lt;br /&gt;1. தொடக்கவிழாவில் அணிவகுத்த இனியவை நாற்பது என்று பெயரிடப்பட்ட அலங்கார ஊர்திகள் பற்றிய விபரங்கள்.&lt;br /&gt;2. செம்மொழி மாநாட்டுக் கண்காட்சி அரங்கு குறித்த தகவல்கள்.&lt;br /&gt;3. சமயம் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள கருத்தரங்கச் செய்தித் திரட்டுகள்.  &lt;br /&gt;4. ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்ட பல இன்றியமையாத தகவல்களின் தொகுப்பு. &lt;br /&gt;5. வெளிநாட்டுத் தமிழறிஞர்களின் பேட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுவையான தகவல்கள்&lt;br /&gt; &lt;br /&gt; தொகுப்பாசிரியர் தோழர் லெனின் பாரதி தம்முடைய குரலை எங்குமே பதிவு செய்யாமல் விட்டிருப்பதும் மாநாட்டுக்கு முன்னும் பின்னுமான அரசியல் குறித்தும் அதற்கான எதிர்வினைகள் குறித்தும் ஏதும் பேசாமல் மௌனம் சாதித்திருப்பதும் இத்தொகுப்பின் பலமா? பலவீனமா? என்கிற விவாதம்  இந்நூலில் தொக்கி நிற்கின்றது. பதிவாக வேண்டும் என்ற நூலூசிரியரின் ஆதங்கமே இந்நூலை உருவாக்கக் காரணம் என்பதனால் தொகுப்பு முயற்சி என்ற வகையில் நூலாசிரியர் மிகக் கடுமையாக உழைத்து நூலை உருவாக்கியுள்ளார். தோழர் லெனின் பாரதியின் தமிழார்வமே இத்தகு கடின உழைப்புக்கு உந்துசக்தியாக இருந்துள்ளது. செம்மொழிக்கு அணிசேர்க்கும் வகையில் கோவைக் கொண்டாட்டத்தை உருவாக்கியுள்ள நூலாசிரியரின் பணி பாராட்டுதலுக்குரியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-4576930262701880865?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/4576930262701880865/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=4576930262701880865&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/4576930262701880865'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/4576930262701880865'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/12/blog-post.html' title='கோவைக் கொண்டாட்டம் - அணிந்துரை'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-7547275515721291301</id><published>2010-11-23T23:13:00.001+05:30</published><updated>2010-11-23T23:14:28.333+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கிய ஆய்வு'/><title type='text'>பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-1)</title><content type='html'>&lt;b&gt;பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,&lt;/b&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்,&lt;br /&gt;புதுச்சேரி - 8.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழிலக்கிய வரலாற்றில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பாவலர்கள் பலருண்டு. ஆனால் தாமே ஓர் இயக்கமாக வாழ்ந்த பாவலர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மட்டுமே. மூச்சிருக்கும் வரை தமிழுக்காக உயிர்த்தவர். பேச்சிருக்கும்வரை தமிழர் உரிமைக்காக முழங்கியவர். நினைவிருக்கும் வரை தமிழர் விடுதலை பற்றியே நினைத்தவர். தமிழக வரலாறு காணாத தமிழ்ப்போராளி பாவலரேறு பெருஞ்சித்திரனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஓய்ந்திடல் இல்லை, என் உள்ளமும் உணர்வும் உயிர்ச்செறிவும்&lt;br /&gt;தேய்ந்திடல் இல்லை, என் விரல்களும் தாளும்! திரிந்தலைந்து&lt;br /&gt;சாய்ந்திடல் இல்லை, என்உடலும், எனவே சலிப்பிலனாய்&lt;br /&gt;மாய்ந்திடல் வரையும் உழைப்பேன், உரைப்பேன், மக்களுக்கே!&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;என்று முழக்கம் செய்த பாவலரேறு எழுதியவாறே வாழ்ந்தார். அவர் வாழ்வின் இறுதிநாள் வரை தமது எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையே போராட்டமாய், போராட்டமே வாழ்க்கையாய் வாழ்ந்து மறைந்தார். பாவலரேறு தனித்தமிழ்நாடு, பெரியாரின் தன்மானக்கொள்கை, மார்க்சியப் பொருளியல்கொள்கை என்ற முப்பெருங் கொள்கைகளைத் தம் உயிர்மூச்சாகக் கொண்டு இறுதிவரை போராடினார். தமிழ்த் தேசியமே அவரின் உயிர்க்கொள்கையாய் இருந்தது. தென்மொழி: பெருஞ்சித்திரனாரின் தமிழ் இயக்கப் பணியில் பெரும்பங்காற்றியது அவரின் தென்மொழி இதழே. தமிழன்பர்களின் போர்வாளாகத் தென்மொழி விளங்கியது. தென்மொழியின் முதல் இதழ் 1-8-1959இல் வெளியானது. இதழின் குறிக்கோள்முழக்கமாகப் பின்வரும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறுவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்&lt;br /&gt;அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்&lt;br /&gt;துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்&lt;br /&gt;எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தென்மொழி இதழ் தன் குறிக்கோளில் ஒருபோதும் பின்வாங்கியதும் இல்லை, சமரசம் செய்து கொண்டதுமில்லை. தென்மொழி ஓர் இதழன்று, ஓர் இயக்கம் என்று பாவலரேறு குறிப்பிட்டதற் கேற்ப இதழின் கட்டுரைகளில் பாடல்களில் தமிழுணர்வு கொழுந்துவிட்டெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வெண்ணூற்பா:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவலரேறு, பாடல்கள் மற்றும் கட்டுரைத் தொகுதிகளாக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். அச்சு வடிவம் பெறாத படைப்புகளும் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாவலரேறுவின் பாடற்படைப்புகளில் தனிப்பெருஞ் சிறப்புடன் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் உலகியல் நூறு. உலகின் இயற்கைத் தன்மைகளை விளக்கும் நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்ற பொருளில் உலகியல் நூறு என்று பெயரிட்டுள்ளார். இந்நூல் 1973 - 74ஆம் ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பெற்றது என்று நூலாசிரியரே தம் முன்னுரையில் குறிப்பிடுவார். தனிநூலாக இதனைப் படைத்த பின்னர், 1976 முதல் 78 முடிய தென்மொழி இதழில் பகுதி பகுதியாக இந்நூலின் பாடல்கள் வெளியிடப்பட்டன. பின்னர் 1982இல் உலகியல் நூறு முழு நூலாக வெளியிடப் பெற்றது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நூலுள் உள்ள பாடல்கள் நூறும் வெண்பா யாப்பில் அமைந்தனவாகும். இந்நூலின் பாடல்கள் கருத்துச் செறிவால் நூற்பா எனும் உணர்வினை ஊன்றிப் படிப்பார்க்கு ஊட்டுவதால் இந்நூலின் பாவமைப்பை வெண்ணூற்பா(வெண்-நூல்-பா) எனும் புதிய சொல்லால் வழங்கலாம் என்பார் ஆராய்ச்சி முன்னுரை எழுதிய அருளி. பாடல்களோடு அதன் சுருக்கமான பொழிப்புரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. பாடல்கள் திண்ணிய மெய்ப்பொருள் கருத்துக்களை வெளிப்படுத்துவன வாகையால், பாடல் அமைப்பும் இறுகலாகவே உள்ளது. அதனைப் பொழிப்பு ஓரளவே குழைவாக எடுத்துக் கூறுகிறது. இதில் உள்ள கருத்துக்களை இதைவிட மிக எளிமையாக எடுத்துக் கூறுவதானால், அஃது இந்நூலைப்போல் பலமடங்கு பெரிதாக அமைந்துவிடும். பிற்காலத்து மெய்ப்பொருளுணர்வும் தமிழ்த் தகுதியும் அறிவு ஒளியும் வாய்க்கப் பெற்றோர் எவரேனும் அதைச் செய்யட்டும்என்று இந்நூலின் பொழிப்புரை குறித்து நூலாசிரியர் கருத்துரைப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நூல் நுவலும் பொருள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூலுள் பேசப்படும் உள்ளடக்கம் பற்றிப் பாவலரேறு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.உலகியல் நூறு என்னும் இந்நூல் உயர்ந்த மறைவான உலகியல் செய்திகளை, ஓரளவு முற்றும் அடக்கிக் கூறுவதாகும். அகண்டாகாரமாகப் புடைவிரிந்து, எண்ணத்திற் கெட்டாமல் பரந்து கிடக்கும் இப்புடவியுள்(பிரபஞ்சத்துள்) மாந்தப் பிறப்பிடத்தின் துகள் இருப்பும், அவனின் துணுக்கிருப்பும், அத்துணுக்கின் ஆட்டமும் அடக்கமும், ஓக்கமும் ஒடுக்கமும் எத்தகையன என்பதைத் துல்லியமாக, மெய்ப்பொருள் நூல்கள் போல் விளக்கிக் காட்டுவது இந்நூல். இந்நூலுள் வரும் உண்மைகள் எல்லாம், எல்லார்க்கும், எவ்வகையானும் எளிதே விளங்குவன அல்ல. ஆழ்ந்து தோய்ந்த சிந்தனையால் வெளிப்படுத்தப் பெற்ற மெய்க்கூறுகள் இவை. &lt;br /&gt;&lt;br /&gt;உலகியல் நூறு அடிப்படையில் ஓர் அறவியல் நூல். தமிழின் பிற அறவியல் நூல்களைப்போல் இந்நூல் அமைக்கப்படவில்லை. அறிவியல், மெய்ப்பொருளியல், அறவியல், உலகியல் கருத்துக்களைப் பிசைந்து வார்த்த தனிப்படைப்பாக இந்நூல் அமைந்துள்ளது. அறிவியல், குறிப்பாக இயற்பியல் உண்மைகளையும் மெய்ப்பொருளியல் கருத்துக்களையும் இணைத்து உலகியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களை முன்னிறுத்தி படைக்கப்பட்டுள்ள இந்நூல்போல் ஓர் அறவிலக்கிய நூல் தமிழில் முன்னும் இல்லை பின்னும் இல்லை. தமிழில் இது ஒரு புதிய இலக்கியவகை. உலகின் வேறெந்த மொழியிலாவது இதுபோல் ஓர் அறநூல் எழுதப்பட்டிருக்குமா? என்றால் ஐயமே.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வளர்ச்சிக்கும் தமிழின மீட்புக்கும் தமிழ்நில மீட்புக்கும் தொடர்ந்து தொண்டாற்றிய பாவலரேறு உலகியலை விளக்கப் புகுந்த இந்நூலின் நூறு பாடல்களிலும் எவ்விடத்தும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு இவைகளைக் குறிப்பிடாமல் பொதுமை தோன்றப் படைத்துள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பாகும். நாடு, இனம், மொழி கடந்த நிலையில் உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானதாகவே இவ்வறவிலக்கியத்தைப் படைத்துள்ளார் பாவலரேறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நூல் அமைப்பு:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகியல் நூறின் அனைத்துச் செய்யுள்களிலும் உலகின் நுண்பொருள் பருப்பொருள் இயக்கங்கள் அனைத்தும் விளக்கியுரைக்கப் பட்டுள்ளன. இதன் பெரும் பகுப்பு இயல்களாகவும் குறும் பிரிவு நிலைகளாகவும் பாகுபாடு செய்யப்பெற்றுள்ளன. நிலை என்பது இருப்பு நிலை, இயல் என்பது இயங்கு நிலை எனவே உலக இருப்பும் இயக்கமும் இதில் காட்டப்பட்டுள்ளன என்பார் நூலாசிரியர் பாவலரேறு. &lt;br /&gt;உலகியலின் பெரும் பரப்பினை &lt;br /&gt;&lt;br /&gt;1.உலகியல், &lt;br /&gt;2.நாட்டியல், &lt;br /&gt;3.மாந்தவியல், &lt;br /&gt;4.பொதுமையியல், &lt;br /&gt;5.வாழ்வியல், &lt;br /&gt;6.குடும்பவியல், &lt;br /&gt;7.ஆண்மையியல், &lt;br /&gt;8.பெண்மையியல், &lt;br /&gt;9.உறவியல், &lt;br /&gt;10.அயலியல், &lt;br /&gt;11.வினையியல், &lt;br /&gt;12.செல்வயியல், &lt;br /&gt;13.ஒப்புரவியல், &lt;br /&gt;14.அறிவியல், &lt;br /&gt;15.புகழியல், &lt;br /&gt;16.இறப்பியல், &lt;br /&gt;17.பிறப்பியல், &lt;br /&gt;18.உயிரியல், &lt;br /&gt;19.ஓர்பியல், &lt;br /&gt;20.இறைமையியல் &lt;br /&gt;&lt;br /&gt;என்ற இருபது இயல்களாகப் பாகுபடுத்தி, ஒவ்வோர் இயலையும் ஐயைந்து நிலைகளாகக் கூறுபடுத்தி மொத்தம் நூறு தலைப்புகளில் நூறு வெண்பாக்களில் நூலை அமைத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;நூலின் தொடக்கம்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நூல் மரபில் உலகம் என்று நூலைத் தொடங்குதல் மரபென்றும் மங்கலமென்றும் கருதப்படும். உலகியல் நூறு நூலின் தொடக்கத்தில் உலகம் என்று முதல் இயலின் தலைப்பிட்டு நூலைத் தொடங்கும் ஆசிரியர்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;புடவிபல ஒன்றுகடல் புன்மணலிஞ் ஞாலம்&lt;br /&gt;அடவியென் மீன்செறிவாம் அண்டம்பல் கோடி&lt;br /&gt;இடவரைகள் எண்டிசைகள் இவ்வுலக வாக்கம்&lt;br /&gt;கடவிடைகள் நேர்ச்சிக் கணிப்பு (பா.1)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று முதல்பாடலை அமைத்துள்ளார். இப்பாடல் புடவி என்று தொடக்கம் கொண்டுள்ளது. புடவி என்பது பிரபஞ்சம், புடவிகளை நோக்க இவ்வுலகம் கடற்கரை மணற்பரப்பில் ஒரு மணல் துகளுக்கு ஒப்பாம். உலகு என்று தொடங்குவதிலும் பேரண்டப் பெரும் பரப்பாம் புடவி எனத் தொடங்குவதின் சிறப்பினை ஓர்ந்து உணர்தல் வேண்டும். புடவிகள் பலவாகும். அவற்றுள் ஒன்றினது, கடற்கரையின் புல்லிய மணலைப் போன்றது இவ்வுலகம். அடர்ந்த காடு போலும் செறிந்த விண்மீன்களைக் கொண்ட அண்டங்கள் பல கோடியாகும். இவற்றுள் இடமும் அளவுகளும் எட்டுத்திசைகளும் இவ்வுலகத்திற்கென உருவாக்கிக் கொண்ட ஆக்கங்களாம். வினாக்களும் விடைகளும் இங்குள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கணிப்புக் கூறுகளாம். &lt;br /&gt;&lt;br /&gt;நூலின் முழுச்சிறப்பும் முதற்பாடலிலேயே தெற்றெனப் புலப்படுகின்றது. காலம் என்று தனிப்பட்டு ஒன்றும் கிடையாது. தூரத்தையும் இடைவெளிகளையும் காலத்திலிருந்து தனியாகப் பிரிக்க முடியாது. ஒளியின் வேகத்தில் நம்மால் செல்லமுடியும் எனில் காலம் அங்கே மறைந்துவிடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளிப்படுத்திய ரிலேடிவிட்டி - சார்பியல் கோட்பாடு இப்பாடலில் பொதிந்துள்ளது. காலம் முதலான அளவுகள், மேல் கீழ், இடம் வலம், முன் பின் என்பன போன்ற இடம் திசைகள் குறித்த விளக்கங்களும் நாம் வகுத்துக் கொண்டவையே அன்றி வேறில்லை. நிகழ்ச்சிகளும் அது குறித்த கணிப்புக் கூறுகளுமே வினா விடைகளுக்கு அடிப்படை. இப்படி, தொடக்கச் செய்யுளிலேயே நம்மை மலைக்கச் செய்துள்ளார் நூலாசிரியர். பிரபஞ்சத் தோற்றம் பெருக்கம் ஒப்பு இவைகளை முதல்பகுதியில் குறிப்பிடும் ஆசிரியர் இப்புவியின் இறுதி பற்றியும் சுட்டிக்காட்டுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தாயொளியும் ஒல்கத் தணந்து நிலைமாறிப்&lt;br /&gt;போயழியும் கங்குற் பொடிந்து. (பா.5)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இதன் பொழிப்பு, இத்தொன்மையான உலகம் என்றோ ஒரு காலத்தில் தனக்கு ஒளி நல்கும் தாயாகிய கதிரவனின் ஒளி குறைந்து குளிரடைதலால் தன் நிலையில் திரிபுற்று, அதனின்று விலகியோடி இருட்பகுதிக்குள் புகுந்து பொடிந்து அழிவதாகும். சூரியன் வெப்ப ஆற்றல் முழுவதையும் இழந்த நிலையில் கரும்பொந்தாய் மாறும் அதனுள் பூமி தன்னையழித்துக் கொள்ளும் என்ற அறிவியல் உண்மை இப்பாடலில் பொதிந்துள்ளது. தமிழரின் தனிப்பெருஞ் சொத்தாகவும் உலகப் பொதுமறை என்ற சிறப்பிற்குரியதாகவும் விளங்கும் திருக்குறளின் பிழிவாக இவ்வுலகியல் நூறு நூலைப் பெருஞ்சித்திரனார் வடித்துள்ளார்.&lt;br /&gt;பல குறட்பாக்களில் சொல்லப்பட்ட அறங்கள் இந்நூலின் ஒரே வெண்பாவில் அமைந்து சிறக்கின்றமை ஆழ்ந்து பயிலுதற்குரியது. குடும்பவியல், உறவியல், வினையியல், செல்வயியல், அறவியல் முதலான இயல்கள் திருக்குறளோடு ஒப்பிட்டு ஆய்தற்கு இடம்தருவனவாய் அமைந்துள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-7547275515721291301?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/7547275515721291301/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=7547275515721291301&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/7547275515721291301'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/7547275515721291301'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/11/1.html' title='பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-1)'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-8430940744174835395</id><published>2010-11-23T23:07:00.001+05:30</published><updated>2010-11-23T23:07:25.323+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கிய ஆய்வு'/><title type='text'>பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-2)</title><content type='html'>&lt;b&gt;பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,&lt;/b&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்,&lt;br /&gt;புதுச்சேரி - 8.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொதுவுடைமை அறம் கூறும் நூல்:&lt;/b&gt;&lt;br /&gt;பாவலரேறுவின் உயிர்க்கொள்கைகள் மூன்றனுள் ஒன்றாகிய மார்க்சிய பொதுவடைமைக் கொள்கையை உலகியல் நூறின் பொதுமையியல், ஒப்புரவியல் பகுதிகளில் சிறப்பாக வலியுறுத்திப் பாடுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஊனுடம்பு வாய்த்த உயிர்க்கெல்லாம் வாழ்க்கை பொது (பா.62)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் உலகும் உலகவாழ்க்கையும் பொது, எனவே உலக வளங்களை அனைத்துயிர்களும் வேறுபாடின்றித் துய்த்தலே கடமை என்கிறார். வேறு பாடல்களிலும், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உலகுடைமை யார்க்கும் உடைமை (பா.65) என்றும்&lt;br /&gt;தொகையுலகில் இன்புறுதல் எல்லவர்க்கும் (பா.64)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் வரையறை செய்கின்றார். எல்லோரும் இன்புற்றிருக்க, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு ஈதல் வேண்டும் என்ற பழைய ஈகைக் கொள்கையைப் பாவலரேறு முன்மொழியவில்லை. மாறாக, ஈகையின் வடிவமான வள்ளண்மை என்பது உயர்வில்லை என்றும் இல்லாமையைப் பேணிப் பாதுகாக்கும் பழைய முயற்சியே அது என்றும் கூறுகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வள்ளண்மை&lt;br /&gt;என்றும் உயர்வன்றே இல்லாமை பேணுமொரு&lt;br /&gt;தொன்று முயல்வே அது! (பா.63)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;என்பது அப்பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உழைப்பொருபால் ஓங்கும் உவப்பொருபால் ஒன்னார்&lt;br /&gt;இழைப்பொருபால் எய்தல் இகழாம் - தழைப்பெய்தல்&lt;br /&gt;வேண்டின் உடலுழைப்பு வேளாண்மை துய்ப்பு&lt;br /&gt;யாண்டும் பொதுவமைத்தல் யாப்பு (பா.16)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;உடலுழைப்பு ஒருபக்கமும் உவப்பு ஒருபக்கமும் என்றிருத்தல் இழுக்கு. நாடும் மக்களும் செழிப்படைய வேண்டுமானால் உடல் உழைப்பைப் பொதுவாக்கல் வேண்டும், உழவையும் உழவுக்கான நிலத்தையும் பொதுவாக்கல் வேண்டும், உலக இன்பங்களை நுகரும் துய்ப்பையும் பொதுவாக்கல் வேண்டும் என்று ஒரே பாடலில் பொதுவுடைமைக் கொள்கையின் பிழிவைக் கூறி உலகியல் நூறு அறவிலக்கியத்தை உலக அறவிலக்கியமாக இலங்கச் செய்துள்ளார் பாவலரேறு. உடைமை பொதுவாகவில்லை யென்றால் நாட்டில் சமத்துவம் இருக்காது. ஒருபக்கம் வளமை, மறுபக்கம் வறுமை என உலகமே அலங்கோலமாயிருக்கும். இந்த வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைத்தல் நமது கடமை. இந்தக் கடமையில் நாம் தவறினால்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;திருக்குவைசூழ் மாடத் தெருக்கடையின் ஓரத்து&lt;br /&gt;உருக்குலையும் வாழ்க்கை ஒழிக -பெருக்கமுறும்&lt;br /&gt;வான்தோய் வளமனைக்குள் வன்குடில்வாழ் ஏழையர்தம்&lt;br /&gt;கான்தோயும் காலம் வரும். (பா.18)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வன்குடில் வாழ் ஏழையர் வளமனைக்கும் நுழையும் காலம் வரும் என்பதற்கு, ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி, போராட்டம், புரட்சி வெடிக்கும் என்பதாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். பொதுமையியல், ஒப்புரவியல் என்ற இரண்டு இயல்களிலும் நூலாசிரியர் அமைக்கும் பத்து பாடல்களும் சுரண்டல் சமூகத்தின் இழிவையும் பொதுவுடைமைச் சமூகத்தின் மேன்மைகளையும் எடுத்துச்சொல்லி உலகின் இன்றைய தேவையை வலியுறுத்துகின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;மாந்தவியல் எனும் பகுதியில் ஒழுக்கம் என்பதை விளக்கப் புகுந்த நூலாசிரியர் ஒழுக்கம் பசியின்மை ஊன்றுதொழில் கல்வி (பா.14) என்கிறார். நாட்டு மக்களுக்கு உணவு, தொழில், கல்வி என்ற இம்மூன்றையும் முறையாக வழங்கினால் ஒழுக்கம் தானாக நிலைபெறும் என்கிறார். சமமற்ற பகிர்வே நாட்டில் நிலவும் குற்றங்களுக்கு அடிப்படை. சமத்துவம் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும் என்பது ஆசிரியர் கருத்து.அறங்களும் சட்டங்களும் அனைவர்க்கும் பொதுவா? நாட்டியல் என்னும் பகுதியில் அதிகாரத்திற்கும் சட்டத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த தம் பார்வையைப் பதிவு செய்கிறார் பாவலரேறு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அமைத்த அதிகாரத் தாள்வோர்க்குச் சார்பாய்&lt;br /&gt;சமைத்துக் கொளும்நெறியே சட்டம் -இமைத்துரைப்பின்&lt;br /&gt;ஆனைக் குழுசெய் அறநெறியாங் கோர்ஏழைப்&lt;br /&gt;பூனைக் குதவுமெனல் பொய். (பா.7)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;சட்டங்கள் என்றைக்குமே அதிகாரத்தைக் கட்டமைக்கவும் விளிம்பு நிலை மக்களை ஒடுக்கவுமே உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையை விளக்குவதோடு ஆனைக் குழு அதாவது அதிகாரம் படைத்தவர்கள் உருவாக்கும் சட்டம் பூனைக் குழுவிற்கு அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றைக்குமே உதவாது என்கிறார் ஆசிரியர். மேலும் இப்பாடலில் சட்டங்;கள் குறித்து அவர்முன் வைத்த விமர்சனங்கள் அறநெறிகளுக்கும் பொருந்தும் என்கிறார். அறநெறிகளை விளக்கப் புகுந்த ஓர் அறவியல் இலக்கியத்தில் அறம் - அதிகாரம் இவைகளுக்கு இடையிலான தொடர்பினைச் சரியான பார்வையில் எடுத்துக் காட்டுவதன் மூலம் நூலை வாசிப்பவர்களுக்கு உரிய வழிகாட்டியாகவும் திகழ்கிறார் பாவலரேறு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வெற்று முழக்கத்தைக் கேட்டுப் பழகிய நமக்குப் பாவரேறுவின் குரல் ஒரு புரட்சிக் குரலாகவே ஒலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொண்டின் மேன்மை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புகழியல் எனும் பகுதியில் தொண்டுநிலை பற்றி விளக்குமிடத்து, தோய்ந்தார் பொருட்டு உழைத்தல் தொண்டென்ப என்று தொண்டிற்கு இலக்கணம் வகுப்பதோடு தொண்டு செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளையும் பட்டியலிடுகிறார். பாடல் பின்வருமாறு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தோய்ந்தார் பொருட்டுழைத்தல் தொண்டென்ப உள்ளச்சீர்&lt;br /&gt;வாய்ந்தார் துணிவின் வயப்படுக -ஆய்ந்துரைக்கின்&lt;br /&gt;துன்பம் இழவிழிவு தோளின்மை தூங்காமை&lt;br /&gt;இன்பென்பார் ஆற்றல் இனிது. (பா.75)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;இப்பாடலில் துன்பம், இழப்பு, இழிவு, துணையில்லாமை, சோர்தலில்லாமை இவைகளை யார் இனிது என்று கருதி உழைக்க அணியமாய் இருக்கின்றார்களோ அவர்களே தொண்டு செய்தல் முடியும் என்கிறார். பாவலரேறு அவர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடிப்பதாக உள்ளது இப்பாடல். தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்க்கையையே அதற்காக ஈடு கொடுத்த ஆசிரியர் மேற்கூறிய இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார் என்பது மிகையன்று.&lt;br /&gt;அதே புகழியல் பகுதியில் மான நிலை என்ற பொருளில் பாடும் போது,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மனவுயர்ச்சி தாழவரல் மானம் அதுதான்&lt;br /&gt;இனவுயர்ச்சி காட்டும் எழுச்சி -இனவுயர்ச்சி&lt;br /&gt;உள்ளுவார்க் கில்லை உயர்மானம் ஆங்கதனைக்&lt;br /&gt;கொள்ளுவார்க் கில்லை குனிவு (பா.74)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று பாடுகிறார். மனவுயர்ச்சிக்குத் தாழ்வு வருமானால் அச்சூழலில் தோன்றும் நல்லுணர்வே மானம் என்றும் இந்த நல்லுணர்வுதான் ஓர் இனத்தின் உயர்வைக் காட்டும் அடையாளம் என்றும் குறிப்பிடும் ஆசிரியர், இனவுயர்ச்சியைக் கருதி உழைக்கின்றவனுக்குத் தன்பொருட்டு இந்த மானவுணர்ச்சி தேவையில்லை என்றும் அதனால் தாழ்ச்சியொன்றும் இல்லை என்றும் கூறுகின்றார். இனத்தின் உயர்வுக்குப் பாடுபடும் தொண்டன், போராளி தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழ் இனவுயர்ச்சிக்காகப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரும் தம் தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எத்தனையோ அவமானங்களையும் தாழ்வுகளையும் ஏற்றுப் போராடினார் என்பது இங்கே நினைத்துப் பார்க்கத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிறப்பியலும் உடற்கூற்று வண்ணமும்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பியல் என்னும் இயலில் உடல் நுகர்ச்சி நிலை, கருநிலை, உருநிலை முதலான பாடல்களில் மனித உயிர் பிறப்பின் நுணுக்கங்களை வியப்புற விவரித்துச் சொல்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விழிமின்பாய்ந் துள்வெதுப்ப வேண்மதநீர் ஓடிக்&lt;br /&gt;கழிபெருநற் காமம் கனப்பப் -பொழியன்பால்&lt;br /&gt;சொல்லிதழ்க்கை மொய்த்தூர்ந்துள் ஒத்துச் சுரப்பாடி&lt;br /&gt;வல்லுறுத்துத் துய்த்தல் வரைத்து (பா.81)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;ஆண் பெண் உடல்நுகர்ச்சியை வருணிக்கும் இப்பாடல் படித்து இன்புறுதற்குரியது. அடுத்த பாடலில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வித்துசினை ஒன்றித்தாய் வேதுநீர் உள்வாங்கிப்&lt;br /&gt;பத்துமதி தாங்கிப் படர்ந்து (பா.82)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;என்று கருநிலையை விவரிக்கும் பகுதி, ஒருமட மாது.. .. எனத்தொடங்கும் பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணத்தை ஒத்த நயமான பகுதியாகும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-8430940744174835395?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/8430940744174835395/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=8430940744174835395&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8430940744174835395'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8430940744174835395'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/11/2.html' title='பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-2)'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-6488887576564854392</id><published>2010-11-23T23:00:00.000+05:30</published><updated>2010-11-23T23:00:53.131+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கிய ஆய்வு'/><title type='text'>பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-3)</title><content type='html'>&lt;b&gt;பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,&lt;/b&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்,&lt;br /&gt;பட்ட மேற்படிப்பு மையம்,&lt;br /&gt;புதுச்சேரி - 8.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;உலகியல் நூறும் இயற்பியலும்:&lt;/b&gt;&lt;br /&gt;பாவலரேறு தாம் படைத்த உலகியல் நூறு எனும் அறிவற இலக்கியத்தில் பிற அறநூல்கள் பேசாத பல புதிய உண்மைகளை பேசுகின்றார். நூலின் தொடக்கத்திலும் இடையிலும் நிறைவிலும் அவர்விளக்கும் அறிவியல் மற்றும் மெய்ப்பொருளியல் உண்மைகள் நூலாசிரியரே குறிப்பிடுவது போல் எல்லோர்க்கும் எளிதில் விளங்கக் கூடியதாக இல்லை. ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காணும் அறிவினோர்க்கே விளக்கமுறுதல் கூடும். குறிப்பாக இறப்பியல், உயிரியல், ஓர்பியல், இறைமையியல் முதலான இயல்களில் ஆசிரியர் விளக்கும் அறங்கள் அத்தகையனவே. ஓர்பியலில் இடம்பெறும் இயக்கநிலை பற்றிய பாடலில் ஆசிரியர் பொருள், ஆற்றல் இரண்டின் இயல்புகளையும் விளக்கி, பொருளின் உள்நின்று இயக்குகின்ற உயிர்க்கூறே இறை என்று விளக்குகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொருளனைத்தும் ஒன்றாகும் ஆற்றலெலாம் ஒன்றாம்&lt;br /&gt;உருளிரண்டும் ஒன்றினோ டொன்றாம் - மருள்நிலைகள்&lt;br /&gt;ஆன்ற வியக்கென்ப ஆதல் பொருளாம்உள்&lt;br /&gt;ஊன்றல் இறையென் றுணர் (பா.93)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;உலகில் பொருள்கள் வேறு வேறாகப் பிரிந்து நின்றாலும் அடிப்படையில் பொருட்கூறுகள் அனைத்தும் ஒன்றே. பொருளை மிகச்சிறிய கூறாகப் பகுத்தால் கிடைப்பது அணு. எல்லா அணுவினுள்ளும் மூலக்கூறுகளாய் இருப்பவை எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எனும் இவையே. எனவே பொருளனைத்தும் ஒன்றாகும் என்று ஆசிரியர் உரைப்பது சாலப் பொருத்தமே. பொருள்கள் ஒன்றானால் ஆற்றலும் ஒன்றே, ஏனெனில் பொருளைச் சிதைக்கின் ஆற்றலாகும், ஆற்றல் திரண்டால் பொருளாகும். பொருள், ஆற்றல் இவைகளை விளங்கிக் கொண்டால் இறையை உணர்தல் எளிது என்பதனால் இரண்டையும் விளக்கிவிட்டு ஆற்றலாகவும் பொருளாகவும் இருக்கும் அதனை உள்நின்று இயக்கும் உயிர்க்கூறே இறை என எளிமையாய் விளக்கம் தருகின்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நவீன இயற்பியலில் அணுக்களை அதைவிட நுட்பமான ஆல்பா துகள்களால் துளைத்துப் பார்த்தபோது அணுவின் உள்ளே பெரும்பாலும் வெட்டவெளியாக இருப்பதையும் மையத்தில் கருபோல் சில புரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றிச் சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதைப் பார்த்தார்கள். ஓர் அணுவுக்கும் மற்றோர் அணுவுக்கும் உள்ள வேறுபாடு அதன் கருவில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கையில்தான். உள்ளே இருக்கும் துகள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த இயக்கத்தின் வடிவம்தான் நாம் காணும் பொருள்கள். ஊன்றிப் பார்த்தால் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே இயக்கம்தான். இதுதான் அறிவியலின் முடிபு. இந்த இயக்கம்தான் இறை என்பது பாவலரேறுவின் விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;.. .. .. .. .. .. .. .. .. வற்றாத&lt;br /&gt;ஊற்றாய் உலகமாய் ஒண்கதிராய் நீள்விசும்பாய்&lt;br /&gt;ஆற்றல் நிகழ்த்தும் அலைவு (பா.78)&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;ஆற்றலின் அலைவுத் தோற்றங்களே உலகமாகவும் விண்மீன்களாகவும் நீண்ட ஆகாயமாகவும் தோற்றம் கொள்கின்றன என்ற இப்பாடல் கருத்து இயற்பியலின் அடிப்படையில் அமைந்துள்ளமை ஆழ்ந்து விளங்கிக் கொள்ளுதற்குரியது. இன்றைக்குப் பல்கிப் பெருகியிருக்கும் சமயங்களும் அவற்றின் இறைத் தத்துவங்களும் குறித்துப் பாவலரேறு தம் விமர்சனத்தைத் தெளிவாக உரைக்கின்றார். எந்த மதங்களும் உண்மையை முழுதாகக் காணவில்லை. எல்லா மதக்கோட்பாடுகளும் கற்பிதங்களே என்பதைப் பின்வரும் பகுதியால் விளக்குகின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஓவத் துணுக்கால் உருவறியார் ஒவ்வொன்றா&lt;br /&gt;மேவத் துடிக்கும் மிகை உருவம் (பா.100)&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெரியதோர் ஓவியத்தைப் பலகூறுகளாக்கிய நிலையில், அவற்றின் ஒவ்வொரு கூறையும் முழுஉருவமாகக் கற்பனை செய்துகொள்ளும் கற்பிதங்களே மதங்களும் கடவுளர்களும் என்று மதங்களின் போலிமையைக் கடிந்துரைக்கின்றார். அதே பாடலில் நீர்க்குண்டோ உண்மை நிறம் என்று முடிப்பதன் வாயிலாக இறைமை தன்னை வெளிப்படுத்தி நிற்கும் உயிர்க் கூற்றானும் பொருட்கூற்றானும் வடிவமெய்துமே அன்றி தனக்கென்று ஓர் வடிவமில்லை என்னும் மெய்ப்பொருளியல் உண்மையை முற்ற முடிபாக முடித்து வைக்கின்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;முடிப்புரை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு எனும் இவ்வறநூல் தமிழிலக்கிய உலகிற்கு ஒரு புதிய புதுமையான வரவு. தமிழின் நீண்ட இலக்கியப் பரப்பில் மிகப்பலவான அறநூல்கள் எழுதப் பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து உலகியல் நூறு பெரிதும் மாறுபடுகின்றது. பெரிதும் திருக்குறள் கருத்துக்களை உள்வாங்கி நூல் உருவாகியிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சி, உலக மெய்ப்பொருளியல் அறிமுகம் முதலான புதிய பரிமாணங்களால் நூல் புதிய தளத்தில் அறம் பேசுகிறது. பாவலரேறுவின் பிரபஞ்ச ஞானம், உலகு தழுவிய பார்வை, பொதுமை வேட்கை, இறையியல் பற்றிய அறிவியல் பார்வை முதலான புதிய பாடுபொருட்கள் இந்நூலின் தனிச்சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எப்படி யேனும் இத்தமி ழகத்தை&lt;br /&gt;முப்படி உயர்த்திடல் வேண்டும் -என்&lt;br /&gt;மூச்சதற் குதவிடல் வேண்டும்&lt;br /&gt;தமிழ்ப்படி யேறின் தமிழினம் ஏறும்&lt;br /&gt;தாழ்நிலை இழிவுகள் மாறும்!- நம்&lt;br /&gt;தலைவிலை எனில்தரல் வேண்டும்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று தமிழ்மொழிக்காக, தமிழினத்துக்காக, தமிழ் நிலத்துக்காகத் தம் மூச்சையும் தலையையும் தரத் தயாராயிருந்த பாவலரேறுவின் பணி அளப்பரியது, ஒப்புயர்வற்றது, வணக்கத்திற்குரியது. பாவலரேறுவின் படைப்புகளைத் தமிழ் என்ற ஒற்றை நேர்க்கோட்டுப் பார்வையில் மட்டுமே பார்ப்பது படிப்பது பரப்புவது என்பதாக நம் பணி நின்றுவிடுதல் கூடாது. அவரின் பன்முகப் பார்வையும் பல்நோக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பாவலரேறுவின் படைப்புகளின் சமுதாயப் பார்வை, அரசியல் பார்வை, தத்துவப் பார்வை, நடப்பியல் பார்வை, அறிவியல் மற்றும் உளவியல் பார்வை போன்ற தலைப்புகளில் அவரின் படைப்புகள் அலசப்பட வேண்டும். இம்முயற்சிகளே பாவலரேறுவின் பன்முகப் பரிமாணங்களை உலகுக்குக் காட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-6488887576564854392?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/6488887576564854392/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=6488887576564854392&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/6488887576564854392'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/6488887576564854392'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/11/3.html' title='பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம் -(பகுதி-3)'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-3431494699499583215</id><published>2010-11-17T22:31:00.001+05:30</published><updated>2010-11-17T22:38:41.983+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் அணிந்துரை'/><title type='text'>சிங்கப்பூர் கவிஞர் கி. கோவிந்தராசுவின் வேர்களின் வியர்வை -அணிந்துரை</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;கா.மா.பட்டமேற்படிப்பு மையம் &lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;b&gt;9943646563&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உரைநடைக்கும் கவிதைக்கும் எழுதுவதில் வித்தியாசம் இருக்கிறதோ இல்லையோ? வாசிப்பதில், அனுபவிப்பதில் கண்டிப்பாகப் பெரிய அளவில் வித்தியாசமிருக்கிறது. உரைநடையை வாசிப்பவன் அப்படைப்பை ஒற்றைப் பரிமாணத்திலேயே வாசித்து முடித்துவிடுகிறான். வாசிப்பதை முடித்தவுடன் பெரிதும் உரைநடைப் படைப்பின் வேலையும் முடிந்துவிடுகிறது. ஆனால் கவிதை வாசிப்பு அப்படியில்லை. கவிதையைப் பல பரிமாணங்களில் வாசிக்க வேண்டியிருக்கிறது. வாசிப்பு முடிந்த பிறகுதான் கவிதைப் படைப்பு தன் முழுப் பரிமாணத்தையும் காட்டிப் பேருரு எடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வாமனனுக்கு மூன்றடி நிலம் தானம் கொடுத்த மாபலிச் சக்கரவர்த்தியின் நிலைதான் கவிதை வாசிப்பவன் நிலையும். சின்ன உருவம்தானே மூன்றடி எடுத்துக் கொள்ளட்டும் என்று வரம் கொடுக்கப்போய் சிற்றுரு பேருருவாகி எல்லாற்றையும் ஈரடியால் அளந்துமுடித்து மூன்றாவது அடிக்கு மாபலி தன் தலையையே கொடுக்க நேர்ந்தது போல்தான் இதுவும். &lt;br /&gt;&lt;br /&gt;கவிதை சிறியதோ பெரியதோ வாசிப்புக்கு அடங்கிவிடும் அதன் உருவத்திற்கும் அது தரும் அனுபவம் என்ற விஸ்வரூபத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு மிகப்பெரிது. வாசிப்பு நம் அறிவு அனுபவங்களைத் தொட்டு உரசி நமக்குள்ளாக இறங்கி, ஐக்கியமாகி நம்மையே இழக்கும் நிலைக்குத் தள்ளும் போதுதான் மூன்றாவது அடிக்குத் தன் தலையையே தந்த மாபலியாகிறோம் நாம். வாசிப்பாளனுக்குக் கிட்டும் இந்த அனுபவம் படைப்பாளிகளுக்குக் கிட்டுமா? என்பது ஐயமே.&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அதுபோல்தான் கவிதை தரும் வாழ்க்கை குறித்த பதிவுகளும். சில சமயங்களில் உங்களுக்கும் எனக்கும் வாய்த்த அனுபவமே கூட, படைப்பாளனுக்கும் வாய்க்கலாம். நமக்கு வெறும் சம்பவங்களாய்ப் பதிவான அந்தத் தருணங்கள் படைப்பாளிகளுக்கு மட்டும் படைப்புக்கான வித்தாக மாறிவிடுகின்றனவே, அது எப்படி?. பூக்களிலிருந்து நீங்களும் நானும் அதன் இனிப்புச் சாற்றை எடுக்கலாம். ஆனால் அது தேன் ஆவதில்லை. தேனீக்கள் உறிஞ்சும் இனிப்புச் சாறு மட்டும் தேன் ஆகிறதே அப்படித்தான். தேனீக்கள் வயிற்றில் நடக்கும் ரசாயன மாற்றம் போல் படைப்பாளியின் உள்ளிருந்து படைப்பு வெளியாகிறது. நண்பர் கோவிந்தராசுவுக்கும் அப்படித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேர்களின் வியர்வை எனும் இக்கவிதைத் தொகுப்பு இனிய நண்பர் கவிஞர் கி. கோவிந்தராசுவின் முதல் படைப்பு. மதுரையில் பிறந்து வளர்ந்து பிழைப்புக்காகச் சிங்கப்பூர் சென்று தம் உழைப்பால் சிங்கையின் உயர்வுக்குப் பாடுபடும் பல்லாயிரம் தோழர்களில் ஒருவராக வாழ்ந்து வருபவர். சிங்கப்பூரின் இலக்கிய உலகில் தமக்கென ஒரு தனியிடத்தைத் தம் பன்முக ஆற்றலால் ஏற்படுத்திக் கொண்டவர். சிங்கப்பூரில் கவிஞர் கோவிந்தராசு பங்கேற்காத கவியரங்கத்தைப் பார்ப்பது அரிது. கவிஞர், பலகுரல் கலைஞர், நாடக நடிகர், பேச்சாளர் என்ற பரிமாணங்களைக் கொண்டவர். இவர் ஓர் உழைப்புத் தேனீ.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;b&gt;வேர்களின் வியர்வை &lt;/b&gt;ஒரு சராசரி கவிதைத் தொகுப்பு இல்லை. கவிஞர் கோவிந்தராசுவும் ஒரு சராசரித் தமிழ்க் கவிஞர் இல்லை. சராசரிக் கவிஞர்கள் எதையும் கவிதையாக்கி விடுவார்கள். ஏனெனில் கவிதை அவர்களுக்கு ஓர் உற்பத்திப் பொருள். குயவன் உற்பத்தி செய்கிறானே பானை, அதைப்போல, நூற்றுக்கணக்கில் உற்பத்திசெய்து தள்ளிவிடுவார்கள். கோவிந்தராசு போன்ற கவிஞர்கள் சிற்பிகள். இவர் பானைகளும் பல வனைந்து தள்ளியிருக்கிறார், ஆனால் அவற்றினூடே அழியாத கலைப் பொக்கி~ங்களாக அபூர்வச் சிற்பங்களும் உண்டு. கவிஞன், கவிதை எழுத முடியாமல் கண்ணீர் வடிக்கிற போதுதான் உயர்ந்த கவியாகிறான். நான் என்னும் கவிதையில் கவிஞர் சொல்வதைக் கேளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;புவியதிர்ச்சி நிலநடுக்கம்&lt;br /&gt;புதையும் மானுடம் -கண்டு&lt;br /&gt;கவிவடிக்க மனம்வராது&lt;br /&gt;கண்ணீர் வடிக்கிறேன்&lt;br /&gt;காவிவேட்டி மனிதர்களைக் &lt;br /&gt;கடவுள் என்றெண்ணும் -இந்தப்&lt;br /&gt;பாவிமக்கள் நிலையை எண்ணிப்&lt;br /&gt;பரித விக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;குறையில்லாத நிலவினோடு&lt;br /&gt;கொஞ்சி மகிழ்கிறேன் -அதில்&lt;br /&gt;பிறைவரும் போதேனோ&lt;br /&gt;நெஞ்சம் புழுங்குகிறேன்!&lt;br /&gt;எவ்வுயிரும் நலம்வாழ&lt;br /&gt;என்றும் துதிக்கிறேன் -இது&lt;br /&gt;பொய்யாகிப் போகுமெனில்&lt;br /&gt;நெஞ்சு கொதிக்கிறேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மானுடப் பேரழிவுகளின் போது, கவிதைகள் எழுதிக் கடமை முடிந்துவிட்டது என்று பிழைப்பு நடத்தும் கவிஞர்களுக்கிடையே “கவிவடிக்க மனம்வராது கண்ணீர் வடிக்கும்” கோவிந்தராசு மானுடப் பேரழிவுக்கு மட்டும் இல்லை நிலவில் பிறைவந்தால் கூட அதன் உடல்குறை கண்டு நெஞ்சம் புழுங்குகின்றாரே இவரல்லவா உயர்ந்த கவி. எல்லாவுயிர்களும் இன்புற்றிருக்க வேண்டிப் புதுவை மணக்குள விநாயகரைப் பாடிய மகாகவி பாரதிக்குப் பேரன் இவர்.&lt;br /&gt;&lt;br /&gt;விளம்பரத்திற்காக உலக உயிர்களுக்கு இரங்கிவிட்டுச் சொந்தத் தாய் தந்தையரை மறந்துவிடும் உலகம் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;அன்னையையும் தந்தையையும் மதித்தல் வேண்டும்&lt;br /&gt;அவர்வயது முதிர்ந்த பின்னே காத்தல் வேண்டும்&lt;br /&gt;சின்னதொரு உயிருக்கும் கெடுதல் செய்யாச்&lt;br /&gt;சிந்தையினை எமக்கிறைவன் வழங்க வேண்டும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னையையும் தந்தையையும் அவர்கள் தளர்ந்திருக்கும் முதுமைப் பருவத்தில் காத்திட வேண்டும் என்ற விருப்பும் சின்னதொரு உயிருக்கும் கெடுதல் செய்யாச் சிந்தை வேண்டும் என்ற விருப்பும் கவிஞரின் வேண்டும் வேண்டும் என்ற ஒரே கவிதையில் புனைவுகள் இல்லாமல் பதிவு செய்யப்படுவது வியப்பூட்டுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;வேர்களின் வியர்வை தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர் கி.கோவிந்தராசுவின் கவிதைகளைப் பின்வரும் வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. இயற்கையைப் பாடும் கவிதைகள்&lt;br /&gt;2. தலைவர்கள், கவிஞர்களைப் பாடும் கவிதைகள்&lt;br /&gt;3. வாழ்க்கை குறித்த விசாரணைகளாக வெளிப்படும் கவிதைகள்&lt;br /&gt;4. சிங்கப்பூர் குறித்த கவிதைகள்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நான்கு பிரிவுகளில் முதலிரண்டு பிரிவுகளில் அடங்கும் கவிதைகளைக் காட்டிலும் மூன்று மற்றும் நான்காம் பிரிவுகளில் அடங்கும் கவிதைகள் வீரியமிக்கவை. குறிப்பாக, சிங்கப்ப+ர் குறித்த கவிஞரின் கவிதைகளில் பதிவாகும் தனிமனித உணர்வுகளும் சமூக உணர்வுகளும் பிற கவிஞர்களிடமிருந்து கவிஞர் கோவிந்தராசுவை வேறுபடுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்காக… என்னும் கவிதையில் மனைவியைஃ காதலியைப் பிரிந்து பிழைக்க வந்த இடத்தில் தனிமையில் வாடும் ஒருவனின் மனமும் உடலும் சிதைவுகளுக்குள்ளாகும் புறச்சூழல்கள் சுட்டப்பட்டு, அச்சூழல்களுக்கு இடையேயும் கற்போடு இருக்க விரும்பும் ஒருவன் குறித்த பதிவு நுட்பமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வண்டு பிடிக்கும் மலர்கள்&lt;br /&gt;மலர் தேடும் வண்டுகள்&lt;br /&gt;இத்தனையும் தாண்டி&lt;br /&gt;எனக்கான –உன்&lt;br /&gt;காத்திருப்புக்காய்&lt;br /&gt;நான் இன்னும் &lt;br /&gt;கற்போடு இருக்கிறேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றுமொரு சிறந்த படைப்பு ஆறுதல் தரும் அருமருந்து என்ற தலைப்பிலான கவிதை. இந்தக் கவிதையைப் புரிந்துகொள்ள சிங்கப்ப+ர்த் தமிழர்கள் குறித்த புரிதலும் அனுபவமும் வேண்டும். அப்பொழுதுதான் கவிதையின் முழுப் பரிமாணத்தையும் உணரமுடியும். சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் மூன்று வகையினர் உண்டு. முதல்வகையினர், சில தலைமுறைகளுக்கு முன் சிங்கை சென்று குடியேறி வாழ்ந்துவரும் தமிழர்கள். இரண்டாம் வகையினர், ஹை-டெக் பணியிலிருக்கும் கொஞ்சம் வசதியான தமிழர்கள். மூன்றாம் வகையினர், உடல் உழைப்பாளிகளாக சிங்கப்பூரில் பணியாற்றும் நடுத்தட்டுக் கூலித் தொழிலாளத் தமிழர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஆறுதல் தரும் அருமருந்து என்ற கவிதை மூன்றாம் வகைத் தமிழர்களைப் பற்றியது. சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை பிற்பகலில் கூடும் இந்தத் தமிழர்களின் உடல் மனஉணர்வுகள் வார்த்தைகளுக்குள் சிக்காதவை. அந்தச் சூழலைக் கண்டு அனுபவித்தவர்களுக்கே அதன் கனம் புரியம். கவிஞர் அதனை வார்த்தைகளில் கொண்டுவர முயன்று வெற்றியும் கண்டுள்ளார். “இதில் பார்வையாளர்கள் எவருமில்லை, அனைவரும் பேச்சாளர்களே” அற்புதமான பதிவு. கவிதையின் ஒரு பகுதி இதோ,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒவ்வொரு ஞாயிறும்&lt;br /&gt;வாரம் தவறாத&lt;br /&gt;மாநாட்டுக் கூட்டம்&lt;br /&gt;இதில்&lt;br /&gt;பார்வையாளர் எவருமில்லை&lt;br /&gt;அனைவரும் பேச்சாளர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;தொற்றிக் கொண்ட துக்கம்&lt;br /&gt;தொலைந்து போன தூக்கம்&lt;br /&gt;பற்றிக் கொண்ட ஏக்கம்&lt;br /&gt;பணியில் கண்ட கலக்கம்&lt;br /&gt;ஆறுநாட்கள் சேமிப்பிற்குப் பின்&lt;br /&gt;அணையுடைத்த நீராய்&lt;br /&gt;ஆறுதல் தேடி ஆர்ப்பரிக்கும்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் குறித்த கவிதைகளில் மற்றொரு வகை அதன் பெருமை பேசும் கவிதைகள். அந்தவகையில் குறிப்பிடத்தக்க கவிதை லீ வாழ்க! எனும் கவிதை. சிங்கையின் பெருமைகளையும் அதன் பிதாமகன் லீக் வான் யூ அவர்களின் புகழையும் பேசும் நல்ல கவிதை அது.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் கி. கோவிந்தராசுவின் கவிதைகளில் காலத்தைக் கடந்து நிற்கும் கவிதைகள் என்ற பெருமையைப் பெறுவன, வாழ்க்கை குறித்த விசாரணைகளாக வெளிப்படும் கவிதைகளே. அந்தவகையில் குறிப்பிடத்தக்க கவிதைகளாகப் பின்வருவற்றைப் பட்டியலிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;1. வேரில் பழுத்த பலா &lt;br /&gt;2. உயிர் வலி&lt;br /&gt;3. ஒப்பனை உறவுகள்&lt;br /&gt;4. தியாகம்&lt;br /&gt;5. தொலைந்த நாட்கள்&lt;br /&gt;6. குப்பைத் தொட்டி&lt;br /&gt;7. அம்மாவுக்கு ஒரு கடிதம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞரின் கவிதைகளில் வெற்று அலங்காரங்களைக் காண்பது அரிது. அணிகளாலும் உத்திகளாலும் தம் கவிதைகளை அவர் நையப் புடைப்பது இல்லை. உருவமும் உள்ளடக்கமும் இணைந்த ஒரு முழுமையே கோவிந்தராசு கவிதைகளின் தனித்த அடையாளம். ஒப்பனைகள் இல்லாத அவரின் கவிதைகள் குறித்து அவரே தரும் &lt;br /&gt;வாக்குமூலம் இதோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கற்பனையில் வாழ்கிறேன்&lt;br /&gt;கவிதைகள் வடிக்கிறேன்&lt;br /&gt;ஒப்பனைகள் இல்லாமல் &lt;br /&gt;ஒளிர்ந்திடத் துடிக்கிறேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் கி. கோவிந்தராசுவின் முதல் படைப்பு இந்த வேர்களின் வியர்வை. இனிவரும் படைப்புகளில் இன்னும் முதிர்ச்சி வெளிப்படும் என்பது திண்ணம். ஏனெனில் இந்தத் தொகுதியே அதற்கான அடையாள வித்துகள் பலவற்றைப் பெற்றுள்ளது. வேர்களின் வியர்வை தமிழ்கூறு நல்லுலகத்தில் நல்ல வரவேற்பினைப் பெறும், பெறவேண்டும் அதுவே நம் பெருவிருப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-3431494699499583215?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/3431494699499583215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=3431494699499583215&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/3431494699499583215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/3431494699499583215'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/11/blog-post.html' title='சிங்கப்பூர் கவிஞர் கி. கோவிந்தராசுவின் வேர்களின் வியர்வை -அணிந்துரை'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-1804076237484866858</id><published>2010-09-16T22:23:00.000+05:30</published><updated>2010-09-16T22:23:53.097+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் அணிந்துரை'/><title type='text'>சிங்கப்பூர் கவிஞர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை நூல் அணிந்துரை</title><content type='html'>&lt;b&gt;பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ந.வீ. விசயபாரதியின் முப்பரிமாண இலக்கியம் &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்குக் கவிதைகள் தோன்றினவோ அன்றைக்கே கவிதைகள் குறித்த  ரசனையும் தோன்றிவிட்டது எனலாம். படைப்பவன் ரசனையும் படிப்பவன் ரசனையும் ஒன்றுபடுவதுதான் கவிதை ரசனை என்பதில்லை, வேறுபடவும் செய்யும். கவிதைகளை ரசிப்பதில் பல சமயங்களில் படைப்பாளியை விஞ்சி விடுகிறான் படிப்பவன், அதாவது சுவைஞன். படைப்பவனை விட, சுவைஞனுக்கு இருக்கும் சுதந்திரம் மிகப்பெரிது. சுவைஞனுக்குள்ளே படிக்கும் குறிப்பிட்ட அந்த ஒரு கவிதை மட்டுமல்ல, அதன் முன்னர் பல நூறு ஆண்டுகளாய்த் தோன்றிய கவிதைகளும் அதன் ரசனைகளும் பொதிந்து கிடக்கின்றன. தமிழ் போன்ற மூவாயிரம் ஆண்டு மூத்த இலக்கிய இலக்கண வளங்கள் மிகுந்த செம்மொழியில் எழுதப்படும் கவிதைகளை வாசிக்கும் ஒரு சுவைஞனுக்கு அம்மொழியின் நீண்ட கவிதைப் பாரம்பரியமே ஒரு பெரும் பலமாகவும் சில சமயங்களில் பலவீனமாகவும் மாறிவிடுவது இயற்கை.&lt;br /&gt; &lt;br /&gt;சிங்கைக் கவிஞர் அன்புத் தோழர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை என்ற இந்நூலும் அப்படியொரு சுவைஞனின் ரசனை சார்ந்ததொரு படைப்புதான். இந்நூலில் அமைந்துள்ள எட்டுக் கட்டுரைகளும் கிட்டத்தட்ட ஒரே தொனியில் படைப்பாளியின் படைப்பாற்றலைச் சிலாகித்து உச்சிமோர்ந்து கொள்கின்றன. சங்க இலக்கியங்கள் தொடங்கிக் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் எனக் கவிஞர் வைரமுத்துவின் படைப்புகள் வரை நூலின் கட்டுரைகள் தமிழிலக்கிய நெடும்பரப்பின் அடி முதல் நுனிவரை தொட்டுத் தடவிச் செல்வது நூலின் சிறப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;நூலின் எட்டுக் கட்டுரைகளும் பெருவழுதி (நற்றிணை), பிசிராந்தையார் (புறநானூறு), இளங்கோவடிகள் (சிலப்பதிகாரம்), கம்பர் (இராமகாதை), முக்கூடற் பள்ளு ஆசிரியர், பாரதியார், பாரதிதாசன், வைரமுத்து என்னும் எட்டுக் கவிஞர்களின் புலமைக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பதை நோக்கி நூலுக்குப் பெயராக, புலமைக்கு மரியாதை என்று ஆசிரியர் பெயரிட்டிருப்பது சாலப் பொருத்தமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் இலக்கியப்பாடல், அதன் பின்னணி, பாடலின் கருத்து, பாடல் சொற்பொருள் நுட்பம், பின்னர் அந்தக் கவிதையின் நயம் என்று ஒவ்வொரு கட்டுரையும் இலக்கியக் கட்டுரைகளாக விரிந்து செல்லும் இந்நூலின் ஊடாக ஆசிரியர், ஒரு கதைசொல்லி போல் இலக்கியக் காட்சிகளைக் கதைகளாகவும் விவரித்துச் சொல்லும் பாங்கு இந்நூலின் தனியழகு என்றே குறிப்பிட வேண்டும். சான்றாக நற்றிணை குறித்த முதல் கட்டுரையில் இடம்பெறும் பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் விடிகிறது, &lt;br /&gt;முதல் நாள் தலைவனைச் சந்தித்த ஆனந்த நினைவுகளில் மூழ்கியபடி தலைவி வீட்டில் இருக்கும்போது அவளது அன்னை யதார்த்தமாக அவளைப் பார்க்கிறாள்;. &lt;br /&gt;ஏதோ அவளிடம் மாற்றம் தெரிவதாக உணர்கிறாள்;, உற்றுற்றுப் பார்த்தபின் அவளது கூந்தலில் வண்டுகள் மொய்ப்பதைப் பார்த்து விடுகிறாள். மிக நெருங்கிப்போய்க் கவனித்தபோது அவளிடமிருந்து மலரின் நறுமணம் வீசுவதையும்  உணர்கிறாள். &lt;br /&gt;'இப்படிப்பட்ட மணம்  இதற்குமுன்  உன்னிடம் இருந்ததில்லையே” என்று தலைவியிடம் சந்தேகத்துடன் தாய் கேட்க, தலைவி சில கணம் தடுமாறிப் போகிறாள்;, குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்புடன் தாயின் முகம் பார்க்கத் தைரியம் இல்லாமல் ‘தோள்கொடுப்பாள் தோழி’ என்ற நம்பிக்கையுடன் தோழியைப்  பார்க்கிறாள். (நற்றிணையில் மொழிநயம்)&lt;br /&gt;இப்படி ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கதையைச் சுவைபட விரித்துச் சொல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt; கட்டுரைகளின் நடுவே கதைகள் எனப் புதியநடைபோடும் விசயபாரதியின் படைப்புக்கு மேலும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது அவரின் கவிதை மயப்பட்ட மொழிநடை. ஆசிரியர் இயல்பாகவே ஒரு கவிஞர் என்பதாலும் சொல்லப்படும் உள்ளடக்கத்தின் சார்பாலும் அவரின் உரைநடை அப்படியே கவிதையாக நெகிழ்ந்து குழைந்து வெளிப்படுகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மணம் வீசும் பூக்களின் சாறுபிழிந்து &lt;br /&gt;பக்குவப்படுத்தப்பட்ட வாசனை திரவியங்கள், &lt;br /&gt;சந்தனச் சிற்பத்துக்கு சதை பொதித்து &lt;br /&gt;உயிரூட்டி உலவ விட்டதைப்போல &lt;br /&gt;பேரழகுப் பெண்கள் &lt;br /&gt;வல்லமை மிக்க சொல்லாற்றல் கொண்ட அறிஞர்கள், &lt;br /&gt;இசையும் இலக்கியமும் &lt;br /&gt;இசைந்து இசைக்கக்கூடிய பாடகர்கள், &lt;br /&gt;மலரினும் மென்மையான மார்புடைய அழகிகள்&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சான்று காட்டப்பட்ட பகுதி அமளியில் அனிச்சமலர் என்ற இரண்டாம் கட்டுரையில் இடம்பெற்றுள்ள உரைநடைப் பகுதி. உரைநடையை உடைத்துப் போட்டது நான். படித்துப்பாருங்கள் உரைநடையே கவிதையாய், கவிதையே உரைநடையாய் நம்மை மயக்கும். விசயபாரதியின் சொல்லாற்றல் அப்படிப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; இலக்கியத்தின் மூன்று பரிமாணங்களாகிய கவிதை, கதை, கட்டுரை என்ற மூன்றையும் தன்னகத்து அடக்கிய புலமைக்கு மரியாதை எனும் இத்தொகுப்பு ஒரு முப்பரிமாண இலக்கியம் என்பதில் வியப்புக்கு இடமேது.&lt;br /&gt;&lt;br /&gt; நூலாசிரியரின் மொழியாளுமை வியப்பளிக்க வைக்கிறது. மகாகவி பாரதி சொன்னது போல் ‘சொல் புதிது சுவை புதிது’ என அனைத்திலும் புதுமைநலம் விளைந்ததொரு மொழியாளுமை கொண்டு தம் படைப்பால் படைப்பின் உத்தியால் பண்டைய இலக்கியங்களுக்குப் புதுமெருகு ஏற்றியுள்ளார் கவிஞர் விசயபாரதி.&lt;br /&gt; &lt;br /&gt;சான்றுக்கு ஒன்றிரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒன்று:&lt;/b&gt;&lt;br /&gt;உச்சக் காட்சியில் கண்ணகியின் கோபத்தைக் காடுகொள்ளாத சாதுவின் மிரட்சியாய்க்  காட்டியது  இன்னொரு  புரட்சி (அமளியில் அனிச்சமலர்)&lt;br /&gt;கண்ணகி ஒரு சாது! அமைதியே வடிவானவள், சிலம்பின் வழக்குரை காதையில் அவள் கொள்ளும் சத்திய ஆவேசம், அதனால் மதுரையம்பதிக்கும் மன்னனுக்கும் மக்களுக்கும் நேர்ந்த கதி என்ற காப்பியக் கதையோட்டங்கள் அனைத்தையும் உள்வாங்கும் போக்கில், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழியை ஆசிரியர் தம் மொழிநடையின் இடையில் பிசைந்து தந்துள்ள செய்நேர்த்தியைக் கவனிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இரண்டு:&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் மொழியின் சிறப்பே அம்மொழி காலத்திற்கு ஏற்பத் தன் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டும், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும் இயைந்து கொடுத்து வளர்ந்த எளிமைதான். (இலக்கியம் இனிக்கிறது) &lt;br /&gt;&lt;br /&gt;‘காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டும்’ என்ற சொல்லாட்சியில் வெளிப்படும் படிமத் தன்மை நூலாசிரியரின் கவித்துவ வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. செத்தொழிந்த சில செம்மொழிகளைப் போலில்லாமல் தமிழ் இன்றும் சீரிளமைத் திறத்தோடு இருப்பதற்குக் காரணம் என்ன? என்ற உலக வியப்புக்கு ஓர் உண்மைக் காரணத்தை உரத்துச் சொல்கிறார். தமிழ், காலச் சூரியனின் கதகதப்பில் தன்னை உலர்த்திக் கொண்டது என்று. உரைநடையிலும் படிமங்களை உலவவிட்ட ஆசிரியரின் நுட்பம் பாராட்டத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt; தமிழ் இலக்கியங்களின் மீது அதிலும் குறிப்பாக நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்களின் மீது நூலாசிரியருக்கு இருக்கும் நாட்டம் அளப்பரிது. ‘தமிழ் வாழ்க!’ என்று மேடைகளில் முழங்கிவிட்டுச் செயலற்ற வாய்ப்பேச்சு வீரர்களாகத் தமிழர்கள் முடங்கிப் போய்விடக் கூடாது. &lt;br /&gt;&lt;br /&gt;“தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும் போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாகத் தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்” (கண்ணின் கடைப்பார்வை)&lt;br /&gt;என்று தமிழ்வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான அறிவுரைகளை வழங்குவதோடு தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைக்கின்றார் நூலாசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;‘தமிழ் வாழ்க’ என்ற மேடை முழக்க வரிகள் இன்றைய தேவையில்லை. உண்மையில் தமிழை வாழ வைக்க எண்ணுபவர்கள் செய்ய வேண்டிய அவசரத்தேவை ஒன்று இப்போது இருக்கிறது. புத்தகக் கடைகளின் அலமாரிகளில் அழுக்குப்படாமல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற பழந்தமிழ் அறிஞர்களின் நூல்களைக் காசுகொடுத்து வாங்காவிட்டால்கூடப் பரவாயில்லை; அதே நிலையில் அரசாங்க நூலகங்களின் அலமாரிகளில் ஆய்வு மாணவர்களால் மட்டுமே அதுவும் தேர்வுக்கான தேவையின்போது மட்டுமே எடுத்துப் படிக்கப்படுகிற நிலைமை மாற்றப்பட வேண்டும்; அதற்குத் தமிழர்கள் பழந்தமிழ் நூல்களை நூலகங்களிலிருந்து இரவல் வாங்கியாவது படிக்கவேண்டும் என்பது நம் பணிவான வேண்டுகோள். (கண்ணின் கடைப்பார்வை)&lt;br /&gt;சிங்கைக் கவிஞர் விசயபாரதியின் இவ்வேண்டுகோள். தாய்த்தமிழகத்தின் சூழலுக்கும் பொருந்திய வேண்டுகோளே என்பதை நாம் மறுக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt; மொத்தத்தில் புலமைக்கு மரியாதை எனும் இக்கட்டுரைத் தொகுப்பு தமிழுக்குப் புது வரவு என்பதோடு புதுமையான வரவு. நூலாசிரியர் விசயபாரதியின் நோக்கம் தெளிவாய் உள்ளது. இது படைப்பிலக்கியமில்லை. இலக்கிய ஆராய்ச்சியுமில்லை. ரசனை, இலக்கிய ரசனை, ஒரு சுவைஞன் சுவைத்த தமிழ் அமுதின் சில துளிகள் இவை. உங்கள் முன் படைக்கப்பட்டதன் நோக்கம்,&lt;br /&gt;“தமிழிலக்கியத்தின் மீதான நம் தேடல் தீவிரமாகும்போதுதான் தமிழின் தேக்கநிலை மாறி ஊக்கநிலை உருவாகும் அந்த நிலை உருவாக நம் அறிவுப்பசி விரிவாக தமிழிலக்கிய வாசிப்பு ஒன்றே சரியான தீர்வாகும்.”&lt;br /&gt;என்று ஆசிரியர் சொன்னதுபோல் தமிழின் தேக்க நிலை மாற வேண்டும் ஊக்க நிலை உருவாக வேண்டும் என்பதுதான். இந்நூல் நிச்சயம் அதற்குத் துணைபுரியும். நூலாசிரியர் ந.வீ.விசயபாரதிக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-1804076237484866858?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/1804076237484866858/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=1804076237484866858&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1804076237484866858'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/1804076237484866858'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/09/blog-post.html' title='சிங்கப்பூர் கவிஞர் ந.வீ. விசயபாரதியின் புலமைக்கு மரியாதை நூல் அணிந்துரை'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-8922869485645193652</id><published>2010-08-30T23:12:00.000+05:30</published><updated>2010-08-30T23:12:35.301+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுச்சேரி வரலாறு'/><title type='text'>பிரஞ்சிந்திய விடுதலை வீரர் மக்கள் தலைவர் வ.சுப்பையா -பகுதி-1</title><content type='html'>&lt;b&gt;பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மக்கள் தலைவர்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; 1987 இல் இந்தியாவின் 40 ஆவது சுதந்திர ஆண்டு விழாவின் போது இந்திய அரசு தேர்ந்தெடுத்து அறிவித்த தலைசிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் 97 பேரில் மக்கள் தலைவர் தோழர் வ.சுப்பையாவும் ஒருவர். மகாகவி என்றால் அது பாரதியாரையும் புரட்சிக்கவிஞர் என்றால் அது பாரதிதாசனையும் பெரியார் என்றால் அது ஈ.வெ.ராமசாமி அவர்களையும் குறிப்பது போல் மக்கள் தலைவர் என்றால் அது தோழர் வ.சுப்பையா அவர்களையே குறிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt; பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த புதுச்சேரியை விடுவித்துச் சுதந்திர பூமியாக மாற்ற மக்களைத் திரட்டிப் போராடி இந்தியத் தாயகத்துடன் இணைத்த சிற்பி தோழர் வ.சுப்பையாதான் என்பதை அவருக்கு நேர்எதிரான கொள்கை நிலையில் நிற்பவர்களும் ஒப்புக் கொள்வார்கள். எத்தனைமுறை சிறையில் இட்டாலும் நாடு கடத்தினாலும் கொண்ட கொள்கையில் உறுதியோடு நின்று கடைசிவரை போராடி வெற்றிகண்ட பெருமை அவருக்கு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தொழிற்சங்கம் கண்ட தலைவர்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; புதுவை பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தபோது தொழிற்சங்கம் அமைக்கும் அடிப்படை உரிமைகூட மறுக்கப்பட்டிருந்தது. மக்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும் நேரடியான அரசியல் போராட்டங்களில் ஈடுபடவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய நெருக்கடியான காலங்களில் தோழர் வ.சுப்பையா அவர்கள் எழுச்சியும் பொதுநலத்தில் நாட்டமும் மிக்க இளைஞர்களை, மாணவர்களை ஒருங்கிணைத்து இளைஞர் சங்கத்தினை அமைத்துச் சமுதாயத்திற்குப் பாடுபட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தம் இளமைக்காலம் முதலே தேச நலனில் அக்கறை கொண்டு இந்திய அளவில் நடைபெறும் சுதந்திரப் போராட்டங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காந்தியடிகளும் மக்கள் தலைவரும்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தோழர் வ.சுப்பையா அவர்கள் 1933 இல் மகாத்மா காந்தியடிகள் அமைத்த அரிசன சேவா சங்கத்தின் கிளை அமைப்பு ஒன்றைப் புதுவையில் தொடங்கி அதன் செயலராக இருந்து தீண்டாமையை ஒழிக்கவும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும் பாடுபட்டார். 1934 பிப்ரவரி 17 இல் மிகுந்த முயற்சி மேற்கொண்டு மகாத்மாவைப் புதுவைக்கு அழைத்து வந்தார். முதன்முதலில் காந்தியடிகளைப் புதுவைக்கு அழைத்துவந்த பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt; தோழர் வ.சுப்பையா அவர்கள் அரிசன சேவா சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டுப் பணியாற்றியதால் சமூகத்தின் அடித்தள மக்களின் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளை நன்கு புரிந்துகொள்ள முடிந்தது. அடித்தள மக்களில் பலர் பஞ்சாலைத் தொழிலாளர்களாக இருந்தமையால், அன்றைய சூழலில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் பிரஞ்சு ஆலை முதலாளிகளால் உரிமைகள் ஏதுமற்ற அடிமைகள்போல் நடத்தப்படுவது கண்டு மனம் வெதும்பினார். ஆலைத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கம் பற்றியும் தொழிலாளர் உரிமை பற்றியும் போதித்துக் கிராமங்கள்தோறும் தொழிலாளர் வர்க்கத்தை ஒன்று திரட்டினார். ஆலையில் இரகசியமாகத் தொழிற்சங்கம் ஏற்படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சுதந்திரம் இதழைத் தொடங்கினார்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இதே காலக்கட்டத்தில் 1934 ஜூன் முதல் ‘சுதந்திரம்’ என்ற மாதப் பத்திரிக்கையைத் தொடங்கி இதழ்பணியின் வழியாகத் தொழிலாளர் நலன்களைப் பேணினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பஞ்சாலைப் போராட்டங்கள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1935, 36 களில் புதுவைப் பஞ்சாலைகளில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்திற்கும் வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து செயலாற்றினார். தொழிலாளர் போராட்டங்களின் விளைவாக வேலைநேரம் குறைக்கப்பட்டது. கூலி உயர்வும் வேலை உத்திரவாதமும் வழங்கப்பட்டன. ஆனால் தொழிற்சங்க உரிமை மட்டும் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;1936 இல் தொழிற்சங்க உரிமை கோரி மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களும் இணைந்து நடத்திய போராட்டத்தை ஒடுக்க 1936 ஜூலை 30 அன்று பிரஞ்சு ஏகாதிபத்யம் ராணுவத்தின் துணையோடு அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளின் கவனத்தைப் புதுச்சேரியின் பக்கம் திருப்பியது. இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பெருமை தோழர் வ.சுப்பையா அவர்களையே சாரும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;எட்டு மணி நேர வேலை, தொழிற்சங்க உரிமை:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தொழிலாளர்கள் மீதான அடக்குமுறை, துப்பாக்கிச் சூடு போன்ற பிரச்சனைகளைப் பிரஞ்சு அரசோடு பேசித்தீர்க்க பண்டித நேருவின் ஆலோசனையின் பேரில் அவரின் அறிமுகக் கடிதத்தோடு தோழர் வ.சுப்பையா 1937 மார்ச் 6 இல் பிரான்சுக்குச் சென்றார். பிரஞ்சு அரசோடு இப்பிரச்சனை குறித்து விவாதித்தார். அதன் விளைவாக 1937 ஏப்ரல் 6 இல் பிரஞ்சு-  இந்தியாவிற்கான தொழிற்சங்கச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 8 மணிநேர வேலையும் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையும் வழங்கப்பட்டன. ஆசிய நாடுகளிலேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலாக அமுலாக்கப்பட்டது. அத்துடன் தொழிலாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம், ஓய்வுக்கால ஊதியம், பெண் ஊழியர்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் சமூகப்பயன் அளிக்கும் திட்டங்களும் வரையறுக்கப்பட்டன. இத்தணைச் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-8922869485645193652?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/8922869485645193652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=8922869485645193652&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8922869485645193652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8922869485645193652'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/08/1.html' title='பிரஞ்சிந்திய விடுதலை வீரர் மக்கள் தலைவர் வ.சுப்பையா -பகுதி-1'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-8854093126724283844</id><published>2010-08-30T23:08:00.000+05:30</published><updated>2010-08-30T23:08:48.937+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புதுவை வரலாறு'/><title type='text'>பிரஞ்சிந்திய விடுதலை வீரர் - மக்கள் தலைவர் -வ.சுப்பையா -பகுதி-2</title><content type='html'>&lt;b&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/b&gt;&lt;br /&gt;தமிழ் இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி- 605 008&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;சிறைவாழ்க்கையும் தலைமறைவு வாழ்க்கையும்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; 1938 ஆம் ஆண்டு மத்தியில் பிரஞ்சு அரசானது புதுவையில் எழுந்த தேசிய விடுதலை இயக்கப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் சுப்பையாவைப் பிரஞ்சு எல்லையில் கைது செய்யும் ஆணையைப் பிறப்பித்தது. சென்னையில் பிரிட்டிஷ்  எல்லையில் கைது செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. ஆதலால் 1938 ஜூன் முதல் தோழர் வ.சுப்பையா அவர்கள் தலைமறைவானார். ஆயினும் சென்னையில் கைது செய்யப்பட்டு 1938 டிசம்பரில் மூன்று வாரகாலம் சிறை வைக்கப்பட்டார். பின்னர் பிரிட்டிஷ் அரசானது சுப்பையாவைப் பிரஞ்சு அரசிடம் ஒப்படைத்தது. 1939 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 11 வரை புதுவைச் சிறையில் வைக்கப்பட்டார். அவர் மீது தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யென நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.&lt;br /&gt; &lt;br /&gt; 1939 செப்டம்பர் 1 இல் இரண்டாம் உலகப்போர் மூண்டபின்னர் பிரிட்டி~; அரசானது தோழர் வ.சுப்பையா பொதுக்கூட்டங்களில் பேசக்கூடாது என்னும் தடையை விதித்தது. ஆயினும் அவர் தடையை மீறிப் பேசினார். அதனால் 1941 ஜனவரியில் தஞ்சாவூரில் பிரிட்டிஷ்  அரசால் கைது செய்யப்பட்டு 1942 செப்டம்பர் முதல் வேலூர் மத்தியச் சிறைச்சாலையில் அரசியல் கைதியாகக் காவலில் வைக்கப்பட்டார்.&lt;br /&gt;1944 ஏப்ரல் 18 இல் பிறப்பிக்கப்பட்ட ஆணைப்படி தோழர் வ.சுப்பையா பிரஞ்சு எல்லையிலிருந்து நாடு கடத்தப்பட்டார். பின்னர் பிரான்சு விடுதலை பெற்று பாரிசில் புதிய ஆட்சி நிறுவப்பட்டவுடன் 1945 செப்டம்பர் 6 இல் சுப்பையா மீதிருந்த இத்தடை நீக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;விடுதலைக்கான தேசிய ஜனநாயக முன்னணி:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுவையில் முழு அரசியல் தன்னாட்சி மாற்றம் தேவை என்பதை உணர்ந்த தோழர் வ.சுப்பையா அவர்கள் அந்நிய ஏகாதிபத்யத்திற்கு எதிரான அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற ஒரு பேரியக்கத்தைத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;1946 இன் இறுதியில் தோழர் சுப்பையா அவர்கள் பிரஞ்சுப் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 இல் பிரான்சு சென்றார். 1947 ஜூலை இறுதிவாக்கில் பண்டித நேரு அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுவை விடுதலை இயக்கச் செயல் திட்டம் குறித்து விவாதிக்க இந்தியா திரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;1947 ஆகஸ்ட் 15 இல் புதுச்சேரியின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது. 1948 இறுதியில் பிரஞ்சு அரசானது தோழர் சுப்பையா மீது பலதரப்பட்ட கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைக் கைது செய்ய முயன்றது. இதையறிந்த சுப்பையா தலைமறைவாக இருந்துகொண்டே விடுதலை இயக்கத்தை வழிகாட்டி நடத்தி வந்தார். 1950 ஜனவரி 15 அன்று பிரஞ்சு அரசின் கைக்கூலிகளாலும் போலீசாலும் தோழர் சுப்பையா அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. ஆயினும் தலைமறைவாக இருந்துகொண்டே புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திக் கொண்டிருந்தார் சுப்பையா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;புதுச்சேரி விடுதலை 1954 நவம்பர்1:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; 1954 ஏப்ரல் 4 இல் தோழர் சுப்பையா அவர்கள் புதுடில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அக்கூட்டத்தில் புதுச்சேரி மக்களுக்கு இறுதிக்கட்டப் போராட்ட அறைகூவல் விடுத்தார். 1954 ஏப்ரல் 7 முதல் இறுதிக்கட்டப் போராட்டம் பெரும் வலிமை பெற்றது. அதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியாமல் பிரஞ்சு ஏகாதிபத்யம் இந்தியாவை விட்டு வெளியேறியது.&lt;br /&gt;&lt;br /&gt; 1954 நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாளின் போது தோழர் சுப்பையா அவர்கள் கோட்டக்குப்பத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாகப் புதுச்சேரி எல்லைக்குள் நுழைந்தார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டு தோழர் வ.சுப்பையா அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளித்தார்கள். புதுச்சேரியின் வரலாற்றில் இந்தநாள் ஒரு மறக்க முடியாத பொன்னாள் ஆக அமைந்தது. உண்மையான மக்கள் தலைவர் இவர்தான் என வரலாறு தன் ஏட்டில் குறித்துக் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;புதுச்சேரி விடுதலைக்குப் பின்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; 1955 இல் புதிதாக அமைக்கப்பட்ட புதுவைச் சட்டமன்றத்திற்குத் தோழர் வ.சுப்பையா அவர்கள் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டார். 1969 முதல் 1977 வரை புதுவைச் சட்டமன்றத்தில் இருமுறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt; தோழர் வ.சுப்பையா அவர்களின் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்க்கையில் மகாத்மா காந்தி, பண்டித நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, வி.வி.கிரி, நேதாஜி சுபா~; சந்திர போஸ், சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாக்கிரு~;ணன், வினோபாஜி, பெருந்தலைவர் காமராசர், திரு.வி.க., பெரியார் மற்றும் பல தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப்பணியும் சமுதாயப் பணியும் ஆற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;தோழர் வ.சுப்பையா அவர்களின் தனிப்பெரும் சிறப்புகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தோழர் வ.சுப்பையா அவர்கள் புதுவை மண்ணிலிருந்து புறப்பட்ட போராட்ட வீரர், பாட்டாளிகளின் தோழன், மிகச் சிறந்த தேசபக்தர், சாமான்யர்களுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த சமூகநீதிக் காவலர், இந்திய தேசத்தலைவர்களுக்கெல்லாம் உற்ற நண்பர், மொத்தத்தில் தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்.&lt;br /&gt;&lt;br /&gt; பாரதத்தின் விடுதலை வரலாற்றிலும் புதுவையின் விடுதலை வரலாற்றிலும் இரண்டறக் கலந்து நிற்கும் இணையற்ற வீரர். ஆங்கில ஏகாதிபத்யம், பிரஞ்சு ஏகாதிபத்யம் என்ற இரண்டு ஏகாதிபத்யங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட ஒரே விடுதலை வீரர் என்ற பெருமைக்குரியவர் தோழர் வ.சுப்பையா அவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;மக்கள் தலைவரின் பன்முகப்பட்ட பணிகள்:&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt; தோழர் வ.சுப்பையா அவர்களின் பன்முகப்பட்ட பணிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில், குறிப்பாகப் புதுவையின் விடுதலைப் போருக்கு வித்திட்டு வளர்த்து விடுதலையை முழுமைப்படுத்திப் பெற்றுத்தந்த மிகச் சிறந்த தேசபக்த விடுதலை மறவர். 1934 ஆம் ஆண்டிலேயே சுதந்திரம் என்ற பத்திரிக்கையை உருவாக்கித் தொடர்ந்து நடத்தி முற்போக்கு இதழ்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்ந்த சிறந்த பத்திரிக்கையாளர். அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் என்ற தேசிய அமைப்பில் திறமை மிக்க தலைவர். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். சமூக, பொருளாதார, அரசியல், இலக்கியம் ஆகிய துறைகளில் எழுத்தாற்றலும் நாவன்மையும் ஒருங்கே கொண்ட சிந்தனையாளர். அரசியலில் பல பெரும் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நிர்வாகம் செய்த ஆற்றல் மிக்க நிர்வாகி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களால் மதித்துப் போற்றப்படும் மக்கள் தலைவர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5723249522054414571-8854093126724283844?l=nailango.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nailango.blogspot.com/feeds/8854093126724283844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5723249522054414571&amp;postID=8854093126724283844&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8854093126724283844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5723249522054414571/posts/default/8854093126724283844'/><link rel='alternate' type='text/html' href='http://nailango.blogspot.com/2010/08/2.html' title='பிரஞ்சிந்திய விடுதலை வீரர் - மக்கள் தலைவர் -வ.சுப்பையா -பகுதி-2'/><author><name>முனைவர் நா.இளங்கோ</name><uri>http://www.blogger.com/profile/14601594721433131817</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_vmRKnj-PgVg/SLgqyUWHJvI/AAAAAAAAADY/PoQOSYtL3iw/S220/001125-Small.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5723249522054414571.post-956024163210175394</id><published>2010-08-11T07:30:00.002+05:30</published><updated>2010-08-11T07:39:48.691+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்க இலக்கிய ஆய்வு'/><title type='text'>முதல் ஆற்றுப்படையின் நாயகன் சோழன் கரிகாலன்</title><content type='html'>&lt;strong&gt;முனைவர் நா.இளங்கோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணைப் பேராசிரியர்&lt;br /&gt;புதுச்சேரி-8&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சோழன் கரிகால் பெருவளத்தான்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆற்றுப்படை இலக்கியங்களில் காலத்தால் முந்தியது என்று கருதப்படும் பொருநராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகால் பெருவளத்தான் ஆவான். இவனே பத்துப்பாட்டினுள் ஒன்பதாவதாகத் திகழும் பட்டினப் பாலைக்கும் தலைவனாவான். அந்நூலைப் பாடியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமாவளவன், கரிகால் பெருவளத்தான் என்னும் பெயர்களை உடைய கரிகாலன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இளஞ்சேட்சென்னி என்பானின் மகன். இவன்தாய் அழுந்தூர் வேண்மாள் ஆவாள். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம்வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாகக் கால்கள் கருகிட இவனுக்கு இப்பெயர் வழங்கலாயிற்று என்றும் பகைவரால் தீயிட்டுக் கொல்லக் கருதிய போது கால் கரிந்த தீக்காயத்துடன் தப்பி உயிர்பிழைத்துக் கரிகாலன் ஆனான் என்றும் சிலர் கரிகால
